Posts

Showing posts from August, 2022

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தித்திக்கும் தேங்காய் அல்வா...ரிச் சுவையில் செய்து அசத்தலாம்!

Image
  தித்திக்கும் தேங்காய் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் பெரிய தேங்காய் - 2 பச்சரிசி - அரை ஆழாக்கு நெய் - ஒரு கரண்டி முந்திரிப் பருப்பு - 12 தூள் வெல்லம் - 2 ஆழாக்கு ஏலக்காய் - தேவையான அளவு செய்முறை தேங்காயை பூ போல துருவி வைத்துக் கொள்ளுங்கள். முழு முந்திரிப் பருப்பை தேவைப்பட்டால் உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல ஏலக்காயை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். முடிந்தால் முன்னமே மொத்தமாகப் பொடியாக்கி கூட வைத்துக் கொள்ளலாம். பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின்னர் கல் நீக்கி நன்றாக களைந்து விடவும். பிறகு துருவிய தேங்காயையும், அரிசியையும் மிக்சியில் அரைத்து நன்றாக வெண்ணை போல விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் நீங்கள் மிக்சியில் அரைத்த விழுதைப் போட்டு அடுப்பில் வைத்து உடன் வெல்லத் தூளையும், ஏலக்காயையும் போட்டு சுருள் வரும் வரையில் பொறுமையாக நன்றாகக் கிளறவும். இப்போது நன்கு சுருள் வந்தவுடன் நெய்யை விட்டு, முந்திரியையும் வறுத்துப் போட்டு இறக்கி வைக்கவும். சுவையான தேங்காய் அல்வா ரெடி. ALSO READ :  வாழைத்தண்டு பொரியல் சுடச் சுட செ

வாழைத்தண்டு பொரியல் சுடச் சுட செய்வது எப்படி! பத்தே நிமிடத்தில் ரெடி....

Image
  முருங்கை கீரையுடன் வாழைத்தண்டை சேர்த்து பொரியல் செய்தால் அருமையாக இருக்கும்.  இந்த ரெசிபையை தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் முருங்கைக்கீரை - 1 கப்   வாழைத்தண்டு - சிறிய துண்டு  வெங்காயம் - 1  தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்   பச்சை மிளகாய் - 1   சிகப்பு மிளகாய் - 1  கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க   எண்ணெய் - 2 ஸ்பூன்   உப்பு - தேவைக்கு  செய்முறை  முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.  ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.  வாழைத்தண்டை நாரை எடுத்து விட்டு மெல்லி துண்டுகளாக நீளவாக்கில் வெட்டி மோரில் போட்டு வைக்கவும். இவ்வாறு மோர் கலந்த நீரில் வாழைத்தண்டு துண்டுகளை போட்டு வைப்பதால் நிறம் மாறாமல் இருக்கும்.  வாணலியை அடுப்பின் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், ப.மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் வாழைத்தண்டு சேர்த்து ஒரு முறை கிளறி விடவும். வாழைத்தண்டு சற்று வெந்ததும் முருங்கைக்கீரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்

மேகத்துடன் தோன்றிய அபூர்வமான வானவில் - இப்படி ஒரு அதிசயமா? வைரல் வீடியோ....

Image
  இந்த பறந்து விரிந்த உலகில் நடக்கும் அன்றாடம் இயற்கையான அபூர்வ விஷயங்களை பார்த்து கண்டு வருகிறோம். அந்த வகையில், வானவில் இயற்கை நிறங்களைத் தொகுத்துக் காட்டும் ஒரு அழகியக் காட்சி பரவலாக பேசப்பட்டு வருகிறது. சீனாவில் உள்ள ஹைகோ நகரில் தான் இந்த வானவில் மெய்மறக்கச் செய்துள்ளது. அந்த காட்சியில், வானவில் பொதுவாக வளைந்து அரைவட்டம் போலக் காணப்படும். ஆனால் இந்த காட்சியிலோ அது திரண்டு நிற்கும் மேகம் போலக் காட்சியளிக்கிறது. மேகத்துக்கு கிரீடம் வைத்தது போல காணப்படும் அந்த அற்புதக் காட்சியில் இருப்பது வானவில்லே இல்லை. அது ஒரு மேகம். இந்த காட்சியைப் பார்த்த மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் இது வைரலானது.  ALSO READ :  100 ஆண்டு பழமையான கல்லறைக்குள் இருந்து எட்டிப்பார்த்த மர்ம பொருள் - பீதியை கிளப்பிய வீடியோ!

