நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மும்பையில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து வசூலான அபராத தொகை ரூ.32.41 கோடி.

மும்பையில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.32.41 கோடி அபராத தொகையாக வசூலிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களின் வரிசையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  அதிலும், மும்பை உள்ளிட்ட நகரங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசங்களை அணிதல் உள்ளிட்டவைகளை கடைப்பிடிக்க அரசு வலியுறுத்தி வருகிறது.

எனினும், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காமல் நடந்து கொள்வதும் காணப்படுகிறது.  இதனால், முக கவசங்களை அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

ஆனால், அதனையும் மீறி பொதுமக்கள் அலட்சியமுடன் இருந்து வருகின்றனர்.  இதனால், முக கவசங்களை அணியாதவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.  இதன்படி, கடந்த 21ந்தேதியில் 14,100 பேர் முக கவசங்களை அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து ரூ.28.20 லட்சம் வசூலானது.

கடந்த 21ந்தேதி வரை மொத்தம் 16 லட்சத்து 2 ஆயிரத்து 536 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.32 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 800 அபராத தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!