நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரியப் பெண்கள் எப்போதும் அழகாக இருக்க காரணம் என்ன தெரியுமா?

 பொதுவாக கொரியப் பெண்களை பார்க்கும் போது எல்லாருக்கும் ஒருவித பொறாமை காணப்படும். அதற்கு காரணம் அவர்களின் சரும அழகு தான்.


யதானால் கூட சரும அழகை பராமரிப்பதில் கொரியப் பெண்களுக்கு ஈடு இணை யாரும் கிடையாது. பார்ப்பதற்கு அவர்களது முகம், சருமம் கண்ணாடி போல் பளபளக்கும். இது எளிதில் யாரையும் கவர்ந்து விடும்.

இதற்கு காரணம் அவர்கள் தங்கள் சரும அழகை மேம்படுத்த இயற்கை முறை டிப்ஸ்களை பின்பற்றுவது தான்.

ஒவ்வொரு கொரிய பெண்ணும் சரும அழகுக்கென்றே நிறைய அழகு பராமரிப்புகளையும் பாரம்பரிய முறைகளையும் பின்பற்றி வருகிறார்கள். தற்போது அவை என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.


கொரிய பெண்கள் தினமும் முகத்தை ஃபார்ம் க்ளீன்சர் கொண்டு முகத்தை கழுவுகின்றனர். இது முகத்தில் உள்ள தூசிகள், அழுக்குகள், வியர்வை போன்றவற்றை போக்க பயன்படுகிறது. இதை அவர்கள் தினசரி தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.


 கொரியப் பெண்கள் தங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க ஸ்க்ரப்பை பயன்படுத்துகின்றனர்.இதன் மூலம் சருமத்தை புதுப்பிக்க முடியும். இதனால் உங்க சருமம் பட்டு போன்ற தன்மையை அடையும் என்கிறார்கள்.


 கொரியப் பெண்களின் அழகு பராமரிப்பில் டோனர் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. சருமத்தை நன்கு சுத்தம் செய்த பிறகு அவர்கள் சரும pH அளவை சமப்படுத்த அவர்கள் டோனரை பயன்படுத்துகிறார்கள்.


  கொரியப் பெண்கள் தங்கள் முகத்திற்கு பேஸ் மற்றும் எண்ணெய் சார்ந்த சீரம் வகைகளை பயன்படுத்துவது உண்டு. இந்த சீரம் வகைகளை அவர்கள் இயற்கையான பொருட்களைக் கொண்டே தயாரிக்கின்றனர்.


  கொரியப் பெண்கள் தங்கள் சருமத்தை ஈரப்பதமாக்க நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரை பயன்படுத்துகின்றனர். பிறகு வெளியில் செல்வதற்கு முன்பு சன் ஸ்க்ரீனை அப்ளே செய்து கொள்கின்றனர்.



ALSO READ : பெண்களே! சொர சொரப்பில்லாத மென்மையான கால்களை பெற வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!