நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பேடிஎம் நிறுவன வருவாய் இத்தனை கோடிகளா?

இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பேடிஎம் நிறுவன வருவாய் அறிக்கை வெளியாகி இருக்கிறது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் பேடிஎம் நிறுவனம் இண்டர்நெட் மூலம் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும் வசதி, விமான டிக்கெட், ரெயில் டிக்கெட், பஸ் டிக்கெட் போன்றவற்றுக்கு கட்டணம் செலுத்தும் வசதி, செல்போன், டி.டி.ஹெச். போன்ற சேவைகளை ரீசார்ஜ் செய்யும் வசதிகளை வழங்கி வருகிறது.

பேடிஎம் நிறுவனம் 2021-2022 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

பேடிஎம் நிறுவனத்துக்கு இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் 64 சதவீதம் வருவாய் உயர்ந்து இருக்கிறது. இதன் மூலம் ரூ.1,090 கோடி வருவாய் கிடைத்துள்ளது. யு.பி.ஐ. அல்லாத பண பரிவர்த்தனை சேவை இந்த காலாண்டில் 54 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நிதி சேவை மற்றும் இதர வருவாய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
பரிவர்த்தனை மற்றும் நிதியில் சேவைப்பிரிவு மூலம் வருமானம் 69 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து ரூ.842.60 கோடியாக உயர்ந்துள்ளது.
 இதேபோன்று வர்த்தகம் உள்ளிட்ட வேறு சேவைப்பிரிவு வருமானம் 47 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.243.80 கோடியாக உள்ளது.

பை நவ் பே லேட்டர் (இப்போது வாங்குங்கள், பணத்தை பின்னர் செலுத்துங்கள்) என்ற திட்டத்தின் மூலம் நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை பேடிஎம் அறிமுகம் செய்து இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் இரண்டாவது காலாண்டில் 28 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இது, கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 714 சதவீதம் அதிகம் ஆகும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!