100 ஆண்டு பழமையான கல்லறைக்குள் இருந்து எட்டிப்பார்த்த மர்ம பொருள் - பீதியை கிளப்பிய வீடியோ!

Image
  100 வருடம் பழமையான கல்லறை ஒன்றிலிருந்து வித்தியாசமான ஒரு பொருள் இருந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கலிபோர்னியாவின் தலைநகரான Sacramento என்ற இடத்தில் ஜோயல் மோரிசன் (Joel Morrison) 37 வயதுடைய நபர் 100 ஆண்டுகள் பழமையான கல்லறைக்கு சென்றுள்ளார். அப்போது, 1906 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கல்லறையிலிருந்து, ஒரு பெண்ணின் தலைமுடி எட்டிப்பார்ப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது எப்படி சாத்தியம் என மனித தலைமுடிதானா? என கண்டறிய அதிலிருந்து சிறிது மாதிரி சேகரித்து, அந்த முடியை நீதிமன்ற அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். மேலும், கல்லறையின் அருகில் இருக்கும் மரத்தின் வேர்கள் நீண்டு வளர்ந்ததால், கல்லறையை பாதித்து இருக்கலாம்., அல்லது அல்லது விலங்குகள் ஏதேனும் தலைமுடியை இழுத்திருக்கலாம் என ஜோயல் கருதியுள்ளார். குறிப்பிட்ட இந்த வீடியோவும் பரவலாக பேசப்பட்டு பரவி வருகிறது. ALSO READ :  ’மக்களே தயவு செய்து குடிங்க’ மன்றாடும் ஜப்பான் அரசு; காரணம் இதுதான்.......

உங்களுக்கு உடல் எடையை சீக்கிரமே குறைக்கனுமா? இந்த சூப்பை மறக்காமல் குடிச்சாலே போதும்....

Image
 பொதுவாக இன்றைய காலத்தில் எடையைக் குறைப்பது என்பது சவாலான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் உடல் எடையைக் குறைப்பதற்கு ஒருசில உணவுப் பொருட்களும் உதவியாக இருக்கும். அந்த உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால், எதிர்பார்த்த உடல் எடையைக் குறைக்கும் இலக்கை எளிதில் அடைய முடியும். அதில் ஒன்றான பார்லியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் இருக்கின்ற கொழுப்புச் சத்துக்கள், உடலில் படியாமல் தடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது. அந்தவகையில் இதனை எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.     தேவையான பொருட்கள் கம்பு - 1 கப் பார்லி - 2 கப் வெங்காயம் - 1 செலரிக் கீரை - 1 தக்காளி - 1 முட்டைக் கோஸ் - சிறிதளவு உருளை - 1 கேரட் - 1 ஓமம் - 1 சிட்டிகை துளசி - 1 சிட்டிகை உப்பு - தே. அளவு மிளகுத் தூள் - தே. அளவு செய்முறை  வெங்காயத்தை சதுரமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். செலரிக் கீரையை ஆய்ந்து மண் நீக்கி சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அத்துடன் கேரட், உருளை, கோஸ் ஆகியவற்றையும் நன்கு கழுவி சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் தக்காளியை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். முதலில் கம்பையும், பார்ல

தினமும் 20 நிமிடம் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா?

Image
 பின்னோக்கி நடத்தல் அற்புதமான பலன்களைத் தரும் ஒரு பயிற்சியாகும். குறிப்பாக 100 அடிகள் பின்னோக்கி நடப்பது 1000 அடிகள் முன்னோக்கி நடப்பதற்கு சமமானது என்று கருதப்படுகின்து. இதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.  அந்தவகையில் பின்நோக்கி நடைபயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.  பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் இயக்கங்கள் ஒருங்கிணைப்புடன் நடைபெறும். அதனால் உடல் நலம் பெரும். ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தவும் உதவும். இரவில் சுழற்சி அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூக்கம் சீராக வரும். சிந்தனை திறனை மேம்படுத்தும். மனதில் நல்ல யோசனைகள் உதிர்க்க உதவும். பார்வை திறனை மேம்படுத்த துணைபுரியும்.   பின்னோக்கி நடைபயிலும்போது கால் தசைகளின் வலிமை அதிகரிக்கும்.முழங்கால் காயங்களால் அவதிப்படுபவர்கள் பின்னோக்கி நடைபயிற்சி மேற்க்கொள்வது நல்லது.  விரைவில் காயங்கள் குணமாகும். நடைப்பயிற்சியை முறையாக மேற்கொள்ளுவதற்கும் வழிவகை செய்யும். உடல் சமநிலையில் இருக்கவும் உதவி புரியும் அதிக கலோரிகளை எரிக்கவும் உதவும். உடல் எடையை சீராக பராமரிக்கவும் பின்னோக்கி நடை பயில்வது பயனள

