நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்து பாருங்க: அதிசயத்தை கண்கூடாக அவதானிப்பீங்க

 தினமும் வெந்நீர் குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது. உடலில் தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க பெரிதும் உதவுகின்றது.


இதனை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடனடியாக வியர்வை உடம்பை விட்டு வெளியேறி நச்சு தன்மைகளை விரட்டுகிறது. வெறும் நீரை விட இதில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து குடித்தால் உடல் எடையை குறைக்க உதவும்.

குளிர் காலத்தில் தொண்டை மற்றும் மூக்கு பகுதிகளில் சளியினால் பல பிரச்னைகள் வரும். அப்போது வெந்நீர் குடிக்கும் போது தொண்டைக்கு இதமாக இருக்கும். சரி வாங்க வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.


நன்மைகள்

முகத்தில் அதிகமாக எண்ணெய் பிசுபிசுப்புகள் படிவதால் மற்றும் காற்று மாசு போன்ற காரணங்களால் தான் பருக்கள் வருவதற்கு முக்கிய காரணமாய் இருக்கின்றது. இதனால் தினமும் வெந்நீர் குடித்து வந்தால் இது போன்ற கிருமிகளை அழிக்க உதவுகின்றது.

அசைவம் போன்ற உணவுகளை சாப்பிட்டு முடித்தவுடன் கட்டாயமாக வெந்நீர் குடிக்க வேண்டும். ஆவ்வாறு குடிக்கும் பொழுது செரிமானம் விரைவாக நடக்க உதவி செய்யும்.

நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால் அது பலவிதமான உடல் நலக் குறைவுகளை ஏற்படுத்தும். ஆனால் வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீராக்கும்.

தேவையில்லாமல் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைத்தாலே எடை குறைந்துவிடும். அதற்கு தினமும் காலையில் மிதமான வெந்நீரைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.


ALSO READ : சரும நிறம் சீராக இருக்க இதை செய்யலாம்...

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!