Posts

Showing posts from June, 2022

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொலஸ்ட்ராலை வேகமாக குறைக்க வேண்டுமா? இந்த உணவகள் மட்டும் போதும்

Image
 உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன. இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக்களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது. இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதே சிறந்தது. அந்தவகையில் தற்போது கொலஸ்ராலை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.     பார்லி செய்யும் அற்புதம் பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்துவிடும். கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் இதில் நார்ச்சத்து அதிகம்

ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்

Image
இந்த கோங்குரா சிக்கன் சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். புளிச்சக்கீரை சற்று புளிப்பாக இருப்பதால், இந்த சிக்கன் மசாலா சற்று புளிப்பாக சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள்:  சிக்கன் - 1/2 கிலோ  வெங்காயம் - 2  தக்காளி - 1  பச்சை மிளகாய் - 4  (கீறியது) இஞ்சி - 1  இன்ச் பூண்டு - 6 பல்  மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்  கரம் மசாலா - 1 டீஸ்பூன்  நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்  உப்பு - சுவைக்கேற்ப  வறுத்து அரைப்பதற்கு...  வெந்தயம் - 1/4 டீஸ்பூன்  மல்லி - 1 டேபிள் ஸ்பூன்  வரமிளகாய் - 4  சோம்பு - 1 டீஸ்பூன்  கோங்குரா மசாலாவிற்கு...  நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்  பூண்டு - 4 பல்  புளிச்சக்கீரை - 2 கப்  உப்பு - சுவைக்கேற்ப  செய்முறை:  * வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். * புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.  * சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.  * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள வெந்தயம், சோம்பு, மல்லி, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து 5-ஜ நிமிடம் மிதமான தீயில் வறுத்து இறக

உலகின் அசிங்கமான நாய் எது..? பார்வையாளர்களை கவர்ந்த வினோத போட்டி!

Image
அந்த கருப்பு நிற நாய், நடுவர்களை மட்டுமல்ல பார்வையாளர்களிடமும் பெருவாரியான ஆதரவைப் பெற்றது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெடாலுமாவில் உலகின் மிக அசிங்கமான நாய்க்கான போட்டி நடைபெற்றது.  கொரோனா பெருந்தொற்று காரணமாக, 2 ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்பட்ட இந்த போட்டியில் மிஸ்டர் ஹேப்பி பேஸ் என்ற பெயர் கொண்ட நாய் முதலிடம் பிடித்து பரிசை தட்டிச் சென்றது.  வளைந்த தலை, முடியின்றி, பருக்கள் நிறைந்த உடல், மோசமான மூச்சிரைப்புடன் இருந்த அந்த கருப்பு நிற நாய், நடுவர்களை மட்டுமல்ல பார்வையாளர்களிடமும் பெருவாரியான ஆதரவைப் பெற்றது.  உலகின் அசிங்கமான நாயை வைத்திருப்பதாக நினைக்கவில்லை என்றும் உலகின் அன்பான நாயை தான் வளர்த்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் நாயின் உரிமையாளரான ஜெனெடா பெனாலி.  அந்த நாயின் உரிமயாளருக்கு பரிசுத் தொகையாக 1500 டாலர்கள் கிடைத்துள்ளது. Also read :  பறக்கும் விமானத்தில் பூனைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்; பயணிகள் அலறல்

தினமும் 'லூபா' பயன்படுத்துவது சருமத்திற்கு நல்லதா?

