Posts

Showing posts from November, 2021

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைகளாக இந்தியர்கள்: உலகம் வியக்கிறது கொஞ்சம் பயக்கிறது!

Image
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவற்றில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களே தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ) பதவிகளை வகிக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான (சி.இ.ஓ) ஜாக் டோர்சியின் பதவிகாலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இந்நிலையில், தன் தலைமை செயல் அதிகாரி பதவியை ஜாக் டோர்சி நேற்று (நவ.,29) ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த இந்தியரான பரக் அகர்வால், புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பரக் அகர்வால், மும்பை ஐ.ஐ.டி.,யில் படித்து, உயர் கல்வியை அமெரிக்காவில் முடித்து, அமெரிக்க குடியுரிமை பெற்றவர். டுவிட்டர் மட்டுமல்லாமல் உலகின் தலைசிறந்த தொழில்நுட்பவியல் நிறுவனங்களின் சி.இ.ஓ பதவியை இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களே ஆக்கிரமித்துள்ளனர். கூகுள் சி.இ.ஓ.,வாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ., சத்ய நாதெள்ளா, ஐ.பி.எம் நிறுவன சி.இ.ஓ அர்விந்த் கிருஷ்ணா, அடோப் சி.இ.ஓ சாந்தனு நாராயென், வி.எம் வேர் நிறுவன சி.இ.

இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 'பாஸ்வேர்ட்' என்ன தெரியுமா?-ஆய்வில் ’ஷாக்’ தகவல்!

Image
  இன்றைய டிஜிட்டல் உலகில் மின்னஞ்சல், மொபைல் போன், டிஜிட்டல் பேமெண்ட்ஸ், சமூக வலைத்தளங்கள் என அனைத்திற்கும் கடவுச்சொல்லான ‘பாஸ்வேர்ட்’ மிகவும் அவசியம்.  அ தை கொண்டு தான் பயனர்கள் அனைவரும் அனைத்திலும் லாக்-இன் செய்ய முடியும். இந்த நிலையில் இந்தியாவில் பொதுவாகவும், பிரபலமாகவும் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் என்ன என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்து சொல்லியுள்ளது NordPass என்ற நிறுவனம். பாஸ்வேர்டுகளை பயனர்கள் நிர்வகித்துக் கொள்வதற்கான சேவையை இந்த நிறுவனம் வழங்குகிறது.  இந்த நிறுவனத்தின் கூற்றுப்படி ‘password’ என்ற சொல்லை தான் இந்தியாவில் பொதுவாக பலரும் பயன்படுத்துகின்ற கடவுச்சொல் என தெரியவந்துள்ளது. அதே போல  ‘iloveyou’, ‘krishna’, ‘sairam’ மற்றும் ‘omsaira’ மாதிரியான பாஸ்வேர்டுகளையும் இந்தியர்கள் பயன்படுத்தி வருவதாக சொல்லப்பட்டுள்ளது. உலக அளவில் ‘12345’ மற்றும் qwerty கீஸ்களின் வேரியேஷன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் என்ற நிலையில் இந்தியா அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது.  abc123, india123, qwerty மாதிரியானவை இந்திய அளவில் பயன்படுத்தப்படும் டாப் 10 பாஸ்வேர்டுகளில் உள்ளன.  ALSO READ

ரஷ்யப்பகுதியில் உறைந்த ஆர்ட்டிக் கடல் - நகரமுடியாமல் நடுக்கடலில் சிக்கிய கப்பல்கள்!

