நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ரூ.11.25 லட்சத்திற்கு விலை போன ஆடு! சுவாரசியமான சம்பவம்

 முன்னதாக 12 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புக்கு ஒரு ஆடு விலை போனதே சாதனையாக இருந்தது.இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.


நியூ சவுத் வேல்ஸ்,

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஒரு  சுவாரசியமான சம்பவம் அரங்கேறி உள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த ஆண்ட்ரூ மோஸ்லி எனும் நபர் காட்டு ஆடுகளை மேய்த்து விற்று வருவதை தொழிலாக கொண்டவர்.


நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கோபார் நகரத்தில் மரக்கேஷ் என பெயரிடப்பட்டுள்ள ஆட்டுக்கிடாவை 11.25 லட்ச ரூபாய்க்கு (21,000 ஆஸ்திரேலிய டாலர்)  அவர் வாங்கியுள்ளார்.

முன்னதாக 12 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புக்கு ஒரு ஆடு விலை போனதே சாதனையாக இருந்தது. இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

இது குறித்து ஆண்ட்ரூ மோஸ்லி கூறுகையில், “மிக குறைந்த அளவிலேயே காட்டு ஆடுகள் உலகில் உள்ளன. ஆட்டிறைச்சிக்காக அதிக அளவில் காட்டு ஆடுகள் கொல்லப்படுவது இதற்கான காரணமாக இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு அதிக விலைக்கு இந்த ஆடு விற்பனை ஆகியுள்ளது”  என கூறியுள்ளார். 

விவசாயிகள் பெரும்பாலும் சொந்தமாக ஆடுகளை வளர்த்து அவற்றின் மூலமாக இனப்பெருக்கம் செய்ய வைத்து ஆடுகளின் பெருக்கத்தை அதிகரித்து வருகின்றனர். இந்த முரட்டு ஆட்டுக்கிடா இனப்பெருக்கம் செய்யும் திறன் அதிகம் கொண்டதாக பார்க்கப்படுகிறது. எனவே, தான் இதை அவர் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். 

மோஸ்லி தனது மிகப்பெரிய பண்ணையில் இப்போது புதிய வரவாக இந்த ஆட்டை சேர்த்துள்ளார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!