Image
ஒவ்வொரு முறையும் குளிக்கும்போது லூபா பயன்படுத்துவது நல்லதல்ல. சிலருடைய சரும வகைக்கு லூபா ஒத்துக்கொள்ளாது. லூபா எனப்படும் பஞ்சு போன்ற மென்மை தன்மை கொண்ட இழையை குளியலுக்கு பலரும் பயன்படுத்துகிறார்கள். உடலை நன்றாக தேய்த்து சுத்தப்படுத்துவதற்கு உதவும் இந்த பொருள் குளியல் அறையில் தவறாமல் இடம்பெற்றிருக்கும். லூபா இல்லாமல் குளிக்க முடியாது என்ற அளவுக்கு அதனை பயன்படுத்துவதற்கு பலரும் பழகிவிட்டார்கள்.  ஆனால் ஒவ்வொரு முறையும் குளிக்கும்போது லூபா பயன்படுத்துவது நல்லதல்ல என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. உடலில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை துடைத்து எடுப்பதற்கு லூபா பயன்படும் என்றாலும் பாக்டீரியா, பூஞ்சை பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். லூபாவின் இழை பகுதியில் பாக்டீரியாக்கள் படிந்துவிடும். ஒவ்வொருமுறையும் குளிக்கும்போது லூபாவை சரியாக உலர வைக்காவிட்டால் அதில் இருக்கும் ஈரப்பதத்தில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் எளிதாக வளர தொடங்கி விடும். பின்பு குளிக்கும்போது அவை உடலில் ஊடுருவி சரும பாதிப்புகளை ஏற்படுத்தும்.  சிலருடைய சரும வகைக்கு லூபா ஒத்துக்கொள்ளாது. அதனை பயன்படுத்தும்போத

மைதா உருவாக்கும் நோய்கள்

Image
கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்களை அதிகம் எடுத்துக்கொண்டால் அவை கொழுப்பாக மாறிவிடும். காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுப் பொருட்கள் கொழுப்பை குறைக்க வகைசெய்யும். கார்போஹைட்ரேட், உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. சர்க்கரை, நார்ச்சத்து, ஸ்டார்ச் ஆகியவற்றை குளுக்கோஸாக பிரித்து உடலுக்கு ஆற்றலாக வழங்குகிறது.  அதனால் அன்றாடம் சாப்பிடும் உணவில் 50 முதல் 60 சதவீதம் கார்போஹைட்ரேட் இடம் பெற்றிருக்க வேண்டும். 'சிம்பிள்', 'காம்ப்ளக்ஸ்' என இரண்டு வகை கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுப் பொருட்கள் கொழுப்பை குறைக்க வகைசெய்யும்.  மைதா போன்ற சிம்பிள் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுக்கும். அவற்றை தொடர்ந்து சாப்பிடுவது நீரிழிவு, இதய, நோய், மலச்சிக்கல், கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை உருவாக்கலாம்.  உணவில் சீரான அளவில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் இடம்பெற்றால், அது கொழுப்பை குறைக்க உதவும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் குறைக்க சிம்பிள் கார்போஹைட்ரேட்டுகளுக்குப் பதிலாக காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளை எடுத்து

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழம்...

Image
கிவி பழத்தில் உணவை செரிமானம் செய்ய கூடிய அமிலச்சத்துகள் அதிகம் உள்ளன. கிவி பழத்தில் வைட்டமின் “ ஈ ” சக்தி நிறைந்திருக்கிறது. கிவி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் திறன் கொண்டது. எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று, உடல்நலனை பாதுகாப்பதில் உடலின் ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியம்.  உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் கிவி பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மிகும். சரும நலம் கிவி பழத்தை சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும்.  காலை மற்றும் மதிய வேளைகளில் கிவி பழங்களை பழமாகவோ அல்லது சாறு பிழிந்து அருந்தி வந்தால் உடலின் ரத்தத்தில் இருக்கும் செல்களை புத்துணர்ச்சி பெற செய்து, தோளில் பளபளப்பு தன்மை கொடுத்து, சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. கிவி பழத்தில் வைட்டமின் "ஈ " சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.  கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து க

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய சிறந்த பழங்கள்-காய்கறிகள்

Image
தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் கிடைப்பதற்கு பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றுள் சிறந்த 5 காய்கறிகள், பழங்கள் குறித்து பார்ப்போம். கருவில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதற்கும், அதன் வளர்ச்சி அதிகரிப்பதற்கும் தாய் உட்கொள்ளும் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மேலும் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களில் இருந்து தாயையும், சேயையும் பாதுகாப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.   கர்ப்பகாலத்தில் உட்கொள்ள வேண்டிய பழங்கள்  1. வாழைப்பழம்:  இதில் பொட்டாசியம் நிறைந்திருக்கும். வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துகளும் உள்ளடங்கி இருக்கும். கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழ்நிலையில் அதிக நார்ச்சத்து கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவது உதவியாக இருக்கும். வைட்டமின் பி6 குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. கர்ப்பத்தின் ஆரம்