Image
  ஆர்ட்டிக் கடலானது ரஷ்யப்பகுதியில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே உறைந்த காரணத்தினால் கப்பல்கள் நடுக்கடலில் சிக்கி தவித்துவருகின்றன. வருடந்தோறும் பனிக்காலங்களில் கடல்நீர் உறைவது வழக்கம். அதற்கு ஏற்றாற்போல் கப்பல்கள் தங்கள் பயணங்களை அமைத்துக்கொள்கின்றன. ஆனால், இந்த ஆண்டு ஆர்ட்டிக் கடலின் ரஷ்யப்பகுதிகளில் பனிப்பொழிவு முன்கூட்டியே தொடங்கிவிட்டதால் கடல்நீரானது கிட்டத்தட்ட 30 செ.மீ ஆழத்திற்கு உறைந்துவிட்டது. இதனால் கிட்டத்தட்ட 18 சரக்குக்கப்பல்கள் மாதக்கணக்கில் நடுக்கடலில் சிக்கித் தவித்துவருகின்றன. மேலும் லாப்டேவ் மற்றும் கிழக்கு சிபேரியன் கடல் பகுதிகளிலும் கடல்நீரானது உறைந்து காணப்படுகிறது. ரஷ்ய அதிகாரிகள் இதுவரை பனிக்கட்டிகளில் சிக்கித்தவித்த 2 எண்ணெய் சரக்குக் கப்பல்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் மற்ற கப்பல்களும் மீட்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ALSO READ :  இந்த பூனைக்கு மட்டும் 4 காது எப்படி?… இணையத்தை கலக்கும் துருக்கி மிடாஸ்…!

பிரத்யேகமான ஸ்டிக்கரை வாட்ஸ்அப்பில் உருவாக்க சுலப வழி

Image
  பயனர்கள் தங்களுக்குத் தேவையான சொந்த ஸ்டிக்கர்களை இணையம் அல்லது டெஸ்க்டாப் பயன்படுத்தி உருவாக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது... META வுக்குச் சொந்தமான உடனடி செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், இணையம் அல்லது டெஸ்க்டாப்பைப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் வாடிக்கையாளர் ஸ்டிக்கர்களை உருவாக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் ஸ்டிக்கர் சந்தையை அணுகலாம்.  WhatsApp பயனர்கள் உரையாடல் பகுதிக்குச் சென்று, அங்குள்ள  அட்டாச் ( Attach) என்ற பகுதிக்குச் சென்று (paperclip icon)க்குள் சென்று அதன்பிறகு ஸ்டிக்கர் விருப்பத்தை (Sticker option) என்பதற்கு செல்லவும்.   தனிப்பயன் ஸ்டிக்கரை உருவாக்க ஒரு புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும். அந்தப் புகைப்படத்தை ஸ்டிக்கரில் மாற்றியமைக்கலாம். ஸ்டிக்கர்களை மிகவும் வேடிக்கையாக மாற்ற எமோஜிகள் அல்லது வார்த்தைகளைச் சேர்க்கவும் இந்த புதிய வாட்ஸ்அப் அம்சம் அனுமதிக்கிறது. "ஸ்டிக்கர் மேக்கரைப் பயன்படுத்த, இணையம் அல்லது டெஸ்க்டாப்பிற்கான வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பைப் ப

இரவு தூங்கும் முன் ‘இந்த’ மேஜிக் ஜூஸ் குடித்து வந்தால் கை மேல் பலன்..!!

Image
  தினமும் இரவில் தூங்கும் முன், இந்த ஸ்பெஷல் ஜூஸை குடித்து வந்தால், சில வாரங்களில் வித்தியாசத்தை பார்க்கலாம்.  உ டல் எடையை குறைக்கும் மேஜிக் ஜூஸ் மூலம் நீங்கள் உடல் எடையை மிக எளிதாக குறைக்கலாம். இது கொழுப்பைக் குறைப்பது மட்டுமின்றி, தொப்பையை கரைக்கவும் உதவும். தினமும் இரவில் தூங்கும் முன், இந்த ஸ்பெஷல் ஜூஸை குடித்து வந்தால், சில வாரங்களில் வித்தியாசத்தை பார்க்கலாம். இந்த ஜூஸ் தயாரிக்க உங்களுக்கு சிறப்பாக எதுவும் தேவையில்லை. இவை அனைத்தும் உங்கள் வீட்டில் இருக்க கூடிய பொருட்கள் இருந்தால் போதும். இந்த ஸ்பெஷல் ஜூஸ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருள் 1. 1 எலுமிச்சை துண்டு 2. 1 கப் தண்ணீர் 3. 1 வெள்ளரிக்காய் 4. 1 தேக்கரண்டி துருவிய இஞ்சி 5. 1 தேக்கரண்டி கற்றாழை சாறு 6.  கொத்தமல்லி இலைகள் ஜூஸ் செய்யும் முறை முதலில் இந்த பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். பின்னர் அதனை வழிகட்டி ஒரு கப் குடிக்கவும்.  இதில் ஜூஸை இரவில் எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைகிறது. இது உங்கள் உடல் பருமனை குறைக்கிறது. வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் இந்த ஜூஸை தி

