நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சிங்கப்பூரில் இரண்டு உலக சாதனைகள்

கே.கே.பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 14 ஆண்டுகளாக மருந்தக தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார் மில்லத் அகமது.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வின்றி உழைத்து வருகிறார். ஊரடங்கு காலகட்டத்தில், இந்தியாவில் இறந்துபோன தனது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனதால், அவர் பெரிதும் மனமுடைந்தார். அதிலிருந்து மீள எழுதத் தொடங்கியவர், 'அமராவதி' என்ற வரலாற்று நாடகத்தை எழுதி நூலாக மாற்றினார். அது விரைவில் அறிமுகம் காண உள்ளது.

தற்போதைய கோவிட்-19 சூழலில் இருந்து தனது மனநிலையை மாற்றவும், மற்றவர்களை ஊக்குவிக்கவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் யோசித்தார். டிசம்பர் 2020ல் நேரடி பாடல் இசையமைப்பு பதிவு நிகழ்வை உருவாக்கி, இயக்கி ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார். ஜூன் மாத பள்ளி விடுமுறையின் போது தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான நீதிக்கதை சொல்லும் போட்டியை நடத்தி, பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் புத்தகப் பரிசுகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து சிங்கப்பூர் சார்பாக தனி நபர் சாதனைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். கோவிட்-19 தொற்று பாதிப்பால் உலகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது கனவு நனவாகும் முன்பே இறந்து போயினர். அதை மனதில் வைத்து ஆங்கிலத்திலும், தமிழிலும் ஐந்து வார்த்தைகளில் இறந்தவர் தனது கனவுகளைத் தோண்டி எடுக்கிறார் மிகச்சிறிய கதையை எழுதி புதிய உலக சாதனை படைத்தார்.

நடிப்பு (ஒரே ஒரு பாத்திரம்), ஒப்பனை, உடைகள், கலை, உதவி ஒளிப்பதிவு, பின்னணி, ஒலிக்கலவை, தலைப்புகள், தயாரிப்பு வடிவமைப்பு, எடிட்டிங், கதை, திரைக்கதை, வசனம், பாடல் வரிகள், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என 16 பொறுப்புகளைத் தன்முனைப்புக் குறும்படமான 'அறி'யில் செய்துள்ளார். இதன் மூலம், ஒரு குறும்படத்தில் அதிக பொறுப்புகளைச் செய்த ஒரே நபர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்தார்.

மேலும் இந்தக் குறும்படம் சிங்கப்பூர் திரைப்பட விழா விருது 2021 மற்றும் நோபல் சர்வதேச திரைப்பட விழா விருது 2021 வென்றது.

இந்த இரண்டு சாதனைகளும் அக்டோபர் 2021 இல் கலாமின் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த உலக சாதனைகளைப் பாராட்டி சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் சார்பாக, கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!