உடலுக்கு இதமும் சுகமும் தரும் நீராவி குளியல்

Image
இயற்கை சிகிச்சை முறைகளில் மிக முக்கியமானது நீராவி குளியல். காலங்காலமாக, நம் பாரம்பரிய பழக்க வழக்கத்தில் எண்ணெய் குளியல் முறை உள்ளது. இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளில் எண்ணற்ற பலன்கள் உள்ளன. நீர், நெருப்பு, பூமி, ஆகாயம், காற்று ஆகிய பஞ்ச பூதங்களின் சக்தியை கொண்டு இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்தவகையில் நீராவி குளியல் மற்றும் எண்ணெய் குளியலின் நன்மைகள், அதன் சிகிச்சை முறைகள் பற்றி காண்போம்.  இயற்கை சிகிச்சை முறைகளில் மிக முக்கியமானது நீராவி குளியல். இந்த நீராவி குளியல் சிகிச்சை எடுப்பதால் உடலின் தேவையற்ற கழிவுகளான யூரியா, யூரிக் அமிலம் போன்றவை வியர்வையின் வழியாக வெளியேறும்.  அதனால் உடல் சோர்வு நீங்குவதுடன், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அதுமட்டுமின்றி உடலில் உள்ள அனைத்து மூட்டு மற்றும் எலும்புகளுக்கும் நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கும். நீராவி குளியல் உடல் பருமனை குறைக்க உதவும். உடல் வலியை நீக்கும்.  இதுதவிர வாதநோய், தோல் வியாதிகள், ஆஸ்துமா போன்ற நோய்களை குணமாக்க உதவும். சர்க்கரை, உயர்ரத்த அழுத்த நோயாளிகள் டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே நீராவி குளியல் சிகிச்ச

வெறும் வயிற்றில் ஊற வைத்த வால்நட்! நாள் முழுவதும் ஆரோக்கியமா இருப்பீங்க.....

Image
 வால்நட் என்னும் அக்ரூட் மற்ற எல்லா வகை நட்ஸ்களையும் விட சற்று சுவையிலும் ஆரோக்கிய விஷயத்திலும் வேறுபட்டதாக காணப்படுகின்றது. இது பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. கொழுப்பு , சோடியம் ,பொட்டாசியம், புரதச்சத்து, விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் பி12 மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் இந்த வால்நட்டில் உள்ளது.    மேலும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், ஆன்டி ஆக்சிடன்ட்கள், பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம் காணப்படுகின்றது. இது உடலுக்கு பல வகையாக அற்புத பலன்களை வாரி வழங்குகின்றது. அந்த வகையில் ஊறவைத்த வால்நட்டை சாப்பிடுவதன் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். மூளையின் ஆற்றலை அதிகரிக்கும் வால்நட்டில் உள்ள புரதச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் அனைத்தும் இரத்தத்தில் கலந்து மூளையின் ஆற்றலை நன்றாக செயல்படத் தூண்டுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு இந்த வால்நட்ஸை தினமும் 5 வீதம் காலையில் எழுந்ததும் சாப்பிடக் கொடுக்கலாம். தினமும் ஊறவைத்த வால்நட்ஸை பெண்கள் சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். அதோடு வால்நட்ஸ் கணைய புற்றுநோயின் அபாயத்த

ஆண்களே...அக்குள் ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கா? செலவே இல்லாம இந்த ஒரு பொருளை போடுங்க!

