நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கருமையான அடர்த்தியான கூந்தலுக்கு கேரண்டி சொல்லும் எண்ணெய் என்ன எண்ணை?

 நீளமான, கருமை மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டுமானால் இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள், பளபளப்பும் மீண்டும் வரும்


  • கருமையான அடர்த்தியான கூந்தலுக்கு கேரண்டி எண்ணெய்
  • அதிக பசைத்தன்மை கொண்ட எண்ணெய்
  • உடலுக்கு குளிர்ச்சி தரும் எண்ணெய்


முடி உதிரும் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். விளக்கெண்ணெயின் நன்மைகளை தெரிந்துக் கொண்டால் சுலபமாக பிரச்சனையை தீர்க்கலாம்.

ஆமணக்கு எண்ணெய் எனப்படும் விளக்கெண்ணெய் அடர்த்தியானது. மிகவும் அடர்த்தியாக இருப்பதால் அதிக பசைத்தன்மையைக் கொண்டது. 

பொதுவாக தலைமுடிக்கு விளக்கெண்ணெயை யாரும் பயன்படுத்துவதில்லை, ஆனால் கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இந்த எண்ணெயில் உள்ளன.


இது முடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கும் விளக்கெண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ளது. சேதமடைந்த முடியை சரியாக்கி பொடுகை நீக்கும் விளக்கெண்ணெயின் சிறப்புகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.  

ஆமணக்கு எண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம், உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது, இது விரைவான முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. முடி வளராதவர்கள், முடி வறண்டு கணப்படுபவர்கள் மற்றும் இளநரை அதிகம் கொண்டவர்கள் விளக்கெண்ணெயை பயன்படுத்தி நன்மை பெறலாம். 

விளக்கெண்ணெயின் 4 நன்மைகள்

முடியை நீளமாக்கும்

விளக்கெண்ணெயை தொடர்ந்து மசாஜ் செய்வதால் முடி வேகமாக வளருவதோடு வலுவடையும். முடி வளர்ச்சிக்கு, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் சில துளிகள் ஆமணக்கு எண்ணெயைக் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.

முடியை மென்மையாகவும் மிருதுவாகவும் ஆக்குகிறது

விளக்கெண்ணை என்னும் ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த கண்டிஷனர். கற்றாழை ஜெல், எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து முடியின் வேர்களில் தடவி ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். சிறிது நேரம் கழித்து முடியைக் கழுவவும். இது முடியை வலுவாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது.


முடியை வலுவாக்கும்

ஆமணக்கு எண்ணெய் முடியை பலப்படுத்துகிறது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அதனால், முடி உதிர்தல் பிரச்சனை நீங்கி, முடி வேகமாக வளரும்.

தேங்காய் எண்ணெயுடன் கலந்து விளக்கெண்ணெயை பயன்படுத்தலாம். இந்த கலவை எண்ணெயை ஒன்று தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் வரை தலைமுடியில் ஊற விடவும், அதன் பிறகு தலையை கழுவவும்.

பளபளக்கும் கூந்தல்

விளக்கெண்ணெய் முடிக்கு பொலிவைத் தருகிறது. தலைச்சாயம் அதிகமாக பயன்படுத்துவதும், பல்வேறு ரசாயனங்களை கூந்தலில் போடுவதாலும், முடியின் பளபளப்பு மறைந்துவிடும்.

அத்தகைய சூழ்நிலையில், விளக்கெண்ணெய் பயனுள்ளதாக இருக்கும். இதனை தொடர்ந்து முடியில் தடவி வர வேண்டும். இது கூந்தலுக்கு கேடயமாக செயல்பட்டு ரசாயனப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை ஈடுசெய்கிறது.



ALSO READ : உடல் எடை குறைய தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!