நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

2022-ஆம் ஆண்டு உலகில் என்ன நடக்கும்? பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்பு

2022-ஆம் ஆண்டு என்ன நடக்கும் என்பதை பாபா வாங்கா கணித்துள்ளது தற்போது வெளியாகியுள்ளது.
பல்கேரியாவைச் சேர்ந்தவர் Baba Vanga. 1991-ல் பிறந்த இவர் தன்னுடைய 12 வயதில் அங்கு ஏற்பட்ட சூறாவளி ஒன்றில் சிக்கி கண்பார்வையை இழந்தார்.

இருப்பினும், தனக்கு கடவுள் எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை கொடுத்திருப்பதாக கூறி வந்தார்.

இதையடுத்து இவர் கடந்த 1996-ஆம் ஆண்டு தன்னுடைய 84 வயதில் உயிரிழந்தார். இவர் உயிரிழப்பதற்கு முன்பு, வரும் ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்பதை கணித்துள்ள இவர், 5079 -ஆம் ஆண்டு உலகம் முடிவுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய கணிப்புகள் சுமார் 80 சதவீதத்திற்கு மேல் உலகில், நடந்துள்ளதால் இவருடைய கணிப்புகள் உலக மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், இவர் 2022-ஆம் ஆண்டு உலகில் என்ன நடக்கும் என்பதை கணித்துள்ளார். அதில், நிச்சயமாக இந்த ஆண்டு ஒரு உண்மையான போர் வெடிக்கும். ஆசிய தலைவர் ஒருவர் அவருடைய தலைவர் அதிகாரத்தில் இருந்து தூக்கிவீசப்படுவார்.

அவரது நாடு ஆயுத மோதலின் களமாக மாறும். இதற்கு ஐரோப்பா அணுவாயுத தாக்குதலின் மூலம் பதிலளிக்கும்.

வானிலை மற்றும் காலநிலையை பொறுத்தவரை இந்த ஆண்டில் அமெரிக்கா மோசமான வறட்சியை எதிர்கொள்ளும். பூமியின் மறுபக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மழை கொட்டி தீர்க்கும்.

சீனாவின் தலைநகரம் தண்ணீரால் பரவும் நோயால் பாதிக்கப்படுவர், இதில் ஏராளமான மக்கள் இறக்க நேரிடும்.

அதே போன்று ஜப்பானை மழை விட்டு வைக்காது, மழை கொட்டி தீர்க்கும். ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஏழ்மையான பகுதிகளை பஞ்சம் அழிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.        


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!