Image
 கருப்பான அக்குள் பகுதி எந்த நேரத்திலும் நமக்கு சங்கடமான உணர்வை ஏற்படுத்தலாம். பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் அக்குள் பகுதி கருப்பாக இருக்கும். கருமையான அக்குள்களை வீட்டிலேயே எளிதாக ஒளிரச் செய்யலாம். அக்குள் கருமையை போக்குவது எப்படி என்று பார்க்கலாம். சமையல் சோடா   பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கினால் போதும்.  இந்த பேஸ்ட்டை வாரத்திற்கு இரண்டு முறை உங்கள் அக்குள் பகுதியில் ஸ்க்ரப் செய்யவும். நீங்கள் ஸ்க்ரப்பிங் செய்து முடித்த பிறகு, கலவையை தண்ணீரில் கழுவி, அந்த பகுதியை உலர வைக்கவும். தேங்காய் எண்ணெய் தினமும் தேங்காய் எண்ணெயைக் கொண்டு உங்கள் அக்குள்களை மசாஜ் செய்து பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பின்னர், சாதாரண நீரில் கழுவுங்கள். ஆலிவ் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை ஒரு டேபிள் ஸ்பூன் பிரவுன் சர்க்கரையுடன் கலந்து முயற்சிக்கவும். உங்களுக்காக உங்கள் வீட்டிலேயே எக்ஸ்ஃபோலியேட்டர் தயாராக உள்ளது. இரண்டு நிமிடம் ஸ்க்ரப் செய்து சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பின்னர், அதை சாதாரண நீரில் கழுவவும். எலுமிச்சை எலுமிச்சை ஒரு இயற்கையான ப்ளீச்

டேஸ்டியான பொடி மீன் வறுவல்... இப்படி செய்து பாருங்க ஓட்டல் சுவையையும் மிஞ்சிடும்!

Image
 மீனை குழம்பு வைத்து சாப்பிட்டாலும் அதை வறுவல் செய்து சாப்பிடுவது தனிச் சுவைதான். பெரும்பாலும் மீன் குழம்பு, மீன் பொரியல் மட்டுமே சாப்பிட்டு நிறைய பேருக்கு அலுத்துப் போயிருக்கும். அந்த வகையில் குட்டி குட்டியாக இருக்கும் பொடி மீனை வைத்து வறுவல் எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க. தேவையான பொருட்கள் நெத்திலி மீன் – அரை கிலோ மிளகாய் தூள் – 25 கிராம் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் மிளகு தூள் – ஒரு டீஸ்பூன் சீரக தூள் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப ஓமம் – கால் டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது) பூண்டு – ஐந்து பல் (நசுக்கியது) தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன் சோல மாவு – 25 கிராம் அரிசி மாவு – 25 கிராம் முட்டை வெள்ளை கரு – அரை முட்டை  செய்முறை ஒரு கிண்ணத்தில் நெத்திலி மீன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள், ஓமம், கறிவேப்பிலை, பூண்டு, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு, அதில் சோல மாவு, அரிசி மாவு, முட்டை வெள்ளை கரு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின், குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, கடா

பாரம்பரிய முறைப்படி சுண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி?

Image
 சுண்டைக்காய் குழம்பு என்பது பச்சை சுண்டைக்காயைக் கொண்டு செய்வது ஆகும். இது சுண்டைக்காய் புளிக்குழம்பு என்றும் அழைக்கப்படுகிறது.  சுண்டைக்காய் கார குழம்பு சூப்பராக இருக்கும். பச்சை சுண்டைக்காய் சின்ன வெங்காயம் வைத்து கார குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள் பச்சை சுண்டைக்காய் சின்ன வெங்காயம் - தலா ஒரு கப் தேங்காய் துண்டுகள் - 2 பூண்டு - 2 பல் கீறிய பச்சை மிளகாய் - 1 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் குழம்பு பொடி - 2 டீஸ்பூன் புளி - நெல்லிக்காய் அளவு கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் உப்பு - தேவையான அளவு செய்முறை முதலில் பூண்டு, வெங்காயம், தேங்காயை பொடியாக நறுக்கவும். சுண்டைக்காயை காம்பு நீக்கி, கழுவி, மத்தால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கி, சுண்டைக்காயையும் போட்டு நன்றாக வதக்கவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, குழம்பு பொடி போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி மிளகாய்த்தூள் காரத்திற்கு ஏற்ப போட்டுக்க

முகப்பொலிவை கூட்டும் சந்தனம்! இந்த பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தி பாருங்க.......

