நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கடலில் சர்ப்பிங் செய்யும் நாய்கள்.. இணையதளத்தில் வைரலாகும் வீடியோ......

 சர்பிங் செய்யும் போது அந்த இரண்டு நாய்களும் பயப்படாமல் முன் வந்து நிற்கும் காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


நாய்கள் இயல்பாக நீச்சல் அடிக்கும் திறன்கள் பெற்றவை. பொதுவாகவே தண்ணீரை பார்த்து அவ்வளவு பயப்படாத நாய்கள், கடலில் சர்பிங் செய்யும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவை பிஜன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இரு நாய்களுடன் கடலில் ஒருவர் சர்பிங் செய்துவரும்போது, அந்த நாய்கள் பயப்படாமல் உடன் வருவதை பார்க்க முடிகிறது. அந்த நாய்களும் விழுந்துவிடாமல் இருக்க ஒரே நிலையில் தங்களை வைத்துக்கொள்கின்றன.

ஒரு நாய் சர்பிங் செய்பவர் முதுகில் ஏறி நிற்கிறது. மற்றொரு நாய், பயப்படாமல் அந்த பலகையின் முன் வந்து நிற்கிறது. இரண்டு நாய்களும் கரையை அடைந்த உடன் துள்ளி குதித்து விளையாடி வருவதை பார்க்க முடிகிறது.

பலரும் இந்த வீடியோவை ரசித்து தங்களின் கம்மெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஒருவர், “இந்த வீடியோவை நான் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டு இருக்கிறேன். இதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை” என பதிவிட்டு உள்ளார். மற்றொருவர், “அந்த நாய்கள் கடலில் விழுந்திருந்தால், அதுவால் மீண்டும் கரைக்கு நீந்தி வர முடியுமா” என கேட்டுள்ளார். இன்னொருவர், “இது நம்பிக்கையை சார்ந்தது. அந்த மனிதர் அவரின் சர்பிங் போர்டையும், அந்த நாய்கள் அந்த மனிதரையும் நம்புவதால் அவர்கள் கடலில் விழவில்லை” என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த இன்னொருவர், “என்னால நேராக நடக்ககூட முடியாது. ஆனால் இந்த நாய்கள் நிலை தடுமாறாமல் இருக்கின்றன” என நகைச்சுவையாக எழுதியுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்த பிஜன். “அருமையான வீடியோ” என எழுதி பதிவிட்டுள்ளார்.


ALSO READ : கடலில் கண்டெடுக்கப்பட்ட ரூ.28 கோடி மதிப்புள்ள அம்பர் கிரிஸ்.. போலீசில் ஒப்படைத்த மீனவர்கள்...

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!