நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் புதினா சாதம் : ஸ்கூலுக்கு கட்டிக்கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.....

 புதினாவை ஏதாவதொரு வகையில் வாரம் ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் குழந்தைகளுக்கு இப்படி சாதமான செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க.


புதினா மழைக்கால தொற்றுகளுக்கு சிறந்த உணவு. எனவே புதினாவை ஏதாவதொரு வகையில் வாரம் ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் குழந்தைகளுக்கு இப்படி சாதமான செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க. ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 1/2 கப்

புதினா - 1/2 கப்

கொத்தமல்லி - 1/2 கப்

எலுமிச்சை சாறு - 1/2 tsp

இஞ்சி - 1/4 tsp (சீவியது )

பூண்டு - 3 பற்கள்

துருவிய தேங்காய் - 2 tsp

ஏலக்காய் - 1

கிராம்பு - 2

பட்டை - 1

பிரிஞ்சு இலை - பாதி அளவு

பச்சை மிளகாய் - 1

வெங்காயம் - 1

தண்ணீர் - 1 கப்

உப்பு - தேவைக்கு ஏற்ப

நெய் அல்லது எண்ணெய் - 1 tsp

கூடுதல் புதினா இலைகள் மற்றும் முந்திரி - தாளிக்க


செய்முறை :

பாஸ்மதி அரிசியை 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் சோறை பாத்திரத்தில் ஆற வைக்க வேண்டும்.

அந்த சமயத்தில் ஜாரில் புதினா, கொத்தமல்லி, எலுமிச்சஒ சாறு, இஞ்சி, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முன் கூட்டியே அரைத்து வைக்க வேண்டாம். கருத்துவிடும்.

கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி ஏலக்காய், இலை, பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து

பொன்னிறமாக வதக்கிய பின் அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்டை சேர்க்கவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.அதை 2 - 3 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.

தற்போது அந்தக் கலவையில் ஆற வைத்துள்ள சோற்றை சேர்த்து நன்குப் பிறட்டவும். உப்பு சரிபார்த்துக் கொள்ளவும்.

இறுதியாக வறுத்த முந்திரி மற்றும் ஃபிரெஷான புதினா இலைகளை சேர்த்துக் கிளரவும்.

குறிப்பு : தேவைப்பட்டால் சுவைக் கூட்ட உருளைக் கிழங்கு, பச்சைப் பட்டானியும் சேர்த்துக் கொள்ளலாம்.

சுவையான புதினா சாதம் தயார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!