தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
ஆழ்கடலில் ஜெல்லிமீனின் அரியவகை இனம் கண்டுபிடிப்பு - வைரல் வீடியோ!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
நீருக்கடியில் பள்ளத்தாக்கின் நீர் நெடுவரிசை சுறுக்கப்பட்டிருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் ஒரு அங்கமாக விளங்கும் பெருங்கடலில் எண்ணற்ற அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்துள்ளன. இன்னும் கண்டறியமுடியாத சில மர்மங்களும் ஆழ்கடலில் நிகழ்ந்து வருகிறது. மேலும், நாம் இன்னும் பார்த்திராத அறிய வகை உயிரினங்கள் பல ஆழ்கடலில் வாழ்ந்து வருகின்றன.
தற்போது கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் மூலம் சில அரியவை உயிரினங்கள் குறித்து நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்தவகையில், ஜெல்லிமீன் வகையை சேர்ந்த அரிய உயிரினத்தின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இந்த ஜெல்லிமீன் ஒரு டிஸ்க் வடிவில் இருந்தது ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது. சிவப்பு நிற ஜெல்லிமீன் கடலின் மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 2,300 அடி ஆழத்தில் மிதந்து கொண்டிருந்தது. வடக்கு அட்லாண்டிக் ஸ்டெப்பிங் ஸ்டோன்ஸ் பயணத்தின் ஒரு பகுதியாக ஆராச்சியாளர்கள் ஆழ்கடலில் பயணம் மேற்கொண்ட போது இந்த மீன் கேமராவில் படம் பிடிக்கப்பட்டது. இந்த வகை இனங்கள் இதற்கு முன்னதாக இருந்தது என்பதற்கான பதிவுகள் இதுவரை இல்லை என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சமீபத்தில், தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) ஆய்வாளர்கள் நீருக்கடியில் உள்ள பள்ளத்தாக்கில் டைவ் சென்றதை விவரிக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். ஆய்வின் போது அவர்கள் கண்ட ஜெல்லிமீன் குறித்தும் NOAA விஞ்ஞானிகள் குறிப்பிட்டிருந்தனர். அந்த மீன் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டிருந்த மலர் இதழ் போன்று இருந்ததாக விவரித்தனர். இந்த வகை மீன் பொராலியா இன வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
இந்த டைவ் அறிக்கையை NOAA அமைப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியிட்டது. மேலும் நீருக்கடியில் பள்ளத்தாக்கின் நீர் நெடுவரிசை சுறுக்கப்பட்டிருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடல் நீரின் பண்புகளை நன்கு வரையறுக்கப்பட்ட புவியியல் புள்ளியின் தனித்துவமான ஆழத்தில் விவரிக்கப் பயன்படுத்தப்படும் கடல் கோட்பாட்டின் ஒரு கோட்பாடு தான் நீர் நெடுவரிசை ஆகும்.
டைவின் போது ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய டீப் டிஸ்கவர் என்ற தொலைதூரத்தில் இயங்கும் வாகனம் (ROV) சுமார் 650-க்கும் மேற்பட்ட வெவ்வேறு உயிரினங்களை படம்பிடித்ததாக கூறப்படுகிறது. அதில் தான் இந்த புதிய வகை ஜெல்லிமீன்களும் பதிவாகியுள்ளன. இது முற்றிலும் ஒரு புதிய வகை ஜெல்லிமீன்களாக இருக்க வாய்ப்பு இருப்பதாக NOAA ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். டீப் டிஸ்கவரர் 3.7 மைல் (6,000 மீட்டர்) ஆழத்திற்கு மூழ்கும் தன்மைக்கொண்டது. மேலும் உயர் வரையறை காட்சிகளைப் பதிவு செய்யும்.