Image
 பொதுவாக சந்தனத்தை பொதுவாக சோப்புகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்க பயன்படுத்துவார்கள். இது ஒரு இயற்கையான கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது மற்றும் சருமத்திற்கு முழு பாதுகாப்பு தருகிறது. குறிப்பாக முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றவும் இது வழி செய்கிறது. முக்கியமாக சூரிய ஒளியின் பாதிப்பை தணித்து சருமத்தை மென்மையாக வைக்கிறது. வறண்ட மற்றும் சுருக்கங்கள் கொண்ட சருமத்தை மீளுருவாக்கம் செய்கிறது. இதனை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து முகத்திற்கு போடுவது நன்மையே தரும். அந்தவகையில் தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.  சந்தனப் பொடியில் தக்காளியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம். எலுமிச்சை சாற்றுடன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பருக்கள் வராமலும் இருக்கும். தயிரை சந்தனப் பொடியில் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாவதோடு, வெள்ளையாகும். ம

சிவப்பு அரிசியை தினமும் சாப்பிடுவது இவ்வளவு நன்மைகளை ஏற்படுத்துமா?

Image
 அரிசியிலும் பல வகைகள் இருக்கிறது. அவற்றில் ஒவ்வொரு ரகங்களும் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது. அந்த அரிசி வகைகளில் ஒன்றாக சிவப்பு அரிசி விளங்குகிறது. இந்த அரிசி பார்ப்பதற்கு சிவப்பாக இருக்கும், இதை சாப்பிடுவதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கின்றது.  இதில் அதிகமான புரதச்சத்து நிறைந்தது. புரதச்சத்து நிறைந்த இந்த சாப்பிடுவதன் மூலம் உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்க்கிறது. இந்த அரிய வகை அரிசியின் நாம் சற்றும் எதிர்பார்க்காத பல நன்மைகளைக் கொண்டுள்ளது. தற்போது அவற்றை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  சிவப்பு அரிசியின் குறைந்த கிளைசெமிக் குறியீடு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.  சிவப்பு அரிசியில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது நுரையீரல் செயல்பாடுகளை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உடலில் ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்துகிறது, இது தானாகவே ஆஸ்துமாவை கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் சிவப்பு அரிசியை உட்கொள்வது ஆக்ஸிஜனை உறிஞ்சி உடலின் ஒவ்வொரு திசுக்களுக்கும் செல்களுக்கும் அனுப்ப உதவுகிறது. இ

இந்த ஒரு காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் அருவியாய் கொட்டும் அற்புதங்கள்!

Image
 பொதுவாக காய்கறிகள் என்றாலே உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். அதிலும் சில காய்கறிகளில் எண்ணிலடக்காத நன்மைகள் கொட்டி கிடக்கும். அப்படியான காய்களில் பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு காயாக வாழைக்காய் இருக்கிறது. இந்த வாழைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து காண்போம். சர்க்கரை நோய் வாழைக்காய் மற்றும் வாழை மரம் தொடர்பான அனைத்துமே நமது உடலில் இருக்கும் ரத்த செல்களில் குளுகோஸ் அதிகம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது. எலும்புகள் பலமாக எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருப்பது அவசியம். வாழைக்காயில் எலும்புகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் தேவையான வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உடல் எடை உடல் எடை குறைக்க சரியான உணவுகள் சாப்பிடுவதை வடிக்கையாக்கி கொள்ள வேண்டும். வாழைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதினால் உடலின் தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. ஜீரண உறுப்புகள் வாழைக்காய் ஜீரண உறுப்புகளுக்கு மற்றும், உணவுக்

உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? இதனை எப்படி போக்கலாம்?

