நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

3,000 அடி உயரத்தில் உலகின் மிக நீளமான தொங்கும் பாலம் திறப்பு

Sky Bridge 721 - இந்த பாலத்திற்கான நுழைவு கட்டணம் இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் ரூ.1,100 என கணக்கிடப்பட்டுள்ளது.
உலகின் மிக நீளமான தொங்கும் நடைபாலம் செக் குடியரசு நாட்டின் மவுன்டெய்ன் ரிசார்ட் என்ற இடத்தில் திறக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,100 மீட்டர், அதாவது, 3 ஆயிரத்து 610 அடி உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நீளம் 721 மீட்டர்(2,365 அடி). இந்த பாலத்திற்கு ஸ்கை பிரிட்ஜ் 721 (Sky Bridge 721) என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முதல் இரு வாரத்தில் சோதனைக்காக 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், காற்றின் வேகம் 135 கிமீஐ தாண்டும் பட்சத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பாலம் மூடப்படும். இந்த பாலத்தை இரண்டு ஆண்டுகளில் செக் குடியரசு கட்டி முடித்துள்ளது. இதற்கான செலவு 8.3 மில்லியன் டாலராக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கான நுழைவு கட்டணம் இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் ரூ.1,100 ஆகும்.

இந்த பாலம் மூலம் அந்நாட்டின் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, உயரத்தை கண்டு அஞ்சுபவர்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.இந்த பாலம் போலாந்து நாட்டின் எல்லைக்கு அருகே உள்ளதால், அந்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளும் இந்த பாலத்தை காண வருவார்கள்.

இந்த பாலத்திற்கு முன்னர் நேபாள நாட்டின் கண்டகி நதியில் உள்ள 567 மீட்டர் தொங்கும் பாலமே நீளமான தொங்கும் பாலம் என்ற சாதனையை வைத்திருந்தது. இந்த பாலத்தின் கட்டுமானத்திற்கு சூழியல் ஆர்வளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதேவேளை, இந்த பாலத்தின் கட்டுமானத்தில் விதிமுறைகள் ஏதும் மீறப்படவில்லை எனவும், சுற்றுலாவை ஊக்குவிக்கவே இந்த பாலம் கட்டப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!