நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அம்மானா சும்மாவா? பருந்தை பந்தாடிய கோழியின் வைரல் வீடியோ

 ஒரு கோழிக்கும், மிகவும் ஆபத்தான பறவையாக கருதப்படும் பருந்துக்கும் இடையே நடக்கும் சண்டைக் காட்சியைக் கொண்ட வீடியோ ஒன்று வைரலகா பரவி வருகிறது. 


இணைய உலகம் லட்சக்கணக்கான வேடிக்கையான வீடியோக்களால் நிரம்பியுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும் காணொளிகள் இங்கு அதிகம் உள்ளன.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள்  இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

இதில் நடக்கும் விஷயத்தை பார்த்து நம்புவது அத்தனை சுலபம் அல்ல. இதில், ஒரு கோழிக்கும், மிகவும் ஆபத்தான பறவையாக கருதப்படும் பருந்துக்கும் இடையே நடக்கும் சண்டையைக் காண முடிகின்றது. இந்த வீடியோ இதுவரை பல்வேறு தளங்களில் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் பார்க்கப்பட்டுள்ளது.

சில நொடிகளே கொண்ட இந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவில், கோழி  ஒன்று தனது குஞ்சுகளுடன் திறந்தவெளியில் நடந்து செல்வதைக் காண முடிகிறது. இந்த கோழியையும் அதன் குஞ்சுகளையும் எளிதான இரையாகக் கருதிய பருந்து ஒன்று அங்கு செல்கிறது.

பருந்து அங்கு வந்தவுடன் கோழி பயந்து ஓடுவதையும் காண முடிகின்றது. ஆனால் அடுத்த நொடியே தன் குழந்தைகள் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த கோழி, கண் இமைக்கும் நேரத்தில் பருந்துக்கு முன் வந்து நிற்கிறது.

இதற்குப் பிறகு, வீடியோவில்  நாம் பார்க்கும் காட்சிகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

கோழி, தன்னைப் பற்றி கவலைப்படாமல், உடனடியாக அசாத்திய தைரியத்துடன் பருந்தைத் தாக்கியது. தனது நகங்கள் மற்றும் அலகால் பருந்தை தாக்குகிறது. தன் குஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் கோழியிடம் வலுவாக உள்ளது. அந்த எண்ணத்தின் வலிமையால் மிகவும் ஆபத்தான பறவையும் பின் வாங்க வேண்டியதாயிற்று.

துணிச்சலான கோழியின் அசத்தும் வீடியோ இதோ:

இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் சுஷாந்த் நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனுடன், குதிரையின் சக்தியை விட தாயின் சக்தி அதிகம் என்று எழுதியுள்ளார்.


ALSO READ : இத விட ஒரு கியூட் வீடியோவ பார்த்திருக்க முடியாது, குழந்தைக்கு குருவாகிய நாய்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!