உங்கள் Smartphone-ஐ படுக்கைக்கு அருகில் வைத்து கொள்வதால் என்ன ஆகும் தெரியுமா?

Image
 தூங்கும் போது படுக்கைக்கு அருகே செல்போனை வைத்து கொண்டால் பல தீமைகள் ஏற்படும். செல்போன் உங்கள் உடலை விட்டு தள்ளியிருக்கும் சிறிய தூரம் கூட பெரிய மாற்றத்தை உண்டாக்கும். எந்நேரமும் ஸ்மார்ட்போன் கையுமாக இருக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இரவில் தூங்குவதற்கு முன்னர் செல்போனை பார்த்துவிட்டு படுக்கைக்கு அருகிலேயே அதை வைத்துவிட்டு தான் பெரும்பாலானோர் தூங்குவார்கள். செல்போனை படுக்கைக்கு அருகில் வைத்துக்கொண்டே தூங்குவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் செல்போன் உங்கள் உடலை விட்டு தள்ளியிருக்கும் சிறிய தூரம் கூட பெரிய மாற்றத்தை உண்டாக்கும். முடிந்தளவு ப்ளூடூத் ஹெஸ்ட்டை பயன்படுத்தவும். ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது போனை விட்டு தள்ளியே இருங்கள். செல்போனை எப்பொழுதும் கைப்பை அல்லது தோள்பைகளில் வைக்க பழகுங்கள். பேண்ட் பாக்கெட்டுகளிலோ, உள்ளாடைகளிலோ வைப்பதை தவிர்க்கவும். இரவு தூங்கும்போது படுக்கைக்கு அருகிலோ அல்லது தலையணைக்கு அடியிலோ செல்போனை வைத்து தூங்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அந்த சமயங்களில் ஏற்படும் கதிரியக்கம் உங்கள் மூலையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

Diabetes Diet: இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

Image
 உயர் இரத்த சர்க்கரை அளவு நீடித்தால், இதய நோய், சிறுநீரக பிரச்சினைகள், கண் அபர்வை இழப்பு மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தும். உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று ஆரோக்கியமான உணவுமுறை. உயர் இரத்த சர்க்கரை அளவு நீடித்தால், இதய நோய், சிறுநீரக பிரச்சினைகள், கண் அபர்வை இழப்பு மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தும். உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று ஆரோக்கியமான உணவுமுறை. நீரிழிவு நோய் என்பது அசாதாரணமான உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகளால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை. ஆரோக்கியமான நபர்களில், இன்சுலின் என்ற ஹார்மோன் உடலின் செல்களுக்கு குளுக்கோஸை வழங்க உதவுகிறது. அவர்களுக்கு அத்தியாவசிய ஆற்றலை வழங்குகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின், உடலில் போதுமான இன்சுலினை உற்பத்தி  இருக்காது. உயர் இரத்த சர்க்கரை அளவு நீடித்தால், இதய நோய், சிறுநீரக பிரச்சினைகள், கண் அபர்வை இழப்பு மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தும். அதைத் தடுக்கவும், உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் மிக முக்கியமான காரணிகளில்

’மக்களே தயவு செய்து குடிங்க’ மன்றாடும் ஜப்பான் அரசு; காரணம் இதுதான்.......

