நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மழைக்கால அழகுக் குறிப்புகள்

 ழைக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.


ழைக்காலங்களில் சருமம், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்படும். இதன் மூலம் தேமல், அரிப்பு, முகப்பரு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இவற்றைத் தவிர்ப்பதற்கு சருமத்தைத் தூய்மையாக பராமரிப்பது அவசியம். 

தினமும் இரண்டு அல்லது மூன்று முறை தூய்மையான நீரில் முகம் கழுவுவது நல்லது. சருமத்தில் உள்ள இறந்த செல்கள் சருமத்துளைகளை அடைக்காமல் இருப்பதற்கும் மழைக்காலங்களில் சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி செய்யக்கூடிய 5 எளிமையான ‘பேஷியல்'களை காண்போம்.

* முகம் பொலிவு பெறுவதற்கு...

சந்தனத் தூள் - 1 தேக்கரண்டி, ரோஜா 
பன்னீர் - 2 தேக்கரண்டி, 
கஸ்தூரி மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி போன்றவற்றை எடுத்துக்கொண்டு நன்றாகக் கலக்கவும். 
இதை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும்.

* ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு...

ஓட்ஸ் - 2 தேக்கரண்டி, 
ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, 
தேன்- 1 தேக்கரண்டி, 
தயிர் - 2 தேக்கரண்டி இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். 
பின்பு முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

* சிவப்பழகு பெறுவதற்கு...

வெட்டி வேர் (அரைத்தது) - 1 தேக்கரண்டி, 
சிவப்பு சந்தனத்தூள் - 1 தேக்கரண்டி, 
கஸ்தூரி மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி, 
குங்குமப்பூ - ¼ டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, இவற்றுடன் தேவையான அளவு பால் சேர்த்து பசை போல கலந்து கொள்ளவும். 
இதை 10 நிமிடங்கள் ஊறவைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மென்மையாக தடவி மசாஜ் செய்யவும். 
30 நிமிடங்கள் கழித்த பின்பு, குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.

* மிருதுவான சருமத்திற்கு...

ஸ்ட்ராபெர்ரி பழம் - 2 (அரைத்தது), 
முல்தானிமெட்டி - 2 தேக்கரண்டி, 
ரோஜா பன்னீர் - 3 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு மூன்றையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். 
15 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

* அரிப்பு, தேமல் நீங்கி முகம் பளபளப்பு பெறுவதற்கு..

தேன் - 1 தேக்கரண்டி, 
சர்க்கரை - 1 தேக்கரண்டி, 
கற்றாழை ஜெல் - 1 தேக்கரண்டி 
மூன்றையும் நன்றாகக் கலந்து, முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்கள் நீங்கும் வரை மென்மையாக தடவி மசாஜ் செய்யவும். 
பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும். 

பிறகு, கடலை மாவு - 1 தேக்கரண்டி, 
கஸ்தூரி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, 
பால் - 3 தேக்கரண்டி, 
தேன் - 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாகக் கலந்து முகம் முழுவதும் தடவவும். 
30 நிமிடங்களுக்குப் பின்பு, குளிர்ந்த நீரில் கழுவவும்.
பின்னர் பாதாம் எண்ணெய்க் கொண்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்யவும். இதன் மூலம் முகம் அழகு பெறும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!