நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குளிர்கால நோய்களை விரட்டும் வெல்ல கலந்த டீ..!!

 குளிர்காலத்தில்  ஏற்படும் பொதுவான உடல நல பிரச்சனைகளையும், நோய்களையும் விரட்ட வெல்லம்  போட்ட தேநீர் குடிக்கலாம்.  


குளிர்காலத்தில் பல சளி, காய்ச்சல் போன்ற பல வகை நோய்களிலிருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ள வெல்ல கலந்த தேநீர் மிகவும் நல்லது. அதை செய்யும் முறை மற்றும் அதன் அளப்பரிய பலன்களை தெரிந்து கொள்ளலாம்.

குளிர்காலத்தில், பெரும்பாலானோர் டீயுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். பொதுவாக மக்கள் சர்க்கரை கலந்து தேநீரை அதிகம் குடிக்க விரும்புகிறார்கள், ஆனால் சர்க்கரையை விட வெல்லம் டீ உங்களுக்கு அதிக நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வெல்லம் கலந்த டீயின் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி இருந்தால், பசும்பாலில் வெல்லம் கலந்து தயாரித்த டீயைக் குடித்தால் நிவாரணம் கிடைக்கிறது.

ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுவது என்ன!

வெல்லத்தில் சூடு அதிகம் என்கிறார்  பிரபல ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி. இது உடலை சூடாக வைத்துக் கொள்வதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் ஒரு வழிமுறையாக கருதப்படுகிறது. சூடான உணவு என்பதால், உடல் எடையும் குறையும். குளிர்காலத்தில் வெல்லம் தேநீர் குடிப்பதால் சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதற்கு இஞ்சி, கருப்பு மிளகு மற்றும் துளசி இலைகளை சேர்த்து வெல்லம் தேநீர் அருந்தலாம். இதனை உட்கொள்வதன் மூலம் இருமல் மற்றும் சளி பிரச்சனையை நீக்கலாம்.

வெல்லத்தில் காணப்படும் சத்துக்கள்

வெல்லத்தில் உள்ள சத்துக்களைப் பற்றி கூறினால், அதில் ஏராளமான வைட்டமின்கள்-ஏ மற்றும் பி, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், சுக்ரோஸ், குளுக்கோஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளன.

வெல்லம் தேநீர் செய்வது எப்படி

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், சுவைக்கு ஏற்ப சிறிது வெல்லம் சேர்க்கவும். இப்போது அதில் கருப்பு மிளகு, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி மற்றும் துளசி இலைகளை சேர்க்கலாம். தேநீரைக் கொதிக்கும் அளவுக்கு இந்தக் கலவையை கொதிக்க வைக்கவும்.
அதிலிருந்து நறுமணம் வர ஆரம்பித்ததும் அதில் சிறிது டீத்தூள் சேர்த்து வடிகட்டவும்.
பால் இல்லாமல் குடிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் பால் சேர்க்க விரும்பினால். பாலை தனியாக சூடாக்கி கலக்கவும்.

வெல்லம் டீ குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

1. வெல்லம் தேநீர் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. 

2. இதனை தொடர்ந்து குடிப்பதும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

3. வெல்லத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை பெறலாம்.

4. உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை வழங்க உதவுகிறது என்பதால், புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

5. வெல்லம் கலந்த டீயை உட்கொள்வதன் மூலம் சளி மற்றும் இருமல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

6. வெல்லம் கலந்த டீ குடிப்பதால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்.

7. வெல்லம் கலந்த டீ குடிப்பதன் மூலம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும்.

8. வெல்லம் கந்த தேநீர் வயிற்றை சுத்தமாக வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

9. வெல்லத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால், வெல்லம் டீ எலும்புகளை வலுப்படுத்தும்.


ALSO READ : ஒல்லியாகறது இவ்வளவு ஈஸியா? இத்தனை நாள் தெரியாமப் போச்சே?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!