Image
  வரி வருவாய் குறைந்துவிட்டதால், மக்கள் அதிக குடிக்க வேண்டும் என ஜப்பான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.    மது மூலம் கிடைக்கும் வரி வருவாய் ஜப்பானில் குறைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை அதிக்கபடுத்த அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மக்களிடையே மது அருந்தும் பழக்கத்தை ஊக்குவிக்க புதிய திட்டங்களையும் ஜப்பான் அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளது. இதற்காக பிரத்யேகமாக சேக் விவா என்ற பிரச்சாரத்தை அந்நாட்டின் தேசிய வரி நிர்வாகம் தொடங்கியுள்ளது. மேலும், 20 வயதிலிருந்து 39 வயதுள்ள ஜப்பானியர்களிடம் நாட்டு மக்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? என அரசாங்கம் சார்பில் யோசனைகள் கேட்கப்பட்டுள்ளன. சிறந்த யோசனைகளை வழங்குபவர்களுக்குப் பரிசு மற்றும் விருது வழங்கி கவுரவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி செப்டம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனாவிற்கு பின்பு மாறிய வாழ்க்கைமுறை காரணமாகவே ஜப்பானில் மதுக் குடிக்கும் பழக்கம் குறைந்துள்ளது. அதற்கு முன்னரே படிப்படியாக ஜப்பான் மக்களிடையே இருந்த குடிப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்தது. 1995-ம் ஆண

ஊழியரை சேஸிங் செய்யும் ராட்சத முதலை; பதைபதைக்க வைக்கும் வீடியோ.......

Image
  பூங்கா ஒன்றில் ஊழியர் ஒருவரை முதலை சேஸிங் செய்யும் வீடியோ வெளியாகி பதைபதைக்க வைக்கிறது.    ஊழியரை சேஸிங் செய்யும் முதலை இணையத்தில் வைரலான வீடியோ. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்களால் இணையம் நிரம்பி வழிகிறது. அவற்றில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே பார்ப்பதற்கு வசீகரமாகவும், பயமாகவும் இருக்கும். அப்படியான ஒரு வீடியோ சமீபத்தில் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. அது பகிரப்பட்டதிலிருந்து, பேஸ்புக்கில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட வீடியோவாக மாறியிருக்கிறது. அப்படி என்ன சுவாரஸ்யம் என்றால், பூங்கா ஒன்றில் இருக்கும் ராட்சத முதலை ஒன்று அங்கிருக்கும் பூங்கா ஊழியர்களை சேஸிங் செய்கிறது. இந்த காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைக்கிறது.    இந்த வீடியோ Gatorland Orlando-ன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் 110- ஏக்கரில், ஆயிரக்கணக்கான முதலைகள் வளர்க்கப்படுகின்றன. ராட்சத முதலைகள் இருக்கும் இந்த பூங்காவை சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பார்வையிடலாம். அதுமட்டுமில்லாமல் பூங்காவில் பறவைக் கூடம், செல்லப்பிராணி பூங்கா ஆகியவற்றுடன் சுற்றுலாப் பயணிகளுக்காக கேளிக்கை நிகழ்ச்சிகளும்

பல்வலி பிரச்சனையா? இதையெல்லாம் கண்டிப்பா சாப்பிடாதீங்க....

Image
 Dental Care: பல்வலி பிரச்சனை உங்களுக்கு உள்ளதா? அப்படி இருந்தால், நீங்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன.  பல் வலியில் இவற்றை உட்கொள்ளாதீர்கள். இனிப்பு, டாஃபி, சாக்லேட் போன்றவற்றை மறந்தும் உட்கொள்ளக்கூடாது. பல்வலி இருந்தால் குளிர்பானம் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பல்வலியில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:  இந்நாட்களில் பெரும்பாலான மக்கள் பல்வலியால் அவதிப்படுகிறார்கள். பல காரணங்களால் பல்வலி ஏற்படுகிறது. எனினும், பெரும்பாலும், பல் சொத்தை அல்லது கேவிடி இருப்பதால் பல்லில் வலி இருக்கும். அதே நேரத்தில், விஸ்டம் டூத் வரும்போதும் உங்கள் பற்களில் வலி ஏற்படலாம். பற்களில் பிரச்சனை இருந்தால், சில பொருட்களை மறந்தும் உட்கொள்ளக்கூடாது.  சில பொருட்களை உட்கொள்வதால், உங்கள் பிரச்சனை இரட்டிப்பாகும். பற்களில் வலி அல்லது பிற பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் என்னென்ன பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.  பல் வலியில் இவற்றை உட்கொள்ளாதீர்கள்: இனிப்பு பொருட்கள்: பல்வலியின் போது இனிப்புப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் குறிப்பாக இனிப்பு, டாஃபி, சாக்லேட்

ஆயுர்வேதத்தின்படி தண்ணீர் குடிப்பதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