மறுபுறம், NOAA பெருங்கடல் ஆய்வில் ஈடுபட்ட NOAA ஹோலிங்ஸ் ஸ்காலரான குயின் கிராசெக், 2021 வடக்கு அட்லாண்டிக் ஸ்டெப்பிங் ஸ்டோன்ஸ் பயணத்தின் டைவ் 20 ஆய்வின் மூன்றாவது கட்டத்தின் போது சுமார் 700 மீட்டர் (2,297 அடி) ஆழத்தில் காணப்படும் நீர் நெடுவரிசையில் உள்ள உயிரினங்களை குறிப்பு எடுத்து வந்துள்ளார். அப்போது தான் இந்த அதிசய உரியினத்தை கண்டறிந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் பேசியதாவது, "ஒரு ஹாலிங்ஸ் பயிற்சியாளராக, முன்னர் ஆராயப்படாத கடல் வாழ்விடங்களைப் பற்றிய நமது புரிதலை மேலும் அதிகரிக்க நான் ஆராய்ச்சி நடத்துகிறேன். எனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பட்டியலிடப்பட்ட உயிரினங்களில் ஒன்று தற்போது கண்டுபிடித்த சிவப்பு ஜெல்லிமீன்" என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பில் சலவை சோப்பு அனுப்பப்பட்டது. விண்வெளி வீரர்கள் துணிகளை துவைக்க உதவும் வகையில் ஸ்பேஸ்எக்ஸ் சலவை சோப்பை விண்வெளிக்கு அனுப்பியது புதன்கிழமையன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு ஸ்பேஸ்எக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பு அனுப்பியது. பரிசுப் பொருட்களில் சலவை சோப்பும் அனுப்பப்பட்டுள்ளது. Proctor and Gamble நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, சலவை சோப்பு விண்வெளியில் துணிகளை திறம்பட துவைக்க உதவுமா என்பதைக் கண்டறியும் ஒரு பரிசோதனையின் ஒரு பகுதி இது . விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானது. விண்வெளியின் மர்மங்களைம் ரகசியங்களையும் தெரிந்துக் கொள்வதற்காக விண்வெளி வீரர்கள் மாதக்கணக்கில் அங்கு இருக்க வேண்டியிருக்கிறது. அங்கு அவர்கள், சாப்பிடுவது, தூங்குவது போன்ற வேலைகளை செய்வது வித்தியாசமானதாக இருக்கும். பலவிதமான காரணங்களால் விண்வெளி வீரர்கள் தங்கள் துணிகளை துவைக்க முடிவதில்லை. அவர்கள் அணிந்துள்ள துணிகளைக் துவைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியில் ஒரு பகுதியா...
ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் நிறுவனம் சோஃபியின் தங்கை என கூறி ” க்ரேஸ் ” என்ற புதிய ரோபோவை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. க்ரேஸ் சுகாதார துறையில் தனது பங்களிப்பை வழங்கும் என இதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவிக்கிறது. சோஃபியா_ரோபட் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த செய்திகளை கடந்து செல்லும் பொழுதுதெல்லாம் ரோபோக்களின் வளர்ச்சி நம்மை பிரம்மிக்க வைப்பதாக இருக்கும். குறிப்பாக ஹுமனாய்ட் ரோபோக்கள் என்று அழைக்கப்படும் மனித ரோபோக்களின் வளர்ச்சி நம்பிக்கைக்கு அப்பால் பல மாற்றங்களை கண்டுள்ளது. இந்த வகை ஹுமனாய்ட் ரோபோக்கள் மனிதர்களை போலவே சிந்தித்து செயல்படும் வகையில் உருவாக்கப்படும். இவ்வகை ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில்தான் பல நிறுவனங்கள் போட்டி போட்டு ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமான ஹுமனாய்ட் ரோபோவான சோஃபியா பலரின் கவனத்தை பெற்றது. ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ”ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் “ என்ற நிறுவனம் இந்த சோஃபியாவை அறிமுகப்படுத்தியது. மனிதர்களை போலவே முக பாவனைகளை வெளிப்படுத்துவது, கேட்கும் கேள்விகளுக்கு சாதூர்யமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் பதிலளிப்...
Comments
Post a Comment