ஆண்களின் உடல் வலிமைக்கு சஞ்சீவியாக இருக்கும் உணவுகள்!

Image
  ஸ்டாமினா என்பது உங்கள் உடலின் செயல்படும் திறன். எவ்வளவு நீண்ட நேரம் ஆற்றல் நீடித்து உள்ளதோ,  அந்த அளவிற்கு அதிக ஸ்டாமினா இருப்பதாக கருதப்படுகிறது. நீ ங்கள் அடிக்கடி களைப்பாகவோ, அல்லது சோர்வாகவோ அல்லது சோம்பலாகவோ உணர்ந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இந்த அறிகுறிகள் அனைத்தும் உடல் வலிமை குறைவாக இருப்பதால் தோன்ற ஆரம்பிக்கின்றன. நாளடைவில் உடல் வலிமை குறைவது இயல்புதான் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். உடல் வலிமை குறைவதால், பலவீனம், மந்தம், சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும். உடல் வலிமை அல்லது ஸ்டாமினா என்றால் என்ன ஸ்டாமினா என்பது உங்கள் உடலின் செயல்படும் திறன். எவ்வளவு நீண்ட நேரம் ஆற்றல் நீடித்து உள்ளதோ,  அந்த அளவிற்கு அதிக ஸ்டாமினா இருப்பதாக கருதப்படுகிறது. மருத்துவர்கள் கூறுவது என்ன நாட்டின் பிரபல ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி இது குறித்து கூறுகையில், உங்கள் உடலில் போதிய ஸ்டாமினா அல்லது வலிமை இல்லை என்றால், நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்வீர்கள் என்கிறார். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு போன்று, உடல் வலிமையை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. உடல் வலிமையை

உங்கள் முகத்தை ரோபோக்கு கொடுத்தால் 1.5 கோடி ரூபாய் கிடைக்கும் !

Image
  மனிதர்களுக்கு மட்டுமே குடியுரிமை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சவுதியில் 'சோபியா' என்ற ரோபோவிற்கு முதன் முதலாக குடியுரிமை அளிக்கப்பட்டது.  ந ம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமே மனித ரோபோக்கள்.  இவை மனிதர்களால் மைந்த வேலையை செய்ய உருவாக்கப்பட்டவை.  இவை பொழுதுபோக்கிற்காகவும், பாதுகாப்பிற்காகவும், வேலைகளை செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  'எந்திரன்' படத்தின் மூலம் மனித ரோபோக்கள் மக்களிடத்தில் அதிகமாக பிரபலமானது. இந்த காலத்தில் ரோபோக்கள் பல ஆச்சர்யமான விஷயங்களை செய்து மனிதர்களை வியக்க வைக்கின்றன.  மனிதர்களுக்கு மட்டுமே குடியுரிமை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சவுதியில் 'சோபியா' என்ற ரோபோவிற்கு முதன் முதலாக குடியுரிமை அளிக்கப்பட்டது.  இதன்மூலம் ரோபோவின் முக்கியத்துவம், பயன்பாடு குறித்து அறியமுடிகிறது.  இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ரோபோ தயாரிக்கும் நிறுவனமான PROMOBOT மனித ரோபோக்களை தயாரிக்க மனிதர்களின் முக மாதிரிகளை கொடுத்தால் ரூ.1.5 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.  பழகிய முகங்களின் வடிவங்களை ரோபோவிற்கு பயன்படுத்தினால் அதனை பயன்படுத்துவோருக்க

தெருக்கடையில் அசத்தலான ஆஃபருடன் தங்க துகள் தூவிய பர்கர்!

