நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உயிருடன் வேட்டையாடிய பூனை! இறந்து போனது போல நடித்து பறந்த போன வாத்து....வைரலாகும் வீடியோ

பூனையிடம் சிக்கிய வாத்து ஒன்று உயிரிழந்ததைப் போன்று நடித்து பூனையின் பிடியில் இருந்து தப்பி பறந்துள்ளது.



இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வாத்து இறந்து விட்டதாக நினைத்த பூனை, அதனை வாயால் கவ்வி இழுத்து வருகிறது.

ஒரு கட்டத்தில் வாத்தை பூனை பிடித்து அழுத்துகிறது. இருப்பினும் மூச்சை அடக்கிக் கொண்டு வாத்து அசைவற்று கிடந்தது.

பின்னர், பிடி லேசானதையும், பூனையின் கவனம் சிதறியதையும் உணர்ந்த வாத்து, சுதாரித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தது உயிர் பிழைத்தது.     

 ALSO READ : கண்களை ஏமாற்றும் ‘கல் மீன்’

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!