நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தீவில் ஒடும் தீப்பிழம்பு ,வைரலாகும் வீடியோ - எங்கு தெரியுமா ?

 ஹவாய் தீவில் உள்ள கிலவியா எரிமலை வெடித்ததில், தீ குழம்புகள் ஆறுபோல் ஓடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பார்ப்பதற்கு தங்கம் உருகி ஓடுவதைப் போல் இருக்கிறது.


எரிமலை தீ பிழம்பு

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், சுவரஸ்யமான மற்றும் வித்தியசமான வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகிறது.

தொழில் நுட்ப வளர்ச்சி இன்றைக்கு கையடக்க பொருடகளாக மாறிவிட்ட நிலையில், உலகின் எட்டு திசைகளின் எல்லை முழுவதும் பயணிக்கும் பயணிகள் தாங்கள் காணும் இயற்கை அழகினை தான் கண்டு ரசிப்பதோடு அதனை தனது மொபைல் போன் மற்றும் கொண்டு செல்லும் கேமராவில் படம் பிடித்தும், வீடியோ எடுத்தும் பகிர்ந்து வருவதை வாடிக்கையாக பலர் கொண்டுள்ளனர்.

இதில், சமீபத்தில் வைரலாகிவரும் ஒரு வீடியோ காண்போர் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஹவாய் தீவில் உள்ள கிலவியா எரிமலை வெடித்து வேகமாக ஓடும் எரிமலைக் குழம்பின் வீடியோ மிகவும் பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் வீடியோ

மிகவும் அண்மையில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், வேகமாக ஓடும் எரிமலைக் குழம்பு சிதறிக் கொண்டு ஓடுவதைப் பார்க்கையில், தங்கம் உருகி ஓடுவதைப் போல் இருக்கிறது.

இயற்கையின் அழகினைச் சொல்லும் இந்த வீடியோ மிகவும் அருகில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதால், ஒரு சிலர் ஆபத்தான முயற்சிகளை தயவு செய்து செய்ய வேண்டாம் என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள் ட்ரோன்களின் மூலம் எடுக்கப்ட்டிருக்கும் இந்த வீடியோ மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். 


ALSO READ : கடலில் சர்ப்பிங் செய்யும் நாய்கள்.. இணையதளத்தில் வைரலாகும் வீடியோ......

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!