Image
 ஊட்டச் சத்து குறைபாடு உள்ள நபர்கள் உணவு உண்ட 30 நிமிடங்களுக்குப் பிறகும், அதிக எடை கொண்ட நபர்கள் உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பும் தண்ணீர் குடிப்பது சிறந்தது.    ஆயுர்வேதத்தில் தண்ணீர் குடிப்பதற்கு சில விதிமுறைகள் விதிக்கப்படுகிறது. தண்ணீர் குடித்தால் நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. சிறிதளவு சீரகத்தை போட்டு வைத்துக்கொண்டு தினமும் குடிப்பது நல்லது. தண்ணீர் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதிலிருந்து தொடங்கி உடலுக்கான ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்வது வரை பல முக்கியமான செயல்பாடுகளைச் செய்ய நம் உடலுக்கு தேவைப்படுகிறது.  தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது நமக்கு தெரியும், ஆனால் எப்படி குடிப்பது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.   ஒரு நாளைக்கு ஒருவர் எட்டு க்ளாஸ் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது, ஆனால் உண்மையிலேயே அந்தளவு தான் தண்ணீர் குடிக்க வேண்டுமா என்பது நமக்கு தெரியாது.  அதற்கு ஆயுர்வேதத்தில் தண்ணீர் குடிப்பதற்கு சில விதிமுறைகள் விதிக்கப்படுகிறது, அதன்படி நாம் தண்ணீர் குடித்தால் நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.  பெரும்பாலும் சாதரண தண்ணீரை குட

காலை உணவுக்கு சூப்பர் உணவுகள்! நாள் முழுவதும் சுறுப்பாக வைக்கும் Super Foods....

Image
 Super Foods for Breakfast: காலை உணவு நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. காலை நேரத்தில் நாம் சாப்பிடும் உணவு, அன்றைய தினத்தின் நமது சுறுசுறுப்புக்கு ஆதாரமாக இருக்கும்.  பரபரப்பான நமது வாழ்க்கை முறையால், காலையில் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்று தெரியவில்லை. இந்த மூன்று பொருட்களால் செய்த உணவு காலை உணவுக்கு உகந்தது. பலர் காலையிலேயே நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவார்கள். இவை ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கும். எனவே புரதம் நிறைந்த உணவுகளில் சிலவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். இவை நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. வேர்க்கடலை வெண்ணெய் டோஸ்ட்: காலையில் ஆரோக்கியமான காலை உணவை விரும்பினால், வேர்க்கடலை வெண்ணெய் டோஸ்ட் ஒரு நல்ல தேர்வாகும். இரண்டு ரொட்டித் துண்டுகளை டோஸ்ட் செய்துக் கொள்ளவும். அதில் சியா விதைகள், நறுக்கிய வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் சேர்க்கவும். ஆரோக்கியமான சுலபமாக செய்யக்கூடிய பிரெட் டோஸ்ட் ரெடி கொண்டைக்கடலை புரதத்தின் நல்ல மூலமாகும், எனவே ஆரோக்கியமான காலை உணவில் கடலை சேர்த்துக் கொள்வது நல்லது. கடலை மாவில் பச்சை மிளகாய், ம

கேட்ட பார்த்தாலே பயமா இருக்கே... இது உலகின் கொலைகார தோட்டம்

Image
 பூந்தோட்டம், மலர் தோட்டம், இப்படி பல தோட்டங்களை கேள்விப்பட்டிருப்போம், ஆனால், கொலை கார தோட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா... அது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ... இங்கிலாந்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்வையாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் தகவல் களஞ்சியங்களாக உள்ளன. இவற்றில் நமக்கு கிடைக்கும் தகவல்கள் சில சமயங்களில் வியப்பை தருவதாகவும், சில சமயங்களில் அதிர்ச்சி தருவதாகவும் உள்ளது. தோட்டம் என்றால், நம் மனதில் உடனே தோன்றுவது, அழகான பூக்கள் நிறைந்த, அமைதியான, மனதிற்கு இதமான இடம். ஆனால், இங்கே நாம் காணும் தோட்டம், மனதிற்கு, அமைதிய வழங்கும் தோட்டம் அல்ல. பீதியை உண்டாக்கும் தோட்டம்.  ஆம், இங்கிலாந்தில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டத்தின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  100 க்கும் மேற்பட்ட ஆபத்தான தாவரங்களைக் கொண்ட இந்த தோட்டம் 'உலகின் கொலைகார தோட்டம்' என்பதைக் காட்டுகிறது. இந்த புகைப்படம் ஜூன் 25 அன்று ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது. இங்கிலாந்தின் நார்த

8 மனைவிகளுக்கும் ஒரு அரண்மனை; டைம் டேபிள் போட்டு காதல் செய்யும் நபர்!

