தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
35 கிலோ மலைப் பாம்பு வறுவல்… கேரளா யூடியூபரின் வேற லெவல் அதிர்ச்சி குக்கிங் வீடியோ!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
கேரளா யூடியூபர் ஃபிரோஸ் சுட்டிபார இந்தோனேசியாவில் 35 கிலோ மலைப்பாம்பை கிரில்லில் வறுத்த குக்கிங் வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
கேரளா யூடியூபர் ஃபிரோஸ் சுட்டிபார இந்தோனேசியாவில் 35 கிலோ மலைப்பாம்பை கிரில்லில் வறுத்து குக்கிங் வீடியோவை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார். இதையே இந்தியாவில் செய்திருந்தால் இன்னேரம் சிறையில் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவில் வன விலங்குகளைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
யூடியூபில் அரசியல், சினிமா வீடியோக்களைவிட சமையல் வீடியோக்கள்தான் அதிக அளவிலான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. அதே போல, குக்கிங் வீடியோக்களை வெளியிடும் யூடியூபகர்கள் பெரிய அளவில் பிரபலமாக இருக்கிறார்கள். அதனால், குக்கிங் வீடியோ வெளியிடுபவர்கள் விதவிதமான உணவை சமைத்து வீடியோ பதிவேற்றி பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறார்கள்.
அந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த யூடியூபர் விளாக்கர் ஃபிரோஸ் சுட்டிபாரா ஒரு வித்தியாசமான வீடியோவை வெளியிட்டு குக்கிங் வீடியோ வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
குக்கிங் வீடியோக்களை வெளியிடும் பிரபல யூடியூபர் ஃபிரோஸ் சுட்டிப்பாரா தனதுயூடியூப் சேனலில் தனித்துவமான சுவை மிகுந்த உணவை சமைத்து வீடியோக்களை வெளியிடுவார். இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள ஃபிரோஸ் சுட்டிபார 35 கிலோ மலைப்பாம்பை வெட்டி, இந்திய மசாலாவைப் போட்டு கிரில்லில் வறுத்துக் காட்டி அதிர்ச்சி அளித்துள்ளார்.
பாம்பை சமைப்பதற்கு முன், ஃபிரோஸ் இந்தோனேசியாவில் வீடியோவைப் படமாக்குவதாகக் கூறுகிறார். மேலும், இந்தியாவில் காட்டு விலங்குகளைக் கொல்வதும் சமைப்பதும் குற்றம் என்பதால் பார்வையாளர்கள் இதை வீட்டில் முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
இந்த வீடியோவில் ஃபிரோஸ் சுட்டிபார, தனது நண்பருடன் ஒரு பிளாஸ்டிக் பேஸ்கட்டில், ஒரு பெரிய மலைப்பாம்பை எடுத்து வருகிறார். அதை, ஒரு இந்தோனேசியரை வைத்து வெட்டி தோலை உரித்து, கரியை எடுத்து, இந்திய மசாலாவைத் தடவி, கிரில்லில் வைத்து வறுக்கிறார்கள்.
இந்த வீடியோ, குக்கிங் வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. ஆனால், இது போல, மலைப்பாம்பை கிரில் செய்ய யாரும் முயற்சி செய்ய வேண்டாம். ஏனென்றால், இந்தியாவில் பாம்பு, மலைப்பாம்பு போன்றவிலங்குகளைக் கொல்வது என்பது தடை செய்யப்பட்டுள்ளது. அத்தகைய செயலில் ஈடுபட்டால் நிச்சயம் சிறை தண்டனை கிடைக்கும். அதனால், ஃபிரோஸ் சுட்டிபார இதை யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
ஃபிரோஸ் 35 கிலோ மலைப்பாம்பை வெட்டி தோலை நீக்கி சுத்தம் செய்து இந்திய மசாலாவைத் தடவி கிரில்லில் வறுத்து எடுத்து மிகப் பெரிய வாழை இலையில் வைக்கிறார். அதை அங்கே உள்ள இந்தோனேசியர்களும் சில இந்தியர்களும் மிகவும் நன்றாக இருக்கிறது என்று சாப்பிடுகிறார்கள். குக்கிங் வீடியோவை வேற லெவலுக்கு எடுத்துச் என்றுள்ள ஃபிரோஸின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 1,67,000 பேர் லைக் செய்துள்ளனர். 7,000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பில் சலவை சோப்பு அனுப்பப்பட்டது. விண்வெளி வீரர்கள் துணிகளை துவைக்க உதவும் வகையில் ஸ்பேஸ்எக்ஸ் சலவை சோப்பை விண்வெளிக்கு அனுப்பியது புதன்கிழமையன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு ஸ்பேஸ்எக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பு அனுப்பியது. பரிசுப் பொருட்களில் சலவை சோப்பும் அனுப்பப்பட்டுள்ளது. Proctor and Gamble நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, சலவை சோப்பு விண்வெளியில் துணிகளை திறம்பட துவைக்க உதவுமா என்பதைக் கண்டறியும் ஒரு பரிசோதனையின் ஒரு பகுதி இது . விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானது. விண்வெளியின் மர்மங்களைம் ரகசியங்களையும் தெரிந்துக் கொள்வதற்காக விண்வெளி வீரர்கள் மாதக்கணக்கில் அங்கு இருக்க வேண்டியிருக்கிறது. அங்கு அவர்கள், சாப்பிடுவது, தூங்குவது போன்ற வேலைகளை செய்வது வித்தியாசமானதாக இருக்கும். பலவிதமான காரணங்களால் விண்வெளி வீரர்கள் தங்கள் துணிகளை துவைக்க முடிவதில்லை. அவர்கள் அணிந்துள்ள துணிகளைக் துவைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியில் ஒரு பகுதியா...
ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் நிறுவனம் சோஃபியின் தங்கை என கூறி ” க்ரேஸ் ” என்ற புதிய ரோபோவை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. க்ரேஸ் சுகாதார துறையில் தனது பங்களிப்பை வழங்கும் என இதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவிக்கிறது. சோஃபியா_ரோபட் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த செய்திகளை கடந்து செல்லும் பொழுதுதெல்லாம் ரோபோக்களின் வளர்ச்சி நம்மை பிரம்மிக்க வைப்பதாக இருக்கும். குறிப்பாக ஹுமனாய்ட் ரோபோக்கள் என்று அழைக்கப்படும் மனித ரோபோக்களின் வளர்ச்சி நம்பிக்கைக்கு அப்பால் பல மாற்றங்களை கண்டுள்ளது. இந்த வகை ஹுமனாய்ட் ரோபோக்கள் மனிதர்களை போலவே சிந்தித்து செயல்படும் வகையில் உருவாக்கப்படும். இவ்வகை ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில்தான் பல நிறுவனங்கள் போட்டி போட்டு ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமான ஹுமனாய்ட் ரோபோவான சோஃபியா பலரின் கவனத்தை பெற்றது. ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ”ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் “ என்ற நிறுவனம் இந்த சோஃபியாவை அறிமுகப்படுத்தியது. மனிதர்களை போலவே முக பாவனைகளை வெளிப்படுத்துவது, கேட்கும் கேள்விகளுக்கு சாதூர்யமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் பதிலளிப்...
Comments
Post a Comment