நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நீரில் மூழ்கிய பேய் கிராமம்: மீண்டும் வெளியே தெரியும் வைரல் காட்சி.......

 ஸ்பெயினில் நீரில் மூழ்கிய பேய் கிராமம் ஒன்று தற்போது வெளியே தெரியும் ட்ரொன் காட்சி வெளியாகியுள்ளது.


ஸ்பெயின் நாட்டில் போர்ச்சுகல் எல்லையில் 1992ம் ஆண்டு கட்டப்பட்ட Alto Lindoso அணையால் அருகில் இருந்த கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தற்போது குறித்த அணையில் நீர் வற்றத் தொடங்கியதால் கிராமத்தின் சிதிலமடைந்த குடியிருப்புகள் வெளியே தெரிகின்றன.

கட்டடங்கள் உருக்குலைந்து எலும்புக் கூடுபோல் காட்சி அளிப்பதால் பொதுமக்கள் கிராமத்திற்கு பேய் கிராமம் என்று பெயரிட்டுள்ளனர்.


தற்போது இந்த கிராமத்தின் ட்ரோன் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலை ஏற்படுத்தியுள்ளது.



ALSO READ : சிறுவனை நோக்கி படையெடுத்த ராட்சத பாம்புகள்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!