நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வருத்தம் தரும் வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகளே ஒரு சுமை என்றால், அதிக அளவில் சாப்பிடுவது இன்னொரு சுமையாகி உறுப்புகளை 'ஓவர் டைம்' வேலை செய்ய வைக்கிறது.
இன்று காலத்தில் வறுத்த உணவுகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் ஏற்படும் ஆபத்துக்களை அவர்கள் சிந்திப்பதில்லை. இதுமட்டுமின்றி பீட்சா மற்றும் துரித உணவு வகைகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுவை தெரிய வேண்டும் என்பதற்காக, இந்த உணவுகளில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. நாக்கின் சுவையை மட்டும் மதித்து தொடர்ந்து இதனையே பழக்கமாக்கி விடுகின்றனர்.

சுவையான உணவு சாப்பிட தூண்டும், சந்தோஷம் கொடுக்கும் என்பதால் அனைவரும் அதனையே நாடுகிறோம். உணவில் எண்ணெய் பயன்பாடு அதிகமானால் ஆபத்தை நீங்களே வரவேற்பதாக அர்த்தம். உணவுகளை வறுத்து தயார் செய்ய தொடங்கும் போதே உடல் வருந்த தொடங்கி விடும். உணவுகளை தீயில் அதிக நேரம் சூடாக்கி எண்ணெய் சேர்த்து மசாலா பொருட்களை அள்ளித்தெளிக்கும் போது நாக்கில் எச்சில் ஊற தொடங்கி விடும். கண்டிப்பாக சுவையும் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த வகை உணவுகளை தேவைக்கு அதிகமாகவே வயிற்றுக்குள் சேர்த்து வைப்பார்கள்.

வறுத்த உணவுகளே ஒரு சுமை என்றால், அதிக அளவில் சாப்பிடுவது இன்னொரு சுமையாகி உறுப்புகளை 'ஓவர் டைம்' வேலை செய்ய வைக்கிறது. அதன் பிறகு நோய்கள் எந்தெந்த வகையில் எல்லாம் தோன்ற முடியுமோ? அப்படியெல்லாம் வெளிப்படத் தொடங்கி விடுகிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!