நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆண்களுக்கு அபார நன்மைகளைத் தரும் அத்திப்பழம்! இவ்வளவு நாள் தெரியாம போச்சே?

 அத்திப்பழத்தின் மகத்துவம் தெரிந்தால் இதை தினசரி சாப்பிடாமல் இருக்க மாட்டீர்கள்! அத்தியின் அளப்பரிய பலன்கள்...  


அத்திப்பழத்தை உட்கொள்வது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அத்திப்பழத்தின் நன்மைகள் மற்றும் அவற்றை உட்கொள்ளும் முறை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்... 

அத்திப்பழத்தில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்

துத்தநாகம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு போன்ற தாதுக்கள் அத்திப்பழத்தில்  காணப்படுகின்றன. இது தவிர, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்தும் அத்திப்பழத்தில் ஏராளமாக உள்ளது. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட், நார்சத்து மற்றும் போதுமான கலோரிகளும் இதில் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு நன்மை பயப்பவை. 

ஊறவைத்த 3 அத்திப்பழங்களை தினமும் சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொண்டால் பல நோய்கள் விலகும். அத்திப்பழத்தை தொடர்ந்து உண்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

அத்திப்பழத்தை தொடர்ந்து உட்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படாது. ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதும் உடல் எடையை  குறைக்க உதவுகிறது.அத்திப்பழத்தை சாப்பிட்டால், அதிலிருக்கும் சத்துக்களானது நீண்ட நேரம் பசியை தாங்கும் சக்தியைக் கொடுக்கும்.

இதயம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாய் விளங்குகிறது அத்திப்பழம். நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் பயனுள்ள அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ரத்த அழுத்தத்தைக் (Blood Pressure) கட்டுப்படுத்தவும் உதவுகிறது.


அத்திப்பழத்தை பல விதங்களில் சாப்பிடலாம் என்றாலும், இந்த அருமையான பழத்தை சாப்பிட சரியான வழி என்ன? 

உலர்ந்த அத்திப்பழங்களை தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஊறவைத்த அத்திப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இது உங்கள் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அதேபோல, இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னதாக, அத்திப்பழத்தை பாலில் கலந்து சாப்பிடலாம். அத்திப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, எனவே இது பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இது தவிர, அத்திப்பழத்தை உட்கொண்டால் நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்கலாம். 

இதில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் (Minerals and nutritients) புதிய செல்களை உருவாக்குகின்றன. குறிப்பாக, தொடர்ந்து அத்திப்பழத்தை சாப்பிடும் ஆண்களின் முகத்தில் சுருக்கங்கள் இருக்காது. கூடுதலாக, ஆண்களின் விந்துக்களின் தரத்தை மேம்படுத்துகிறது.


also read : முத்தத்தால் இவ்வளவு நன்மையா! தினமும் முத்தமிடுங்கள்!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!