Image
 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானது எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்கள் கோடைக்காலத்தில் தான் அதிகளவு பிரச்சனைகளை சந்திப்பார்கள். முகத்தில் எண்ணெய் அதிகம் சுரப்பதால், முகம் கருமையாகவும் காட்சியளிக்க ஆரம்பிக்கும். ஆகவே, எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் நிச்சயமாக சரும பராமரிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில் தற்போது எண்ணெய் சருமத்தை நீக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.      தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை போகும். ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி, அதை நன்கு அரைத்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கிவிடும். பப்பாளியை நன்கு குழைத்து முகத்தில் படும்படி தேய்க்கவும். இவை அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். முட்டையின் மஞ்சள் கருவில் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து முகத்தில் நேரடியாக தடவி 2

சியா விதை வேகமாக எடையை குறைக்க உதவுமா?

Image
  பார்ப்பதற்கு அளவில் சிறியதாக உள்ள சியா விதைகள் நம் உடலுக்கும், மனதிற்கும் பலன் தரக் கூடிய அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள அற்புதமான விதையாகும்.   சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், மாவுச்சத்து குறைவாக இருக்கிறது. இந்த நார்ச்சத்து என்பது கரையும் தன்மை கொண்டது. நம் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக பயன்படுகிறது. இதனால், குடல் நலன் மேம்படும்.    குறிப்பாக இது உடல் எடையை குறைக்க உதவுகின்றது. அந்தவகையில் எடையைக் குறைப்பதற்கு இந்த சியா விதைகளை முறையாக எப்படி எடுத்துக் கொண்டால் விரைவான பலன்களைப் பெறலாம் என்பதை இங்கே பார்ப்போம்.       சியா விதை எப்படி எடையை குறைக்க உதவுகின்றது?  ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கின்ற உணவுகளில் ஒன்று தான் இந்த சியா விதை. இதில் அதிகப்படியான நார்ச்சத்தும் இருக்கிறது. இந்த சியா விதை உடலின் இயக்கங்களை சீராக்கி கொழுப்பைக் கரைக்கிறது.   சியா விதையில் உள்ள நார்ச்சத்துக்களும் பிற ஊட்டச்சத்துக்களும் அதிகப்படியான பசியைக் கட்டுப்படுத்தி. உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கின்றன.   அதோடு உடலில் உள்ள கழி

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல் ........

Image
 பச்சை பட்டாணியை தவறாமல் எடுத்துகொள்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வராது. பட்டாணியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படாது. தேவையான பொருட்கள்  பச்சை பட்டாணி - 1 கப்,  கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,  தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,  உப்பு - தேவைக்கு.  தாளிக்க எண்ணெய் - 2 டீஸ்பூன்,  கடுகு - 1 டீஸ்பூன், வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,  பெருங்காயம் - 1/2 டீஸ்பூன், வரமிளகாய் - 2,  கறிவேப்பிலை - 6 இதழ்கள்.  மேலே தூவுவதற்கு அரிந்த கொத்தமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்.  செய்முறை  பச்சை பட்டாணியை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த பட்டாணியைச் சேர்த்து வதக்கி கேரட் துருவல், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி கலந்துவிடவும். இப்போது சூப்பரான பட்டாணி கார சுண்டல் ரெடி. ALSO READ :  டீ, காபி ஹார்லிசுக்கு பதில் இப்படி செய்து குடித்து பாருங்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த குறையும் இருக்காது....

டீ, காபி ஹார்லிசுக்கு பதில் இப்படி செய்து குடித்து பாருங்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த குறையும் இருக்காது....

