நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மாநிலம் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி.

மாநிலம் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றிக் அரசு மற்றும் தனியார் குளிர்வசதிப் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்காக இயக்கும் பேருந்துகளிலும், பள்ளி கல்லூரிகள் மாணவர்களுக்காக இயக்கும் பேருந்துகளிலும் குளிர்வசதியைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்வசதிப் பேருந்துகளில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும் எனவும், 50 விழுக்காட்டுக்கு மேல் புதிய காற்றுச் சுழற்சி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நோயுற்றோர், 65 வயதுக்கு மேற்பட்டோரைக் குளிர்வசதிப் பேருந்தில் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!