நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

’மிராக்கிள் மைக்’ தலையில்லாமல் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த சேவல்

 அமெரிக்காவில் தலைவெட்டப்பட்ட சேவல் ஒன்று, முண்டமாக 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. 


அமெரிக்காவில் தலைவெட்டப்பட்ட சேவல் ஒன்று, முண்டமாக 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இந்த சேவலின் பெயர் மைக் என்பதால் ’மிராக்கிள் மைக்’ என்ற அழைக்கப்படுகிறது. இந்த சேவலின் நினைவாக, அமெரிக்காவில் ஆண்டுதோறும் ’ஹெட்லெஸ் சிக்கன்’ திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.

இந்த செய்தி உங்களுக்கு வியப்பாக தோன்றலாம். ஆனால், உண்மை, அதிசயம். தலையில்லாமல் எப்படி வாழ முடியும்? என நீங்கள் யோசிக்கலாம். ஆனால், அப்படியான ஒரு அதிசய சேவல் 18 மாதங்கள் உயிருடன் இருந்துள்ளது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கொலராடோ பகுதியில் ப்ரூட்டா என்ற இடத்தில் லாய்ட் ஓல்சென் மற்றும் கிளாரா தம்பதியினர் பண்ணை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இறைச்சி வியாபாரமும் செய்து கொண்டிருந்த அவர்கள், ஒரு நாளில் 40 முதல் 50 கோழிகளின் தலையை முதலில் வெட்டியுள்ளனர்.


அப்போது, அனைத்துக் கோழிகளும் இறந்துவிட, ஒரே ஒரு கோழி மட்டும் உயிருடன் இருந்துள்ளது. அந்த சேவலும் சிறிது நேரத்தில் இறந்துவிடும் என எண்ணியவர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் கோழி இறக்கவில்லை. உயிருடன் இருந்துள்ளது. பெட்டியில் இருந்து எடுத்து சேவலை வெளியே விட்டபோது தத்தித் த்ததி நடக்கவும் செய்துள்ளது. இதனை அவர்களால் நம்ப முடியவில்லை. பின்னர், அந்த சேவலுக்கு மைக் எனப் பெயர்சூட்டி வளர்க்கத் தொடங்கினர்.

ஓல்சென் மற்றும் கிளாரா தம்பதி வளர்த்த தலையில்லாத சேவல் குறித்த செய்தி அமெரிக்கா முழுவதும் வேகமாக பரவியது. பேராசிரியர்கள் முதல் கண்காட்சி அமைப்பாளர்கள் வரை என அவர்களின் புகழ் பரவியது. ஹோப் வேட் என்பவர் அந்த சேவலைப் பார்த்து ‘மிராக்கிள் மைக்’ என பெயர் சூட்டினார். யூடா பல்கலைக்கழகத்திற்கு சோதனைக்காக அந்த சேவல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தலை வெட்டியபிறகு சேவல் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.  அவர்களுக்கும் வியப்பாக இருந்தது. அதேநேரத்தில் சேவல் உயிருடன் இருப்பதை அவர்கள் உறுதி செய்தபிறகு கண்காட்சி, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் மிராக்கிள் மைக் கலந்து கொண்டது. இதனால், ஓல்சென்னுக்கும், கிளாராவுக்கும் பொருளாதார ரீதியாக பெரும் ஆதாயம் கிடைத்தது. 


மிராக்கிள் மைக்கிற்கு தினமும் திரவ வடிவில் உணவு செலுத்தப்பட்டன. சொட்டு மருந்துகள் போல் உணவுக்குழாய்க்குள் நேரடியாக உணவு கொடுக்கப்பட்டது. தொண்டையில் அடைப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க, ஊசி செலுத்தும் சிரிஞ்சு மூலம் உணவுக் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டது. 1947 ஆம் ஆண்டு அரிஜோனாவின் ஃப்ரின்க்ஸில் மிராக்கிள் மைக் சுற்றுப் பயணத்தில் இருந்தபோது, எதிர்பாரதவிதமாக இறந்து விட்டது. உணவுக் குழாய்க்குள் அடைப்பு ஏற்பட்டபோது சிரிஞ்சு வைத்து அந்த அடைப்பை எடுக்க ஓல்சென் முயன்றுள்ளார். அவரின் முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைக்காததால் மிராக்கிள் மைக் இறந்து விட்டது. இருப்பினும், தலையில்லாமல் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த சேவல் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இன்றளவும் இருக்கிறது.

தலையில்லாமல் சேவல் இருந்தது குறித்து ஆய்வாளர் ஒருவர் பேசும்போது, சேவல் மற்றும் கோழியின் முழுத் தலையானது, அதன் கண்களுக்கு பின்னால் இருக்கும் எலும்பு அமைப்பின் பின்புறமுள்ள சிறிய பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மிராக்கிள் மைக்கின் தலை வெட்டுப்படும்போது, அலகு உள்ளிட்டவை வெட்டப்பட்டு, 80 விழுக்காடு மூளை உள்ளிட்ட உறுப்புகள் செயலிலேயே இருந்ததால் உயிர் வாழ முடிந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.


ALSO READ : 2022-ஆம் ஆண்டு உலகில் என்ன நடக்கும்? பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்பு

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!