நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா? இந்த கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது!

இப்போது உதாரணமாக யானை ஒரு முட்டை போடுகிறது. அந்த முட்டையிலிருந்து ஒரு சிங்கம் பிறக்கிறது என்னும் பொழுது அந்த முட்டை யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழும்?
பல ஆண்டுகளாக ஒரு கேள்விக்கு சரியான விடையை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தக் கேள்வி கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்பது தான். இந்த கேள்விக்கு ஒவ்வொருவரிடமும் விடை இருந்துள்ளது. அதேபோல அதற்குரிய விளக்கமும் இருந்துள்ளது. ஆனால் யாரிடமும் இந்த கேள்விக்கான சரியான விடை இதுவரை இல்லை. அதனாலேயே, அறிவியல் ஆய்வுகளில் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பாக இருக்கக்கூடிய இந்த கேள்வி, வேடிக்கையாக, விளையாட்டாகக் கேட்கப்படும் கேள்வியாக மாறியது.

ஆனால், தற்போது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த கேள்விக்கான சரியான விடையை கண்டு பிடித்துள்ளார்கள். முட்டை எதில் இருந்து வருகிறது என்ற கேள்விக்கு சரியான பதில் கோழியில் இருந்துதான் வருகிறது என்பதாகும். ஆனால் அந்தக் கோழியும் ஒரு முட்டையில் இருந்து தானே பிறந்திருக்க வேண்டும்? அப்படி என்றால் அந்த கேள்விக்கான பதில்கள் சுற்றி சுற்றி ஒரே இடத்திலேயே இருந்தன.

நீங்களும் இந்த கேள்விக்கான சரியான பதிலை உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது கண்டுபிடிக்க முயற்சி செய்திருப்பீர்கள் அல்லவா? அதற்கான பதிலும், விளக்கமும் இங்கே.,

விஞ்ஞானிகள் கூற்றுப்படி சிக்கன் அதாவது கோழிக்குஞ்சு தான் முதலில் வந்தது என்று அறியப்படுகிறது. அதாவது ஒரு முட்டை உருவாவதற்கு புரதச்சத்து அவசியம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதைப் பற்றிய ஆய்வுகள், ஒரு கோழி முட்டையை உருவாக்க OV-17 என்ற புரதம் தேவைப்படுகிறது. இந்த புரதம், கோழிக்குஞ்சின் ஓவரியில் தான் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, முட்டையில் இருந்து கோழி வரவில்லை, கோழிக்குஞ்சில் இருக்கும் புரதத்தால் தான் கோழியில் இருந்து முட்டை வந்துள்ளது. இது மட்டுமின்றி, இந்த புரதம் பற்றிய விளக்கத்தையும் விஞ்ஞானிகள் பகிர்ந்துள்ளனர்.

விஞ்ஞானிகள் நாம் எந்த வகையான கோழிக்குஞ்சுகள் பற்றி பேசுகிறார்கள்? கோழிகுஞ்சால் உருவாக்கப்பட்ட கோழிக்குஞ்சா அல்லது கோழிக்குஞ்சுடன் பிறந்த கோழிக்குஞ்சா?

இப்போது உதாரணமாக யானை ஒரு முட்டை போடுகிறது. அந்த முட்டையிலிருந்து ஒரு சிங்கம் பிறக்கிறது என்னும் பொழுது அந்த முட்டை யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழும்? இதன் அடிப்படையில் இரண்டு உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் பொழுது, இருவரின் மரபணுவும் (DNA) அவர்களுடைய குழந்தையில் இருக்கும். ஆனால் இருவரின் மரபணுவும் நூறு சதவிகிதம் அதே போல இருக்காது. மனிதர்களை நாம் உதாரணமாக எடுத்துக் கொண்டாலும், ஒரு குழந்தையின் அப்பா அம்மா ஆகிய இருவரின் மரபணுக் கூறுகளும் இருக்கும். ஆனால் யாருடைய டிஎன்ஏ அதிகம் உள்ளது (Dominate) என்பதைக் கண்டறிவது கடினம்.

மரபணுக்களில் பிறழ்வு ஏற்படும் பொழுது ஒரு புதிய உயிரினம் உருவாகும். முட்டை கருவுக்குள் இருக்கும் செல்களில் இவ்வகையான மரபணு திரிபு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்குஞ்சு போன்ற இருக்கும் விலங்குகள் இனப்பெருக்கம் செய்யும் போது மரபணு திரிபு ஏற்பட்டு தற்போதுள்ள கோழிக்குஞ்சின் DNA கூறுகளுடன் பிறந்துள்ளது. திரிந்த மரபணுவுடன் உருவான முட்டையில் வெளிவந்த வந்தது தான் மரபணு மாறிய முதல் கோழிக்கஞ்சு.

ஆனால், இந்த மரபணு திரிபை நாம் முட்டையிலிருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒரு முட்டையில் ஏற்படும் மரபணு மாற்றம் ஏற்பட்டால் எல்லா முட்டைகளுக்கும் பொருந்தாது. மரபணு மாற்றம் மிகவும் மெதுவாக நடக்கும். இதற்கு பல ஆண்டுகள், பல நூற்றாண்டுகள் கூட ஆகியிருக்கலாம். எனவே, மரபணு மாற்றத்துடன் பிறந்த கோழிக்குஞ்சு தான் தற்போது நாம் பயன்படுத்தக்கூடிய கோழி மற்றும் முட்டையாக காணப்படுகின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!