Image
  லூதியானாவில் தெருக்களில் உணவு விற்கும் வியாபாரி ஒருவர் தான் தங்க துகள்களை பர்கரில் தூவி விற்று வருகிறார். ப லரும் ஓய்வில்லாமல் ஓடி உழைப்பது மூன்று வேலை உணவிற்காக தான், அத்தகைய உணவுகளில் தற்போது பலரும் பல்வேறு புதுமைகளை புகுத்தி உண்ண தொடங்கி விட்டனர்.  அதற்கேற்றாற் போல ஒவ்வொரு உணவு நிறுவனங்களும், மக்களை கவரும் பொருட்டு புதுவிதமான உணவுகளை அறிமுகப்படுத்த தொடங்கிவிட்டனர். அதாவது விலையுயர்ந்த தங்கத்தையே உணவுகளில் கலந்து மக்களுக்கு அளிக்கும் வகையில் புதுமைகள் வளர்ந்துவிட்டது.  பிரியாணி, மோமோஸ், சூப் போன்ற பலவற்றில் தங்க துகள்களை கலந்து பெரிய அளவிலான உணவகங்களில் விற்கப்படுகிறது.  அதுவே ஒரு சிறிய கடையில் இதுபோன்று தங்க துகள் கலந்த உணவு விற்கப்படுவது ஆச்சர்யமான ஒன்று. லூதியானாவில் தெருக்களில் உணவு விற்கும் வியாபாரி ஒருவர் தான் தங்க துகள்களை பர்கரில் தூவி விற்று வருகிறார்.  அந்த பர்கரோடு சேர்த்து ஒரு அசத்தலான ஆஃபரையும் அறிவித்துள்ளார்.  அதாவது ரூ.1000-த்திற்கு விற்கப்படும் இந்த வெஜ் பர்கரை 5 நிமிடத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு இவர் பரிசாக ரூ.1000-ஐ வழங்குகிறார், மேலும் சாப்பிட்ட பர்கருக்க

பெண்களின் உடல் மணக்கட்டும்..

Image
  தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். வெயிலில் அலைவது, பயணம் செய்வது போன்றவைகளை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை. பெ ண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக் கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம்சுளித்துவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்படவும் செய்வார்கள். அது அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடக்கூடும். நமது உடலில் இரண்டு வகை வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அதில் ‘ஏக்ரைன்’ எனப்படும் சாதாரண வியர்வை சுரப்பிகள், உடலில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன. ‘அப்போகிரைன்’ எனப்படும் இன்னொரு வகை வியர்வை சுரப்பிகள் அக்குள், பிறப்பு உறுப்பு சருமப்பகுதி, மார்பு காம்பைச் சுற்றியுள்ள கறுப்பு பகுதி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. வயதுக்கு வந்த பின்பே இந்த சுரப்பிகள் பெரிதாகி செயல்படத் தொடங்குகின்றன.   எல்லாவகை வியர்வை சுரப்பிகளுமே லேசான எண்ணெய்த்தன்மை கொண்ட திரவத்தை சுரக்கின்றன. அது மணமற்றது. இயற்கையானது. அது நமது உடல் இயக்கத்தின் வெளிப்பாடுதான். ஆனால் அந்த திரவத்தில் நமது சருமத்தில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்கள் சேர்ந்து செயல்படும

குளிர் காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்...

