நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பொறுக்க முடியாத காதுவலிக்கு உடனடி நிவாரணம் கொடுக்கும் 5 வழிகள்.......

 பொறுக்க முடியாத காதுவலியால் அவதிப்படுபவர்களுக்கு உடனடி நிவாரணம் கொடுக்கும் 5 வழிகளை இங்கே தெரிந்து கொள்வோம்.


காது வலி மற்ற வலிகளிலிருந்து சற்றே வித்தியாசமானது. ஏனென்றால் அது நம் மூளையை நேரடியாக பாதிக்கிறது.  காது வலி இருக்கும்போது சாதாரண வேலையைக் கூட செய்ய முடியாது. இதுபோன்ற பிரச்சனைகளில் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது எப்போதும் நல்லது. ஆனால் மருத்துவ மனைக்குச் செல்ல முடியாவிட்டால், வீட்டிலேயே அதை சரிசெய்ய விரும்பினால், சில வழிகள் உள்ளன.

1. தூங்கும் முறை

காது வலிக்கு தூங்கும் முறையும் காரணம். ஒரு பக்கமாக படுத்துறங்கும்போது காதுகள் மீது அழுத்தம் அதிகமாக இருந்தால் வலி ஏற்படும். இதனை நீங்கள் கவனிக்காமல் அப்படியே படுத்து தூங்கினால் வலி மேலும் அதிகரிக்கும். அதனால் தூங்கும் நிலை மிகவும் முக்கியம். அதில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். 

2. ஐஸ் பாக்கெட்

சூடான ஒத்தனம் சில வலிகளுக்கு நிவாரணம் கொடுப்பது போல், ஐஸ்பாக்கெட்டுகளும் சில வலிகளுக்கு நிவாரணம் கொடுக்கும். அந்தவகையில் காது வலி இருக்கும்போது ஐஸ் பாக்கெட்டை குறிப்பிட்ட இடத்தில் வைத்தால் வலி சரியாக வாய்ப்புகள் உள்ளன. அதிக சூடு காரணமாக கூட வலி ஏற்பட்டிருக்கலாம். அப்படி இருந்தால் இது உங்களுக்கு உதவும். 

3. வெந்நீர் ஒத்தடம்

ஐஸ் பாக்கெட் ஒத்தடம் போலவே வெந்நீர் ஒத்தனமும் கொடுக்கலாம். காதில் ஏற்பட்டிருக்கும் சுருக்கம் காரணமாக அல்லது தசை இறுக்கம் காரணமாக கூட வலி ஏற்படலாம். இத்தகைய நேரத்தில் துணி ஒன்றை எடுத்து வெதுவெதுப்பான நீரில் நனைத்து காது மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் சிறிது நேரம் ஒத்தடம் கொடுக்கலாம். இது உங்களுக்கு ரிலாக்ஸைக் கொடுக்கும். 

4. ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இது காது வலியையும் குணப்படுத்தும். வலி இருக்கும் சமயங்களில் காதுகளில் சில துளிகள் ஆலிவ் எண்ணெயை வைத்தால், நிவாரணம் கிடைக்கும். 

5. சூயிங்கம்

பல சமயங்களில் விமானப் பயணத்தின் போது காதுகளில் கடுமையான வலி ஏற்படும். அத்தகைய நிலையில், நீங்கள் சூயிங்கம் மெல்லலாம். அவ்வாறு செய்வதன் மூலம் வலியிலிருந்து விடுபடலாம்.


ALSO READ : சருமத்திற்கு பொலிவு தரும் கருப்பு மஞ்சளின் 4 அற்புத நன்மைகள்.......


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!