நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழ வேண்டுமா? இந்த 5 மூலிகைகள் செய்யும் அற்புதம்

 ஆம்லா முதல் ஏலக்காய் வரை, இதுபோன்ற சில மசாலாப் பொருட்கள் உள்ளன, அவை வழக்கமான முறையில் உட்கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதுபோன்ற 5 ஆரோக்கியமான மூலிகைகள் பற்றி இங்கே பார்ப்போம்.


நீங்கள் ஆரோக்கியமாக இருக்க, உங்கள் உணவில் சில மூலிகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவைகள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

உணவு செரிமானத்துடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெந்தயம் உதவுகிறது. நீங்கள் வெந்தயத்தை நீரில் போட்டு காய்ச்சி அதைக் குடிக்கலாம்.

ஆம்லாவில் உள்ள வைட்டமின் சி உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு முடி ஆரோக்கியமாக வளர உதவுகிறது. இதனை தினமும் சாப்பிடுவதால் உங்கள் கண்பார்வையையும் மேம்படும்.

ஆம்லா ஆக்ஸிஜனேற்றியாக வேலை செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

உங்களுக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் பிரச்சனை இருந்தால், ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். ஏலக்காயில் உள்ள எண்ணெய் ஆனது பாக்டீரியா மற்றும் பூஞ்சை கொல்ல உதவுகிறது.

மஞ்சள் உணவில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருள். மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

மஞ்சள் மூட்டு பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும். மூட்டு பிரச்சனையை விரைவாக குணப்படுத்துகிறது.

இலவங்கப்பட்டையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நீங்கள் அதை தேநீர், காபி மற்றும் பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம். 


ALSO READ : பெண்களின் ஹார்மோன் சுரப்பை சீராக்கும் உணவுகள்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!