நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

திருமணமானதை மறைத்து இளைஞருடன் காதல்... காதலியின் வீட்டிலேயே உயிரை மாய்த்த இளைஞர்!

திருமணமானதை மறைத்து இளைஞருடன் காதல்... காதலியின் வீட்டிலேயே உயிரை மாய்த்த இளைஞர்!

திருமணமான பெண் ஒருவர் yoyo செயலி மூலம் கல்லூரி மாணவி என கூறி பழக, அந்த பெண், கணவர் குழந்தைகளுடன் வசிப்பதை கண்ட இளைஞர் காதலியின் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தையடுத்த புதுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அம்ரின் . இவரது கணவர் பெயள அஜீஸ் . இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் yoyo என்ற சமூக வலைதளத்தின் மூலம் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்த பூபதி என்பவருடன் அம்ரின் பழகி வந்துள்ளார். பூபதி தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

திருமணம் ஆகாத பூபதியிடத்தில் அம்ரின் காதல் வார்த்தை பேசி வந்துள்ளதாக தெரிகிறது. பூபதியிடம் தன்னை கல்லூரி மாணவி என்றும் தனக்கு திருமணம் நடைபெறவில்லை என்றும் கடந்த 7 மாதங்களாக yoyo செயலி மூலம் அம்ரின் ஆசை வார்த்தைகள் பேசி வந்துள்ளார். இதையடுத்து , அம்ரீனை பார்க்க அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு தெரியாமல் அவரை திருமணம் செய்து கொள்ள தாலியும் வாங்கி சென்றுள்ளார். அப்போது, அம்ரீன் வீட்டில் இல்லை. அவரின் குழந்தைகள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளன. குழந்தைகளிடத்தில் 'நீங்கள் யார் ' என்று பூபதி கேட்டுள்ளார். அப்போது, அம்ரினுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் கணவருடன் வசிப்பதும் பூபதிக்கு தெரிய வந்துள்ளது.

இதனால், பூபதி மிகுந்த மன வேதனையடைந்துள்ளார். மன உளைச்சலுக்குள்ளான அவர் அம்ரின் வீட்டிலேயே உள்ள மின்விசிறியில் புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த அம்ரின் வீட்டுக்கு வந்த போது, பூபதி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து, புதுப்பாளையம் காவல் நிலையத்துக்கு நேரடியாக சென்று புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின்னர் அம்ரினை திருமணம் செய்து கொள்வதற்கு பூபதி எடுத்து வந்த மஞ்சள் தாலி மற்றும்அவரின் செல்போனை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பூபதியின் தந்தை , தனது மகனின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி புதுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், வழக்கு பதிவு செய்த போலீசார் அம்ரினிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!