நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

திருப்பதியில் முடி தானம் செய்யும் வழக்கம் எப்படி தொடங்கியது

 திருப்பதி பாலாஜி கோவிலில் (Tirupati Balaji Temple) பல மர்மங்கள் உள்ளன.


நாட்டின் பணக்கார கோவிலான திருப்பதி பாலாஜியில் (Tirupati Balaji) பல மர்மங்கள் உள்ளன. இந்த கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இருப்பினும், தற்போது கொரோனா காரணமாக இங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் சிறப்பு என்னவெனில், பக்தர்கள் தங்கள் முடியை காணிக்கையாக இங்கு செல்வதுதான். உலகில் வேறு எந்த கோவிலிலும் இது அரிதாகவே நடக்கும். திருப்பதியில் ஒருவர் தானம் செய்யும் முடியை விட 10 மடங்கு முடியை கடவுள் திருப்பி தருவதாக கூறப்படுகிறது. இங்கு முடி தானம் செய்பவர்கள் மீது அன்னை லட்சுமி சிறப்பு அருளுகிறாள் என்பது ஐதீகம். 

பெண்களும் தங்கள் தலைமுடியை தானம் செய்கிறார்கள்

இந்த வெங்கடேசப் பெருமானின் கோவிலில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தங்கள் தலைமுடியை தானம் செய்கிறார்கள். முடியைக் காணிக்கை ஆக்குவதன் மூலம் நம் உயிரையே இறைவனுக்குக் காணிக்கை ஆக்குகிறோம் என்பதே அதன் தாத்பர்யம். பணம், பொருள் ஆகியவற்றைக் காணிக்கை அளிப்பதைவிட முடி காணிக்கை அளிப்பது விசேஷமானதாகக் கருதப்படவும் இதுவே காரணம். திருப்பதி  பாலாஜிக்கு முடியை தானம் செய்து செல்பவர் தனது பாவங்களையும் தோஷங்களையும் முடி வடிவில் விட்டுவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம், கடவுள் எப்போதும் அவர்கள் மீது கிருபையை வைத்திருக்கிறார். வழக்கமாக இங்கு தினமும் 20 ஆயிரம் பேர் தலைமுடி தானம் செய்வார்கள். இதற்காக இங்கு தினமும் 500க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் பணியாளர்கள் தங்கள் சேவையை வழங்கி வருகின்றனர்.

... அதனால்தான் முடி தானம் செய்யப்படுகிறது

திருப்பதியில் முடி தானம் செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் ஆசியைப் பெறுவதற்கும், விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் ஒரு புராணக் காரணம் மறைக்கப்பட்டுள்ளது. புராணத்தின் படி, பண்டைய காலங்களில், பாலாஜியின் தெய்வத்தின் மீது எறும்புகளின் மலை உருவானது. தினமும் ஒரு பசு அந்த மலைக்கு வந்து பால் கொடுத்து விட்டுச் செல்லும். இதனால் ஆத்திரமடைந்த மாட்டின் உரிமையாளர் கோடாரியால் பசுவை கொன்றுள்ளார். இந்த தாக்குதலின் போது, ​​பாலாஜிக்கு தலையில் காயம் ஏற்பட்டது, அதே போல் அவரது தலைமுடியும் விழுந்தது. அப்போது நீளாதேவி உடனடியாகத் தன் தலையில் இருந்து கேசத்தை வேரோடு வருமாறு வலிமையாகப் பிடுங்கினாள். அந்த முடிகளை, முடிகளற்ற பெருமாளின் தலையில் வைத்து, 'தன் பக்தி உண்மையானால், இந்தக் கேசம் ஒட்டிக்கொள்ளட்டும்' என்று வேண்டிக்கொண்டாள். அடுத்த கணம் அந்த கேசம் அவர் தலையில் ஒட்டிக்கொண்டது.

பெருமாள் கண்விழித்தபோது, ரத்தம் வழியும் முகத்தோடு நின்றாள் நீளா. அதைக்கண்டு , நடந்ததை அறிந்துகொண்டு மனம் நெகிழ்ந்தார் பெருமாள். நீளாவின் பக்தியை மெச்சி, அவர் கேட்கும் வரம் தருவதாகச் சொன்னார். பெருமாளே, கலியுகத்தின் முடிவுவரை நீங்கள் இந்த ஏழுமலையில் நின்று அருளப்போகிறீர்கள். அப்போது வரும் பக்தர்கள் என்போல, உங்களுக்கு முடி காணிக்கை தருவார்கள். அப்படி முடி காணிக்கை தரும் பக்தர்களின் குறைகளைப் போக்கி நல்லருள் வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள் நீளா.

தனக்கென எதுவும் கேளாமல், பிறருக்காக வரம் கேட்ட நீளாவைக் கண்டு மனம் மகிழ்ந்த பெருமாள், நீளா, உன் செய்கையின் மூலமும் கேட்ட வரத்தின் மூலமும், எளிய மனிதர்களும் பக்தி செய்து என் அருளைப் பெறும் வழியை நீ ஏற்படுத்திவிட்டாய். இனி எனக்கு முடி காணிக்கை தரும் பக்தர்களின் குறைகளை உடனே போக்கி, அவர்களுக்கு தீர்க்க ஆயுளும் வறுமையற்ற வாழ்வும் அருள்வேன் என்று பதிலுரைத்தார்.

அன்று முதல் பக்தர்கள் பாலாஜி கோவிலில் முடியை தானம் செய்து வருகின்றனர். இன்றும், திருப்பதி பாலாஜி கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு மலை நீளாதாரி மலைகள் என்று அழைக்கப்படுகிறது, மேலும் அதன் அருகே அன்னை நீளா தேவியின் கோயிலும் உள்ளது.


also read : கண்கவர் கண்ணாடி பொருட்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என தெரியுமா..!!!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!