நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வைரத்தை தேட சிங்கத்தின் குகைக்குள் நுழைந்த மனிதன்! சிங்கமும் வெயிட்டிங்!

 உயிரையே பயணம் வைத்து வைரத்தைக் கண்டுபிடிக்க சிங்கத்தின் இடத்திற்குள் நுழைந்த இளைஞர்... நடந்தது என்ன? 

மீப காலங்களில் சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன, அவற்றில் வித்தியாசமான வீடியோ சிங்கத்தின் குகைக்குள் நுழைய முயலும் இளைஞனின் வீடியோ. 

ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில், ஆப்பிரிக்க சிங்கம் வைக்கப்பட்டுளள பகுதி மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி. அது யாரும் செல்வதற்கு தடை செய்யப்பட்ட பகுதி.  சிங்கம் வைக்கப்பட்டிருக்கும் பிரத்யேக அடைப்பிற்குள் 31 வயது நபர் நுழைந்துவிட்டார். 

நவம்பர் 23 ஆம் தேதி ஜி சாய் குமாய் என்ற நபர் நேரு மிருகக்காட்சிசாலைக்கு சென்றார். அங்கு சிங்கம் வைக்கப்பட்டிருக்கும் வளாகத்திற்குள் அவர் செல்ல திட்டமிட்டார். அந்த இடத்திற்கு சென்ற அவர், சிங்கம் இருக்கும் இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் ஒரு பாறையில் அமர்ந்துக்கொண்டிருந்தார். 

அவரின் இந்தச் செயலைக் கண்டு பயந்துபோன அங்கிருந்த பார்வையாளர்கள் அலறத் தொடங்கினார்கள். அந்த அதிசய நபரை உள்ளே குதிக்க வேண்டாம் என்று கூச்சலிட்டனர். சிங்கம் அங்கிருந்து உள்ளே சென்ற பிறகு நுழைவதற்காகவே காத்துக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். வைரங்களைத் தேடி மனிதன் மிருகக்காட்சிசாலையில் நுழைந்த மனிதரால் ஏற்பட்ட சலசலப்பு, உயிரியல் பூங்கா அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு வர வைத்தது.

அவரை மீட்டு போலீசில் ஒப்படைத்த அதிகாரிகள், காவல்துறையில் புகார் அளித்தனர். இதுகுறித்து நேரு விலங்கியல் பூங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள சிங்கத்தின் இடத்திற்குள் நுழைந்த ஜி சாய், பாறைகளின் மீது நடந்து சென்று கொண்டிருந்தார். ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில், சிங்கங்கள் சுதந்திரமாக உலாவும் பகுதிக்குள் செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் (prohibited area) நுழைந்த நபரை உயிரியல் பூங்கா ஊழியர்கள் பிடித்து பகதூர்புரா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்” என்று கூறப்பட்டுள்ளது. 

குமாயி என்ற அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது அவரது செயலுக்கான காரணம் தெரிய வந்தது. காரணம் என்ன தெரியுமா? சிங்கம் இருக்கும் பகுதிக்குள் வைரம் இருப்பதாகவும், அதை தேடுவதற்காக உள்ளே செல்ல முயன்றதாகவும் அவர் கூறுகிறார் என தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

மன உளைச்சலில் காணப்படும் அந்த நபரைப் பற்றி அவரது பெற்றோருக்குத் தெரிவிக்கிறோம். அவருடைய மனநிலையையும் பரிசோதிப்போம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


ALSO READ : ரூ.11.25 லட்சத்திற்கு விலை போன ஆடு! சுவாரசியமான சம்பவம்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!