நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சாப்பிடும்போது ஏன் டி.வி. பார்க்கக்கூடாது?

சாப்பிடும் உணவின் சுவை மற்றும் வாசனையை நுகராமல் திரையை பார்த்துக்கொண்டே இயந்திரத்தனமாக சாப்பிடும்போது, சாப்பிடும் அளவு தெரியாது.
சாப்பிடும் உணவின் சுவை மற்றும் வாசனையை நுகராமல் திரையை பார்த்துக்கொண்டே இயந்திரத்தனமாக சாப்பிடும்போது, சாப்பிடும் அளவு தெரியாது.

அலுவலக பணி முடிந்து வீடு திரும்பும் பலர் டி.வி.யோ, ஸ்மார்ட்போனோ பார்த்துக்கொண்டு இரவு உணவை சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். லேப்டாப்பை இயக்கியபடி சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி சாப்பிடும்போது கண்களின் பார்வை முழுவதும் திரையின் மீது பதிந்திருக்கும்.

சாப்பிடும் உணவின் சுவை மற்றும் வாசனையை நுகராமல் திரையை பார்த்துக்கொண்டே இயந்திரத்தனமாக சாப்பிடும்போது, சாப்பிடும் அளவு தெரியாது. வழக்கத்தை விட கூடுதலாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிகமாக சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக மூளை சமிக்ஞை செய்யும். கவனம் முழுவதும் திரையில் தென்படும் காட்சிகளின் மீது பதிந்திருப்பதால் மூளையின் சமிக்ஞையை உணராமல் சாப்பிட்டு முடிப்பதற்கு முனைவார்கள். நன்றாக மென்று சாப்பிடாமல் விரைவாக சாப்பிட்டு விடுவார்கள். அப்படி சாப்பிடுவது வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

திரைக்கு முன்னால் சாப்பிடும்போது உடலில் என்ன நடக்கும்?

டி.வி. பார்த்துக்கொண்டே அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கக் கூடும். நீங்கள் எவ்வளவு சாப்பிட்டிருக்கிறீர்கள் என்பதை மூளை பதிவு செய்யாது. சாப்பிட்ட திருப்தியும் இருக்காது. அதனால் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பசி எடுக்கத் தொடங்கிவிடும். சிப்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை நாடுவீர்கள். டி.வி. பார்த்துக்கொண்டே அவற்றை சாப்பிடுவது ருசியாக இருப்பது போல் தோன்றும். அதனால் இனிப்பு பொருட்கள் மீது நாட்டம் அதிகரித்துவிடும். அவை எந்தவிதமான உடல்நலப் பலன்களையும் வழங்காமல் எளிதாக உடல் எடையை அதிகரிக்க செய்துவிடக் கூடும்.

எப்படி சாப்பிடுவது சரியானது?

எத்தகைய உணவுகளை உட்கொண்டாலும் நன்றாக மென்று சாப்பிடும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அந்த உணவு எத்தகைய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன் சுவை மற்றும் நறுமணத்தை நுகர வேண்டும். நீங்கள் வயிற்றுக்கு போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்கள் என்ற சமிக்ஞை மூளைக்கு செல்ல சுமார் 20 நிமிடங்கள் ஆகும் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கேற்ப உணவை நன்றாக மென்று மெதுவாக சாப்பிடும்போது சமிக்ஞை மூளைக்கு செல்வதற்கு போதுமான அவகாசம் கிடைக்கும். அதிகமாக சாப் பிடுவதையும் தடுத்துவிடும். என்ன சாப்பிடு கிறீர்கள் என்பதை விட அதை எப்படி சாப்பிடு கிறீர்கள் என்பது முக்கியமானது.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!