நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சமூக வலைத்தளங்களில் மூழ்குவதைத் தவிர்ப்பது எப்படி?

 உங்களது தனிப்பட்ட தகவல்களை சமூக வலைத்தள கணக்குகள் ஆரம்பிக்கும்போது பகிர்ந்தால், அதை பாதுகாப்பான பகுதியில் வைத்திருக்கிறீர்களா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


றிவை விரிவு செய்யவும், உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளவும், புதிய தொடர்புகளை உருவாக்கவும், கருத்துகளைத் தெரிவிக்கவும், பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கவும் என சமூக வலைத்தளங்களின் நன்மைகள் ஏராளம். வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தலைமுறையைச் சேர்ந்தவர்களும், இன்று சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

இதில் நிறைய பேர், ஒரு கட்டத்துக்கு மேல் சமூக வலைத்தளங்களை கட்டுப்பாடோடு பயன்படுத்தாமல், அளவுக்கு அதிகமாக அதில் மூழ்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வேலை, குடும்பம், உறவுகள் போன்றவற்றைத் தவிர்த்து, சமூக வலைத் தளங்களே கதி எனும் நிலைக்கு மாறி விடுபவர்களும் உண்டு. இதில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம் என்று பார்ப்போம்.

‘கவன ஈர்ப்பு’ என்பதே, பலரையும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாக மாற்றுகிறது. எனவே, அவற்றில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? எதற்காக உபயோகப்படுத்துகிறீர்கள்? இதனால் உங்களது மற்ற வேலைகள் பாதிக்கப்படாமல் இருக்கிறதா? என்பதை கவனித்துப் பாருங்கள். அதைப் பொறுத்து, முடிவு எடுங்கள்.

மேலே சொன்னபடி செய்தும், சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை என நினைத்தால், ஒரு நாளில் நீங்கள் அவசியம் முடிக்க வேண்டிய செயல்களை உங்களுக்கு நினைவுபடுத்துவதற்கான செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். இந்த செயலி சரியான நேரத்தில் உங்கள் அலுவல்களை குறித்து நினைவுப்படுத்தும். இதன் மூலம் நீங்கள் சமூக வலைத்தளங்களை 
உபயோகிக்கும் நேரத்தைக் குறைத்து, உங்கள் பணிகளைச் செய்ய முடியும்.

தற்போது சமூக வலைத்தளங்கள், பொழுதுபோக்கிற்கான இடம் என்பதைத் தாண்டி, சுயதொழில் செய்யும் நவீன தளமாகவும் மாறி வருகின்றன. குறிப்பாக கொரோனா காலத்தில் பெண்களுக்கு ஏற்ற, எளிதான வியாபாரத் தளமாக பல சமூக வலைத்தளங்கள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. எனவே, நீங்கள் எதற்காக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறீர்கள்? எவ்வாறு அதைக் கையாளுகிறீர்கள்? 
என்பதைக் கவனித்து, அதற்கு ஏற்றாற்போல பயன்படுத்த வேண்டும்்.

உங்களது தனிப்பட்ட தகவல்களை சமூக வலைத்தள கணக்குகள் ஆரம்பிக்கும்போது பகிர்ந்தால், அதை பாதுகாப்பான பகுதியில் வைத்திருக்கிறீர்களா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

முன்பே சொன்னது போல, சமூக வலைத்தளம் என்பது பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, கவன ஈர்ப்பு களமாக மாறும்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு அடிமையாகிறோம். எனவே, வலைத்
தளங்களில் உங்களுக்கு வரும் கவன ஈர்ப்புகள் நிஜமாகவே உங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான அடுத்த நிலைக்குக் கொண்டு செல்கிறதா? என்பதை உணர்ந்து கவனத்துடன் கையாளுங்கள். 



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!