நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வீட்டை விற்று கப்பலிலேயே வாழும் வயதான தம்பதி - எப்படி சாத்தியம்?

 ஏஞ்சலினா கடந்த 1992ம் ஆண்டு முதன்முதலாக ஒரு பெரிய கப்பலில் கரீபிய கடலில் பயணம் செய்தாராம். அப்போது முதல் அவருக்கு கப்பல் பயணம் செய்து கொள்வது வாழ்விலே பிடித்தமான ஒன்றாகிவிட்டதாம்.


அமெரிக்காவின் சீடெல் நகரத்தைச் சேர்ந்த ஏஞ்சலினா மற்றும் ரிச்சர்ட் பர்க் தம்பதியினர் தங்களது வீடு மட்டும் உடைமைகளை விற்றுவிட்டு முழுவதுமாக கப்பலில் தங்கி வாழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

இந்தியர்களுக்கு ரிடைர்ட் ஆன பின்பு இருக்க ஒரு வீடு வேண்டும் என்பதே பெரும் கனவாக இருக்கும் சூழலில் அமெரிக்காவின் ஏஞ்சலினா, ரிச்சர்ட் பார்க் தம்பதி தங்களது வீட்டையும் விற்றுவிட்டு உலகம் சுற்றக் கிளம்பியிருக்கின்றனர்.

ஏஞ்சலினா கடந்த 1992ம் ஆண்டு முதன்முதலாக ஒரு பெரிய கப்பலில் கரீபிய கடலில் பயணம் செய்தாராம். அப்போது முதல் அவருக்கு கப்பல் பயணம் செய்து கொள்வது வாழ்விலே பிடித்தமான ஒன்றாகிவிட்டதாம்.


பயண விரும்பிகளான ரிச்சர்ட் மற்றும் ஏஞ்சலினா திருமணத்தின் போதே ஆண்டுக்கு ஒரு முறையாவது பெரிய கப்பல்களில் பயணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தனராம்.

இந்த கடல் பயண வாழ்க்கை முறை மிகச் சிக்கனமானது என்றும் ஊடகங்களுக்கு அளித்த போட்டியில் கூறியுள்ளார் ஏஞ்சலினா. அவர்களின் லால்டி மெம்பர்ஷிப் உபயோகித்தும் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் பொருட்கள் வாங்குவதாலும் செலவுகளைக் குறைத்தால் ஒரு நாளுக்கு 42 டாலர் மட்டும் செலவு செய்து வாழ்ந்து விட முடியும் எனக் கணக்கிட்டுள்ளார் ஏஞ்சலினா.

இதனால் மொத்தமாகக் கப்பலுக்குக் குடியேறி உலகின் பல நாடுகளுக்குச் சென்று வாழ முடிவு செய்துள்ளனர் அந்த தம்பதி. அவர்கள் பயணத்தைத் தொடங்கி 50 நாட்கள் கடந்துவிட்டதாம். இப்போது சிட்னியிலிருந்து ஐரோப்பியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கக் கூடும்.

இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, சிங்கப்பூர் மற்றும் பஹாமாஸ் போன்ற அவர்களுக்கு விருப்பமான இடங்களுக்குப் பயணிக்க உள்ளனராம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!