Image
 பலதார மணம்: ஒரே நேரத்தில் 9 பெண்களை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய மாடல் ஆர்தர் உர்சோ, தனது மனைவிகளுடன் வாழ 7500 சதுர அடியில் அரண்மனையை கட்டி வருகிறார். ஆர்தர் உர்சோ செய்த 9 திருமணங்கள் ஆர்தரின் வீட்டின் சுவர் ஒன்றில் பேய் (அசுரன்) என்று யாரோ எழுதியுள்ளனர். ஆர்தரின் குடும்பத்திற்கு வரும் அச்சுறுத்தல்கள். பிரபல பிரேசிலிய மாடல் மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆர்தர் உர்சோவுக்கு (Arthur O Urso) எட்டு மனைவிகள் உள்ளனர். அவர் ஒன்று அல்லது இரண்டு இல்லை, அனைத்து மனைவிகளும் அவருடன் வாழ்கின்றனர். அவர்களுக்காக ஆர்தர் உர்சோ 7500 சதுர அடியில் ஒரு ஆடம்பரமான அரண்மனையைக் கட்டுகிறார், அதற்கு அவர் 'Mansion of Free Love' என்று பெயரிட்டார். ஆர்தர் உர்சோ செய்த 9 திருமணங்கள் மாடலும் செல்வாக்கு பெற்றவருமான ஆர்தர் உர்சோ 2021 ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் 9 பெண்களை திருமணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இருப்பினும், பின்னர் ஆர்தரின் மனைவிகளில் ஒருவர் அவரை விவாகரத்து செய்தார். ஏனெனில் அவர் தனது கணவரை வேறு எந்த பெண்ணுடனும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. ஆர்தரின் திருமணங்கள் செல்லாது இருப்பினும

உடல் எடையை இருமடங்கு வேகத்தில் குறைக்கனுமா? இந்த பொருளை இப்படி பயன்படுத்தினால் போதும்....

Image
 அஸ்வகந்தா ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இன்று ஏராளமான மக்கள் அவதிப்பட்டு வரும் உடல் பருமனைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. அந்தவகையில் அஸ்வகந்தா எப்படி உடல் எடையை குறைக்க உதவுகின்றது என்று பார்ப்போம்.  அஸ்வகந்தா எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது? அஸ்வகந்தா உடலில் ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்யாமல், உடலில் பல வேலையை செய்கிறது. இதனால் இது உடல் எடையை வேகமாகவும், ஆரோக்கியமாகவும் குறைக்க உதவுகிறது. அஸ்வகந்தாவை உட்கொள்வது எப்படி? ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் அஸ்வகந்தா பொடியை சேர்த்து, சிறிது தேன் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த பாலை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் எடை இருமடங்கு வேகத்தில் குறையும். நன்மைகள் அஸ்வகந்தா மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்க உதவி புரிந்து, எடை இழப்பை ஊக்குவிக்கிறது.   அஸ்வகந்தா தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு போதுமான தூக்கத்தைப் பெற உதவுகிறது. அஸ்வகந்தா செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் போக்கும். இதன் மூலம

தினமும் காலையில் ஜாக்கிங் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Image
 பொதுவாக தினமும் காலையில் ஜாக்கிங் செய்வது வாக்கிங் செல்வதை விட நல்லது என்று கூறப்படுகின்றது. இதனால் அதிகப்படியான கலோரியை மிகக் குறைந்த நேரத்தில் எரிக்க முடியும். அதுமட்டுமின்றி இதனால் நேரம் மட்டும் அல்ல. நம்முடைய உடலில் உள்ள ஆற்றல்களும் கூட சேமிக்கப்படுகின்றன. அந்த வகையில் வாக்கிங்கை விட ஜாக்கிங் செல்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். ஒரு மணி நேரம் ஜாக்கிங் செய்வதால், உடலில் உள்ள கொழுப்பு செல்கள் வேகமாக எரிக்கப்பட்டு, கச்சிதமான உடல் தோற்றம் கிடைக்கிறது. நுரையீரல், மூச்சுக்குழாய் மற்றும் மூச்சு அறைகளைப் பலப்படுத்துகிறது. ஆஸ்துமா பிரச்சினைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஜாக்கிங் செய்யும்போது, உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் நன்கு விரிந்துகொடுக்கின்றன. இது, ரத்த ஓட்டம் சீராகப் பாய வழிவகுத்து, உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால், தொற்றுவியாதிகள் எளிதில் பாதிக்காது. ஜாக்கிங் செய்யும்போது, உடலில் உள்ள கால்சியம் எலும்புகளால் நன்றாகக் கிரகிக்கிப்படுகிறது. இதனால், எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது. எலும்பு தொடர்பான நோய்கள் வரு

