நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இன்று ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள்: அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி அதிமுக சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை வெகுவமர்சையாகக் கொண்டாட அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலைக்கு கட்சி ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்க உள்ளனர்.

அதன்பின்னர் அம்மா நாளிதழ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா சிறப்பு மலரை அவர்கள் இருவரும் வெளியிட உள்ளனர்.

லேடி வெலிங்டன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்துவதுடன், ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவையும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.

அதிமுகவினர் தங்களது இல்லங்களில் தீபம் ஏற்றி அதிமுக-வை காப்பேன் என உறுதிமொழியேற்கும்படி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். ஜெயலலிதாவின் பிறந்த நாள் அரசு விழாவாகவும், பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினமாகவும் முதல் முறையாகக் கொண்டாடப்படுகின்றது.

இதேபோன்று ராயப்பேட்டையில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா அவர் தங்கியிருக்கும் வீட்டிலேயே ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்த உள்ளார்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!