நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அடேங்கப்பா; நெருப்பில் ஸ்டண்ட் செய்த மணமக்கள்; வாயைப் பிளத்த நெட்டிசன்கள்......

 அவர்களின் இந்த ஸ்டண்ட் வீடியோ முதலில் டிக்டோக்கில் வைரலாகியது, பின்னர் அனைத்து சமூக ஊடகத்திலும் வைரலானது.


இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

அதன்படி ஹாலிவுட் ஸ்டண்ட் தம்பதிகளான கேபே ஜெசாப் மற்றும் அம்பியர் பாம்பிர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து வெளியே வருகின்றனர். அப்போது அந்த மணமகள் கையில் இருக்கிற பூங்கொத்து தீப்பிடித்து எரிகிறது. விபரீதம் எதுவும் ஆகிவிட்டதோ என நினைக்கும் நேரத்தில் அதெல்லாம் இல்லை, இது ஸ்டன்ட் தான் என அவர்கள் காட்டுகின்றனர். இவர்கள் இருவரும் தங்களின் பின்புறத்தில் தீப்பிடிக்க வைக்கின்றனர். மேலும் இவர்கள் இருவரும் நடந்து வந்து ஸ்டைலாக முன்புறம் மண்டியிட்டு அமர்கிறார்கள். இதன் பின்னர் அந்த தீ அணைக்கப்படுகிறது.

 இந்த சம்பவம் திருமண வரவேற்பு நிகழ்வுக்கு கூடியிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் வியக்க வைத்தது. மேலும் இந்த வீடியோ அதிரடியாக தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மக்கள் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. 


ALSO READ : மோனலிசா முதல் எறும்புகள் அவரை : உங்களை வியக்க வைக்கும் 50 உண்மைகள்......

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!