நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரு நாளைக்கு 70 முறை வாந்தி எடுக்கும் வினோத பெண் - வெளியான அதிர்ச்சி காரணம்

 உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு விசித்திரமான சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அதிலும், விசித்திரமாக நோயால் பாதிக்கப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையுமே ஏற்படுத்துகிறது.


அந்த வகையில், இங்கிலாந்தின் போல்டனில் வசிக்கும் லீன் வில்லியன்(39) என்ற பெண் ஒருவர் காஸ்ட்ரோபரேசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நோயினால், அப்பெண்ணின் உடம்பில் செரிமானம் ஆன உணவு வாந்தி மூலம் வெளியேறுகிறது.

இதனால்,அவர் ஒரு நாளில் 70 முறை வாந்தி எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சிறுவயதிலிருந்தே தனக்கு உடல்நிலை சரியில்லை என்று லீன் கூறினார். குழந்தைகளைப் பெற்ற பிறகும், இந்த நோயைக் கண்டறிய முடியவில்லை.

ஆனால் எனக்கு காஸ்ட்ரோபரேசிஸ் இருப்பது கண்டறியப்படுவதற்கு முன்பு, நான் மிகவும் வருத்தமாகவும் நோய்வாய்ப்பட்டதாகவும் இருந்தேன். மேலும், நான் எதைச் சாப்பிட்டாலும் அல்லது குடித்தாலும், வாந்தி மூலம் வெளியே வந்துவிடும் என சோகத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

இந்த அரிய நோய் பிரச்சினையால் அவர் வேலையை விட்டு வெளியேற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்.

இதுமட்டுமின்றி, காஸ்ட்ரோபரேசிஸ் நோய் என்பது வயிற்றை காலியாக்குவதைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் மற்றும் தசைகளின் பிரச்சனையின் விளைவாகும். இவை தொடர்ச்சியான வாந்தி, வயிறு வீக்கம், எடை இழப்பு மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.    


ALSO READ : பாட்டில் தண்ணீரின் விலை 44 லட்ச ரூபாய்! இது தண்ணி இல்ல, குடிநீர் தான்!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!