Image
  சராசரியாக ஒரு நபர் உடலில் நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் 3.7 லிட்டர் அல்லது 125 அவுன்ஸ் தண்ணீர் தேவைப்படுகிறது. கு ளிர்காலத்தில் கோடை காலத்தை போல் அடிக்கடி தாகம் எடுக்காததால், நம்மை அறியாமலேயே நீர் பருகும் அளவு குறைந்து போய்விடும். குளிர்காலத்தில் குளிர்ச்சி நிலவுவதால் உடலுக்கு குறைந்த அளவிலேயே திரவம் தேவைப்படும் என்று அர்த்தமல்ல. குளிர்காலத்தில் வியர்வை குறைவாக சுரக்கும். நம்மைச் சுற்றியுள்ள காற்றும் உலர்ந்து போய்விடும். அதனால் சிறுநீர் மூலம் திரவ இழப்பு அதிகரிப்பதால் உடல் அதிக ஈரப்பதத்தை இழக்கும். அதனை ஈடு செய்வதற்கு நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆதலால் குளிர் காலத்தில் தண்ணீர் உட்கொள்வதை குறைக்காதீர்கள். வெப்பநிலை குறைவாக இருக்கும்போதும் நீரிழப்பு ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.   உடலில் நீர்ச்சத்தை பேணுவதற்கு வெறுமனே தண்ணீர் மட்டும் பருகுவதும் கூடாது. உணவு பட்டியலில் பழங்களை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். ஆரஞ்சு, தர்பூசணி, அன்னாசி மற்றும் பீச் போன்ற திரவ சத்து நிறைந்த பழங்கள், பிரோக்கோலி போன்ற காய்கறிகளை உட்கொள்ளலாம். இது தினசரி உணவில்

சருமத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும் பூசணிக்காய் ‘பேசியல்’

Image
பூசணியில் உள்ள சத்துக்கள் ‘கொலாஜென்’ உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம் சருமம் இளமையாக இருக்கும். பூசணியைக் கொண்டு செய்யக்கூடிய சில பேசியல்கள் உங்களுக்காக...   பூ சணியில் உள்ள என்சைம் மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் போன்றவை, இறந்த செல்களை நீக்கி சருமப் பொலிவை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை, சுருக்கங்கள் வராமல் தடுத்து சருமத்தை மிருதுவாக்கும். பூசணியில் உள்ள சத்துக்கள் ‘கொலாஜென்’ உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம் சருமம் இளமையாக இருக்கும். பூசணியைக் கொண்டு செய்யக்கூடிய சில பேசியல்கள் உங்களுக்காக...   சரும நிறத்தை அதிகப்படுத்துவதற்கு… தோல் நீக்கிய பூசணி - 1 துண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் - ½ தேக்கரண்டி, தேன் - 1 தேக்கரண்டி, ஒரு முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். சிறிய பாத்திரத்தில் விதை நீக்கப்பட்ட பூசணியைப் போட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும். அதில் மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து, கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி துடை

காது கேளாத தந்தையுடன் முதல் முறையாக சைகை மொழியில் பேசும் மகள்; “க்யூட் வீடியோ” – நெகிழும் நெட்டிசன்கள்

Image
  முதன்முறையாக சைகை மொழியில் தன்னுடைய மகள் பேசியதை நினைத்தும் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார் மேடியின் தந்தை. பி றந்து 19 மாதங்களே ஆன மேடிசன் என்ற பெண் குழந்தையின் தந்தை ஒரு மாற்று திறனாளி. சைகை மொழி மூலமே தன்னுடைய கருத்துகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள முடியும். தன்னுடைய மகள் மேடிசனுடன் தந்தை ஜச்சாரி சமீபத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்பாவிற்கு முன்னாள், கையில் இரண்டு பொருட்களை வைத்த வண்ணம் நடந்து சென்ற மேடிசன் திடீரென கையில் இருந்த பொருட்களை கீழே வைத்துவிட்டு, தந்தையைப் பார்த்து சைகை மொழியில், அங்கே ஒரு குட்டிப்பாப்பா அழுது கொண்டிருக்கிறாள் என்று மேடிசன் கூறியுள்ளார். மேடிசனுக்கு காதுகள் நன்றாக கேட்கும். ஆனாலும் தன்னுடைய தாயும் தந்தையும் உரையாடிக் கொள்ளும் பழக்கத்தை பார்த்து நிறைய கற்றுக் கொண்ட மேடிசன் தக்க நேரத்தில் தன்னுடைய தந்தையிடம் அருகில் என்ன நடக்கிறது என்பதை முதன்முறையாக கூறியுள்ளார். பல வயது வந்தவர்களும் சைகை மொழியை கற்றுக் கொள்ள திணறும் போது இந்த குட்டிச்சுட்டி உடனே கற்றுக் கொண்டதை குறித்து நெட்டிசன்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அ

