தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
35 கிலோ மலைப் பாம்பு வறுவல்… கேரளா யூடியூபரின் வேற லெவல் அதிர்ச்சி குக்கிங் வீடியோ!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
கேரளா யூடியூபர் ஃபிரோஸ் சுட்டிபார இந்தோனேசியாவில் 35 கிலோ மலைப்பாம்பை கிரில்லில் வறுத்த குக்கிங் வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
கேரளா யூடியூபர் ஃபிரோஸ் சுட்டிபார இந்தோனேசியாவில் 35 கிலோ மலைப்பாம்பை கிரில்லில் வறுத்து குக்கிங் வீடியோவை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார். இதையே இந்தியாவில் செய்திருந்தால் இன்னேரம் சிறையில் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவில் வன விலங்குகளைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
யூடியூபில் அரசியல், சினிமா வீடியோக்களைவிட சமையல் வீடியோக்கள்தான் அதிக அளவிலான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. அதே போல, குக்கிங் வீடியோக்களை வெளியிடும் யூடியூபகர்கள் பெரிய அளவில் பிரபலமாக இருக்கிறார்கள். அதனால், குக்கிங் வீடியோ வெளியிடுபவர்கள் விதவிதமான உணவை சமைத்து வீடியோ பதிவேற்றி பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறார்கள்.
அந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த யூடியூபர் விளாக்கர் ஃபிரோஸ் சுட்டிபாரா ஒரு வித்தியாசமான வீடியோவை வெளியிட்டு குக்கிங் வீடியோ வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
குக்கிங் வீடியோக்களை வெளியிடும் பிரபல யூடியூபர் ஃபிரோஸ் சுட்டிப்பாரா தனதுயூடியூப் சேனலில் தனித்துவமான சுவை மிகுந்த உணவை சமைத்து வீடியோக்களை வெளியிடுவார். இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள ஃபிரோஸ் சுட்டிபார 35 கிலோ மலைப்பாம்பை வெட்டி, இந்திய மசாலாவைப் போட்டு கிரில்லில் வறுத்துக் காட்டி அதிர்ச்சி அளித்துள்ளார்.
பாம்பை சமைப்பதற்கு முன், ஃபிரோஸ் இந்தோனேசியாவில் வீடியோவைப் படமாக்குவதாகக் கூறுகிறார். மேலும், இந்தியாவில் காட்டு விலங்குகளைக் கொல்வதும் சமைப்பதும் குற்றம் என்பதால் பார்வையாளர்கள் இதை வீட்டில் முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
இந்த வீடியோவில் ஃபிரோஸ் சுட்டிபார, தனது நண்பருடன் ஒரு பிளாஸ்டிக் பேஸ்கட்டில், ஒரு பெரிய மலைப்பாம்பை எடுத்து வருகிறார். அதை, ஒரு இந்தோனேசியரை வைத்து வெட்டி தோலை உரித்து, கரியை எடுத்து, இந்திய மசாலாவைத் தடவி, கிரில்லில் வைத்து வறுக்கிறார்கள்.
இந்த வீடியோ, குக்கிங் வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. ஆனால், இது போல, மலைப்பாம்பை கிரில் செய்ய யாரும் முயற்சி செய்ய வேண்டாம். ஏனென்றால், இந்தியாவில் பாம்பு, மலைப்பாம்பு போன்றவிலங்குகளைக் கொல்வது என்பது தடை செய்யப்பட்டுள்ளது. அத்தகைய செயலில் ஈடுபட்டால் நிச்சயம் சிறை தண்டனை கிடைக்கும். அதனால், ஃபிரோஸ் சுட்டிபார இதை யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
ஃபிரோஸ் 35 கிலோ மலைப்பாம்பை வெட்டி தோலை நீக்கி சுத்தம் செய்து இந்திய மசாலாவைத் தடவி கிரில்லில் வறுத்து எடுத்து மிகப் பெரிய வாழை இலையில் வைக்கிறார். அதை அங்கே உள்ள இந்தோனேசியர்களும் சில இந்தியர்களும் மிகவும் நன்றாக இருக்கிறது என்று சாப்பிடுகிறார்கள். குக்கிங் வீடியோவை வேற லெவலுக்கு எடுத்துச் என்றுள்ள ஃபிரோஸின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 1,67,000 பேர் லைக் செய்துள்ளனர். 7,000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
தொடர் இருமல், தொண்டைப்புண், தொண்டை வீக்கம், தாடை வலி, தலைவலி, தலைபாரம் , மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும். குளிர் அல்லது மழைக்காலம் வந்தாலே சளி, தொண்டை பிரச்சனைகள் வந்துவிடும். அப்படி சளி சேர்ந்துவிட்டாலே குறைந்தது 7 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நாம் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலம் என்பது நெருக்கடியான பருவநிலை எனலாம். அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம் , எதையும் சாப்பிட முடியாது , கண்ணங்கள் , தாடைகளில் வலி என பல அறிகுறிகள் இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட முடியாது. இவ்வாறு தொண்டையில் சளி கட்ட என்ன காரணம் தெரியுமா..? அதாவது குளிர்காலத்தில் காற்றின் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது சைனஸ் பிரச்சனை உருவாகிறது. இந்த பாக்டீரியாக்கள் சைனஸ் அறைக்குள் சென்று சளி சவ்வுகளை வீங்க வைத்து அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால்...
நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் மிகவும் பயன்படும். ஆரோக்கியமான உணவு மற்றும் சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். தொப்பையை குறைக்க மூன்று சிறந்த பயிற்சிகள்: 1. இரு கால்களையும் நீட்டி செய்யும் பயிற்சி முதலில்...
பசிக்குது ஆனா கையில் காசில்லையா? அப்போ இலவசமாகவே பிரியாணி எடுத்து சாப்பிடலாம்! பசிக்குதா எடுத்துக்குங்க..." இப்படி ஒரு போர்ட் வைக்கப்பட்டிருக்கிறது அந்த கடையில். அப்பகுதி வழியாக வருவோரும், போவோரும் கடையை பார்த்து ஒரு நிமிடம் உண்மைதானா என்று தங்களைக் கிள்ளி பார்க்கிறார்கள். அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கடையில் பார்ப்போம். கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருபவர்கள் சதீஷ், சப்ரினா தம்பதியினர். சதீஷ் திருப்பூரில் முட்டை விற்பனை கடை வைத்து வருகிறார். சப்ரினா பிஎஸ்சி சைக்காலஜி படித்திருக்கிறார். சப்ரினா தன்னுடைய வீட்டு முன்பு ஒரு சாப்பாடுக் கடை வைத்திருக்கிறார். சாலையோரமாக இருக்கும் சிறிய கடை அது. நாள்தோறும் மதியம் 12 மணிக்கு கடை திறந்தால், 3 மணி வரைதான் கடை இயங்கும். அந்த பிரியாணி கடையில், ஒரு பிளேட் பிரியாணி எவ்வளவு தெரியுமா? வெறும் 20 ரூபாய் தான். வீட்டிலேயே பிரியாணி செய்து அதை பொட்டலங்களாகக் கட்டி, கடையில் வைத்துள்ளார் சப்ரினா... அந்த ஒரு பெட்டி மீது நிறைய பிரியாணி பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். 3 மணிக்கு முன்பே அத்தனை பொட்டல...
Comments
Post a Comment