நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மணக்கும் வாழை இலை இட்லி.

வாழை இலை இட்லியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. தோல் நோய்கள் குணமாகும், முகம் அழகு பெரும். அல்சர் மற்றும் தோல் நோய்கள் வருவதைத் தடுக்கும்.
      மணக்கும் வாழை இலை இட்லி


தேவையான பொருட்கள்

இட்லி மாவு - 2 கப்

வாழை இலை - தேவையான அளவு


செய்முறை

வாழை இலையை நன்றாக கழுவி வட்ட வடிவமாகவோ, சதுர வடிவமாகவோ வெட்டி வைத்துக்கொள்ளவேண்டும். இட்லி தட்டின் குழிகளின் எண்ணிக்கைக்கு இணையாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

வழக்கம் போல இட்லி துணிக்கு பதிலாக வெட்டி வைத்த வாழை இலையை வைத்து மாவு ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

சத்தான வாழை இலை இட்லி தயார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!