நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கல்யாணத்திலும் கவர்மென்டை கலாய்க்கிறாங்க.. மணமக்களுக்கு என்ன பரிசுன்னு பாருங்க!

சென்னையில் நடைபெற்ற ஒரு திருமணத்துக்கு சென்ற நண்பர்கள் மணமக்களுக்கு விலை உயர்ந்த பரிசுன்னு கவர்மெண்ட்டைக் கலாய்த் பரிசளித்துள்ளனர். அப்படி என்ன பரிசளித்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் பலரும் அரசாங்கத்தை விமர்சித்துவரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு திருமணத்துக்கு சென்ற நண்பர்கள் மணமக்களுக்கு விலை உயர்ந்த பரிசுன்னு கவர்மெண்ட்டைக் கலாய்த் பரிசளித்துள்ளனர். அப்படி என்ன பரிசளித்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படும்போது மக்கள் தங்கள் எதிர்ப்பை போராட்டங்களின் வழியாக வெளிப்படுத்துவார்கள். அதே போல, மக்கள் போராடித்தான் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. அரசை பகடி செய்யும் விதமாக வேறு வடிவங்களில் வேறு இடங்களிலும் வெளிப்படுத்தலாம்.

அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு வெங்காய விலை கிலோ 130ஐ தாண்டியபோது, திருமணத்தில் மணமக்களுக்கு உறவினர்கள் வெங்காயம் பரிசளித்து விலைவாசி உயர்வை பகடி செய்தனர்.

தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.59-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ.85.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, சமையலுக்கு பயன்படுத்தப்படும் எல்.பி.ஜி எரிவாயு சிலிண்டர் 785 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்தியாவசிய எரிபொருள்களான பெட்ரோல், எல்.பி.ஜி சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அரசு பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து போராட்டமும் அறிவித்துள்ளனர்.


இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணமக்களின் நண்பர்கள், விலை உயர்ந்த பரிசாக பெட்ரோலையும் கேஸ் சிலிண்டரையும் பரிசாக அளித்து கவர்மெண்ட்டை கலாய்த்து கவனத்தை ஈர்த்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற திருமணத்தில் மணமக்களுக்கு நண்பர்கள் பெட்ரோல், கேஸ் சிலிண்டர் பரிசளித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பெட்ரோல், கேஸ் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய கவர்மெண்ட்டைக் கலாயக்கும் விதமாக விலை உயர்ந்த பொருட்களாக மாறியிருக்கும் பெட்ரோலையும் கேஸ் சிலிண்டரையும் பரிசளித்துள்ள வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!