நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சருமத்திற்கு பொலிவு தரும் கருப்பு மஞ்சளின் 4 அற்புத நன்மைகள்.......

 சாதாரண மஞ்சளின் ஆயுர்வேத குணங்களை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் கருப்பு மஞ்சளிலும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?


சாதாரண மஞ்சளைப் பயன்படுத்தாதவர்கள் யாரும் இந்தியாவில் இருக்க மாட்டார்கள், இது நம் சமையலறையின் மிக முக்கியமான பொருளாகும். இது இல்லாமல், சுவையான உணவுகள் முழுமையடையாது. ஆனால் கருப்பு மஞ்சள் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால், இன்று நாம் இதை பற்றி தான் காண உள்ளோம். 

கருப்பு மஞ்சள் எங்கே கிடைக்கும்?
கருப்பு மஞ்சள் முக்கியமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் விளைகிறது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. சருமத்திற்கும் இந்த மஞ்சள் மிகவும் நன்மையை தரும். அது நமக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறியலாம்.

கருப்பு மஞ்சளின் 4 அற்புதமான நன்மைகள்

1. காயங்கள் விரைவில் குணமாகும்

சிறிய வெட்டுக்கள், கீறல்கள் மற்றும் காயங்களுக்கு பல வகையான ஸ்கின் கிரீம்களை நாம் பயன்படுத்துகிறோம், ஆனால் உங்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை தேவைப்பட்டால், காயத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் கருப்பு மஞ்சள் பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள். இவ்வாறு செய்வதால் காயங்கள் விரைவில் குணமாகும்.

2. செரிமானம் சிறப்பாக இருக்கும்

கருப்பு மஞ்சள் வயிற்று பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஒருவருக்கு வயிற்று வலி அல்லது வாயு பிரச்சனை இருந்தால், இந்த மஞ்சள் மிகவும் பயன் தரும். இதற்கு கருப்பு மஞ்சள் பொடியை தயார் செய்து தண்ணீரில் கலந்து குடித்து தடவலாம்.

3. சருமத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்

சாதாரண மஞ்சளைப் போலவே, கருப்பு மஞ்சளும் சருமத்திற்கு நன்மை பயக்கும். இந்த மஞ்சளை தேனுடன் கலந்து முகத்தில் தடவி வந்தால், அபரிதமான பொலிவு ஏற்படும். இது தவிர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீக்கும்.

4. மூட்டு வலியில் உபயோகிக்கலாம்

வயதாகும்போது மூட்டுவலி ஏற்படுவது சகஜம், வலி ​​அதிகரிக்கத் தொடங்கும் போது, ​​ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்த கருப்பு மஞ்சள் பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவினால், வீக்கத்திலும் நிவாரணம் கிடைக்கும்.


ALSO READ : பிரபலாகி வரும் மணக்கும் மல்லிகை அரிசி : Jasmine Rice சாப்பிடலாமா?

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!