நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகிலே எந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளில் இருந்து அதிகம் பணம் அனுப்புகிறார்கள் தெரியுமா? உலக வங்கி அறிவிப்பு

 உலகிலே வெளிநாடுகளில் இருந்து அதிகம் பணம் அனுப்பப்படும் நாடாக இந்தியா உள்ளதாக, உலக வங்கி கூறியுள்ளது.



இந்தியாவைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அப்படி வேலை செய்து கிடைக்கும் பணத்தினை தங்களுடைய குடும்பங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அந்த வகையில், உலகிலேயே வெளிநாடுகளில் இருந்து அதிகம் பணம் அனுப்பப்படும் நாடாக இந்தியா உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள மதிப்பில், வெளிநாடுகளில் இருந்து நடப்பு 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்படும் தொகையின் மதிப்பு 8 ஆயிரத்து 700 கோடி டொலராக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.

இது இந்திய மதிப்பில் 6 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு சமம் ஆகும். அமெரிக்கா, சவுதி அரேபியா, குவைத் போன்ற வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் தாயகத்திற்கு அனுப்பிய தொகையின் அடிப்படையில் இந்த மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவைத் தொடர்ந்து சீனா, மெக்சிகோ, பிலிப்பைனஸ், எகிப்து ஆகிய நாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகம் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



ALSO READ : "ஒயின் போல சுவை" 4 வருடங்களாக தன் சிறுநீரை பருகி வரும் பெண்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!