வேற லெவல் எனர்ஜி… தமிழ் பாட்டுக்கு பெங்களூருவில் டான்ஸ் ஆடிய கேரளப் பெண்!

Image
பெங்களூரு மால் முன்பு கேரளப் பெண் தமிழ் பாடலுக்கு மாஸ் நடனம் ஆடிய வீடியோவைப் பார்ப்பவர்கள் ப்பா… என்னா டான்ஸ் வேற லெவல் எனர்ஜி என்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பெங்களூருவில் ஒரு ஷாப்பிங் மால் முன்பு கேரள மாடலிங் பெண் பிரியங்கா ஷெனாய் மேனன் தமிழ் பாடலுக்கு ஆடிய டான்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இவருடைய டான்ஸைப் பார்த்த நெட்டிசன்கள் வேற லெவல் எனர்ஜி என்று அவரைப் பாராட்டி வருகின்றனர். ‘யாத்தி யாத்தி’ யாசின் நிசார், அனுராதா ஸ்ரீராம் மற்றும் அபிஷேக் சிஎஸ் ஆகியோர் பாடிய பிரபலமான தமிழ்ப் பாடல். இந்த பாடலுக்கு பிரியங்கா ஷெனாய் மேனனின் டான்ஸ் வீடியோவை இதுவரை 50,000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 5,000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். அதைவிட, இந்த டான்ஸ் வீடியோவைப் பார்ப்பவர்களுக்கும் அவருடைய எனர்ஜியைக் கடத்தும் வண்ணம் உள்ளது. ALSO READ :  இந்த பூனைக்கு மட்டும் 4 காது எப்படி?… இணையத்தை கலக்கும் துருக்கி மிடாஸ்…! சமூக ஊடகங்களின் காலத்தில் ஒவ்வொரு நாளும் பல கொண்டாட்டமான வீடியோக்கள் வைரலாகி பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த மாடலிங் பெண் பிரி

இந்த பூனைக்கு மட்டும் 4 காது எப்படி?… இணையத்தை கலக்கும் துருக்கி மிடாஸ்…!

Image
  4 காதுகளுடன் பிறந்துள்ள மிடாஸ் பூனை தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் கலக்கி வருகிறது. ம ரபணு மாற்றத்தால் இரண்டு செட் காதுகளுடன் பிறந்த துருக்கியைச் சேர்ந்த மிடாஸ் என்ற பூனை தற்போது இணையத்தை கலக்கிறது. பிறந்த நான்கு மாதம் ஆனா ‘மிடாஸ்’ சமூக ஊடகங்களில் 73,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களுடன் வலம் வருகிறது. துருக்கியின் அங்காராவில் ஐந்து உடன்பிறப்புகளுடன் பிறந்தது தான் இந்த இளம் மிடாஸ் பூனை. இந்த கியூட் பூனையை கேனிஸ் டோஸ்மெசி மற்றும் அவரது குடும்பத்தினர் தத்தெடுத்துள்ளனர். அவர்கள் மிடாஸை பார்த்தவுடனே அதன் மீது காதல் கொண்டதாகவும், அதன் தனித்துவமான நிலை காரணமாக ஒரு வீட்டைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் தடைபடும் என்ற கவலையில் உடன் அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். “நாங்கள் ஒரு பூனை வாங்க வேண்டும் என நினைக்கவில்லை. தெருவில் ஆதரவு இல்லாமல் இருக்கும் ஒரு பூனையையே மீட்க வேண்டுமென நினைத்தோம். ஆனால், கடைசியாக மிடாஸை தத்தெடுத்துக்கொண்டோம். ” என கேனிஸ் டோஸ்மெசி கூறியுள்ளார். ஃபிரிஜியாவின் புராண ராஜாவின் பெயரில் இருந்து வந்ததுதான் மிடாஸ். கழுதைக் காதில் சேணம் போடப்பட்டிருந்தால

