நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நாள் முழுவதும் சோர்வு ஏற்படாமல் இருக்க உதவும் ‘மேஜிக்’ டிரிங்க்ஸ்........

 தூக்கமின்மை, அளவிற்கு அதிகமான வேலை பளு, போதுமான உடல் பயிற்சி இல்லாதது அல்லது முறையற்ற உணவு ஆகியவை வெகு விரைவில் சோர்வடையச் செய்யும்.


  • உடல் பலவீனத்தையும் சோர்வையும் நீக்கும் ஆரோக்கியமான பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
  • எப்போது பார்த்தாலும் சோர்வாக இருந்தால் நமக்கே எரிச்சல் வரும்.
  • நமது உடலில் சோர்வு இருந்தால் அன்றாட வேலைகளை செய்து முடிப்பதே பிரச்சனையாக இருக்கும்.

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவே எல்லோரும் விரும்புவார்கள். எப்போது பார்த்தாலும் சோர்வாக இருந்தால் நமக்கே எரிச்சல் வரும். நாள் முழுவதும் நமது உடலில் சோர்வு இருந்தால் அன்றாட  வேலைகளை செய்து முடிப்பதே பெரும் பிரச்சனையாக இருக்கும். இந்த சோர்வுக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். தூக்கமின்மை, அளவிற்கு அதிகமான வேலை பளு, போதுமான உடல் பயிற்சி இல்லாதது அல்லது முறையற்ற உணவு ஆகியவை உங்களை வெகு விரைவில் சோர்வடையச் செய்யும்.இந்நிலையில் உடல் பலவீனத்தையும் சோர்வையும் நீக்கும் ஆரோக்கியமான பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

கீழ்கண்ட ஜூஸ் வகைகளில் ஒன்றை எடுத்துக் கொள்வதன் மூலம் சோர்வை விரட்டலாம். 

பிரெஷ் ஜூஸ்கள்

ஆப்பிள், சாத்துக்குடி அல்லது ஆரஞ்சு பழச்சாறுகள் உங்களை நால் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். ஆரஞ்சு பழச்சாறு அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

காய்கறி ஜூஸ் 

காய்கறி ஜூஸ் தயாரிக்க உங்களுக்கு தயிர், வெள்ளரி மற்றும் தக்காளி தேவைப்படும். இதைச் செய்ய, முதலில் தயிரை தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளவும், பின்னர் அதில் துருவிய வெள்ளரி தக்காளியை சேர்க்கவும். கல் உப்பு மற்றும் வறுத்த சீரகம் சேர்த்து குடிக்கவும். வெள்ளரிகளில் வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் மற்றும்  நீர் சத்து உள்ளது

இளநீர்

இளநீர் என்பது வெயில் காலம் மட்டுமன்றி அனைத்து பருவநிலைகளிலும் அருந்தலாம். காரணம் அதில் உள்ள கனிம சத்துக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன. உடலுக்கு சிறந்த பானங்களில் ஒன்று இளநீர். இது உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறது.  இளநீரில் சர்க்கரையின் அளவு அதிகம் என்ற தேவையில்லாத பயம் தேவையில்லை. ஏனென்றால்,  நாம் அருந்தும் மற்ற சாஃப்ட் ட்ரிங்குகளை ஒப்பிடும் போது மிக மிக குறைத அளவே இருக்கும். இளநீரில் கார்போஹைட்ரேட்டுகளும் குறைவாக இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. 


ALSO READ : குழந்தைகளின் மனச்சோர்வை குறைக்கும் உணவுகள் ...........

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!