Image
 பொதுவாகவே காலையில் எழுந்திருக்கும் போது சிலருக்கு டீ அல்லது காபி கையில் இருக்க வேண்டும். அப்போது தான் அன்றைய நாள் அவர்களுக்கு இனிதாக துவங்கும். இவ்வாறு டீ அருந்தி விட்டு தான் பலரும் வேலை செய்யவே துவங்குகிறார்கள். இதனை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு டீ குடிக்க முடியவில்லை என்றால் அன்றொரு நாள் முழுவதுமே அவர்களுக்கு எதையோ இழந்தது போல் தோன்றும். ஆனால் இந்த டீ, காபி குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறதா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே இந்த டீ, காபிக்கு பதிலாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும் இந்த புரோட்டீன் பவுடரை தயார் செய்து வைத்துக்கொண்டால் போதும். தினமும் இதனை பாலுடன் சேர்த்து கலந்து குடிக்கும் பொழுது நமது உடலுக்குத் தேவையான அளவு புரதச்சத்து, கால்சியம் சத்து அனைத்தும் கிடைக்கிறது. வாருங்கள் இந்த புரோட்டீன் பவுடரை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்:  வேர்க்கடலை – ஒரு கப்,  பொட்டுக்கடலை – ஒரு கப்,  கம்பு – ஒரு கப்,  கேழ்வரகு

வயிற்றில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் கரைய இந்த சுவையான தோசை மட்டும் போதும்........

Image
  இன்றைய கட்டுப்பாடு இல்லாத உணவு முறையின் காரணமாக சிறு வயதிலேயே ஆண்கள் முதல் பெண்கள் வரை பலரும் அதிகப்படியான உடல் எடையுடன், பார்ப்பதற்கு அசிங்கமாக காணப்படுகிறார்கள். எனவே நாட்கள் செல்ல செல்ல இவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இப்படி உடல் எடையை குறைக்காமல் அப்படியே விட்டுவிட்டால் சர்க்கரை வியாதி முதல் உடலில் பலவிதமான நோய்கள் வர ஆரம்பித்து விடுகின்றன. இவ்வாறு உடல் நோய் தொற்றுக்கு உள்ளாக முதல் காரணமாக இந்த உடல் எடையும் அமைகிறது. எனவே உடல் எடையை சரியான அளவில் பராமரித்து கொள்ள வேண்டும். இவ்வாறு உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைப்பதற்கு இந்த பயத்த மாவு தோசை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாருங்கள் இந்த பயத்தமாவு தோசையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்:  பயத்தம் மாவு – 100 கிராம்,  அரிசி மாவு – இரண்டு ஸ்பூன்,  ரவை – இரண்டு ஸ்பூன்,  வெங்காயம் – ஒன்று,  பச்சை மிளகாய் – ஒன்று,  காய்ந்த மிளகாய் – இரண்டு,  பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்,  உப்பு – அரை ஸ்பூன்,  இஞ்சி சிறிய துண்டு – ஒன்று,  கறிவேப்பிலை – ஒரு கொத்த

வேப்பங்குச்சியில் பல் துலக்குவதால் இவ்வளவு நன்மைகளா?

Image
 வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கும் போது, அது வேப்ப எண்ணெயை வெளியிடுகிறது, இது வலுவான நுண்ணுயிர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, பல் சுகாதாரம் என்பது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். அதனால்தான், ஏதேனும் பல் பிரச்சனைகள் ஏற்பட்டால், மூல காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காண்பது முக்கியம். ஆனால் சில நேரங்களில், எளிமையான விஷயங்களைச் செய்வது நிறைய வித்தியாசங்களை ஏற்படுத்தும் – அவற்றில் ஒன்று, வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடும் வேப்பங்குச்சியால் பல் துலக்குவது. ப்ரெஷ்னர்களை நம் வாயில் தெளிப்பது முதல் சுயிங்-கம் வரை, வாய் புத்துணர்ச்சிக்காக நாம் அனைத்தையும் செய்கிறோம். ஆனால் இந்த விரைவான தீர்வுகள்’ மூல காரணத்தை தீர்க்காது. பல நன்மைகளைக் கொண்ட வேப்பங்குச்சி அல்லது வேம்பு பேஸ்ட் பயன்படுத்துங்கள்” என்று ஊட்டச்சத்து நிபுணர் நிதி குப்தா இன்ஸ்டாகிராமில் கூறினார். வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கும் போது, அது வேப்ப எண்ணெயை வெளியிடுகிறது, இது வலுவான நுண்ணுயிர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, அது எப்படி உதவுகிறது ? * பிளேக் உருவாவதைத் தடுக்கிறது *

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!