சொல் பேச்சு கேக்கும் கரடி; மாஸ் வீடியோ

Image
  கதவை பாதிதூரம் இழுத்த பிறகு, குளிர் அடிக்கிறது. எனவே நீ கதவை முழுமையாக மூடு என்று உத்தரவு பிறப்பிக்க உடனே கரடி தன்னுடைய வாயால் அந்த வீட்டுக் கதவை முழுமையாக மூடிவிட்டு அங்கிருந்து சென்றது. அ மெரிக்காவின் ஊரக பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கரடிகள் வந்து செல்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இங்கே ஒரு கரடி ஒரு பெண்ணுடன் நட்பாக பழகுவது மட்டுமின்றி, அந்த பெண் சொன்ன பேச்சைக் கேட்டு கதவை அடைத்துவிட்டு சென்றுள்ளது. வெர்னான் பகுதியில் வசித்து வரும் நபர் சூசன். வீட்டிற்கு வெளியே ஏதோ சத்தம் கேட்கிறது, ஒரு வேளை மழையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை போக்கிக் கொள்ள வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். அங்கே கரடி ஒன்று அமைதியாக நின்று கொண்டிருக்கிறது. நாம் கூட என்னமோ எதோ என்று பதறிச் சென்று பார்த்தால், அந்த பெண், என்னுடைய வீட்டுக் கதவை மூடிவிடு என்று கரடியிடம் கூற, கரடியோ தன்னுடைய வாயால் அந்த கதவை மூடியும் விட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கதவை பாதிதூரம் இழுத்த பிறகு, குளிர் அடிக்கிறது. எனவே நீ கதவை முழுமையாக மூடு என்று உத்தரவு பிறப்பிக்க உடனே கரடி தன்னுடைய வாயால் அந்த வீ

பொம்மை என நினைத்து நிஜ முதலையிடம் சிக்கிய நபர்… வைரல் வீடியோ

Image
  செல்பி எடுக்க சென்ற நபரை முதலை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பி லிப்பைன்ஸ் நாட்டில் பிறந்தநாளை கொண்டாட கேளிக்கை பூங்காவிற்கு சென்ற நபரை முதலை கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, பூங்காவின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்வி எழும்பியுள்ளது. நெஹிமியாஸ் சிப்பாடா என்பவர், தனது பிறந்தநாள் கொண்டாட ககாயன் என்ற பகுதியில் உள்ள அமயா கேளிக்கை பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த சிறிய நீச்சல்குளம் போன்ற இடத்தில், முதலை மிதப்பது போல் இருந்துள்ளது. அசையாமல் இருப்பதை பார்த்து பொம்மை என நினைத்த சிப்பாடா, செல்பி எடுப்பதற்காக தண்ணீருக்குள் இறங்கியுள்ளார். முதலை அருகில் நின்றுகொண்டு செல்பி எடுக்கையில், முதலை மீது கை வைத்துள்ளார். அப்போது தான், அது உண்மையான முதலை என தெரியவந்துள்ளது. உடனடியாக சுதாரித்து கொண்டு வெளியே வருவதற்குள் அவருடைய இடது கையை முதலை நன்றாக பிடித்துகொண்டுள்ளது. பின்னர், சிறிது நேர போராட்டத்திற்கு பின் வெளியே வந்துவிட்டார். முதலையிடமிருந்து அந்நபர் கதறியப்படி ரத்தம் வடிந்தப்படி தப்பித்து வெ

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!