நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ட்ரெய்லர், பேருந்து, கார்... அடுத்தடுத்து மோதிக்கொண்ட 130 வாகனங்கள்! டெக்சாசில் பயங்கர விபத்து!

ட்ரெய்லர், பேருந்து, கார்... அடுத்தடுத்து மோதிக்கொண்ட 130 வாகனங்கள்! டெக்சாசில் பயங்கர விபத்து!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு மற்றொன்று மோதி நொறுங்கின. இந்த விபத்தில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்த நிலையில் முப்பத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவை நோக்கி வீசும் ஆர்க்டிக் கடல் காற்று காரணமாக, அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைப் பொக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெக்சாஸ் மாகாணத்தின் ஃபோர்ட்வொர்த்தில் உள்ள இண்டர் ஸ்டேட் 35W சாலையில், பனிப்பொழிவு காரணமாக விபத்து ஏற்பட்டது. இதனால், அதிவேகத்தில் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன் மீது மற்றொன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார், வேன் முதல் 18 சக்கர ட்ரெய்லர்கள் வரை ஒன்றன் மீது மற்றொன்று மோதி சாலைகளில் உருண்டன. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில் 36 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 65 பேர் நாள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!