சருமத்தை மினுமினுப்பாக வைத்து கொள்ள ஆசையா? இதோ சில எளிய டிப்ஸ்....

Image
 பொதுவாக பலருக்கு சருமத்தை பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை காணப்படும். இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்களை தான் நம்மில் பலர் வாங்கி போடுவதுண்டு. இருப்பினும் இது தற்காலிக தீர்வினை தான் தரும். இயற்கை முறையில் சருமத்தை மினுமினுப்பாக வைத்து கொள்ள வேண்டும். இதற்கு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம். ஆப்பிள் துண்டுகளை நன்றாக அரைத்து தேன், ஓட்ஸ் பவுடர், ஆகியவற்றுடன் சேர்த்து க்ரீம் போல ஆக்கி அதையும் மேற்குறிப்பிட்ட முறையில் அரை மணி நேரம் முகத்தில் போட்டு பின்பு கழுவலாம். இரண்டு வழிகளிலும் வறண்ட சருமத்தைப் போக்க முடியும். உங்களுக்கு எந்த வகை வசதியாக இருக்கிறதோ அதைப் பின்பற்றுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும். தயிரிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட மோரை, முகத்தில் தடவி, சிறிது நேரம் உலரவைத்து, பின்பு நன்கு கழுவினால், முகப்பொலிவை உணரலாம். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் தக்காளியை சாறாக பிழிந்து அதை முகத்தில் தடவி உலர வைத்து, பின்பு அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் உரியப் பலனை உணர்வீர்கள். வெள்ளரியைத் துண்டு துண்டாக நறுக்கி முகத்தில் தடவி உலர வை

ஞாபக சக்தியை அதிகரிக்கணுமா? இந்த மூலிகைகளை இப்படி எடுத்துகோங்க போதும்!

Image
 பொதுவாக இன்றைய காலத்தில் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான பிரச்சனைகளில் ஞாபக சக்தி குறைபாடும் ஒன்று. இதற்கு காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், போதிய சக்தியின்மையாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே இதற்கு காரணம். இதன் காரணமாக, மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது. எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்து விடும். ஞபக சக்தி குறைபாடுகளுக்கு, சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணமாகும். அந்தவகையில் ஞபக சக்தியை எளிய முறையில் அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம். வல்லாரை இலையை நசுக்கி கூடவே நெல்லிக்காயும் சேர்த்து, தேன் கலந்து கொடுக்க வேண்டும். இதை அதிகாலையில் குடிப்பது நல்ல பலன் தரும். இது மூளையை சிறப்பாக வைத்திருக்க உதவும். வல்லாரைக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் தன்மை இருக்கும். நெல்லிக்காயும் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. இதை பவுடராக்கி தேனில்கலந்து குடிக்கலாம். இல்லையெனில் அப்படியேவும் சாப்பிடலாம், ஜூஸாக்கி பாலில் கலந்தும் குடிக்கலாம். நீர் பிரம்மி நினைவாற

மூன்றே நாளில் கருவளையம் காணாமல் போக வேண்டுமா?

Image
 கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக பருவ வயதை அடையும் பெண்களுக்கும் முன்கூட்டியே இந்த பிரச்சனை அதிகரித்துவருகிறது. முகத்தில் அந்த இடம் மட்டும் கருப்பாக தெரியும் அளவுக்கு கருவளையம் அசிங்கமாக காணப்படும். இது போன்ற பிரச்சினைக்கு வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை வைத்தே தீர்வு காணமுடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.   ஒரு ஸ்பூன் அளவுக்கு கற்றாழை ஜெல்லை எடுத்து அதை காட்டனில் அப்ளை செய்து அதை அப்படியே கண்களுக்கு அடியில் இந்த காட்டனை கற்றாழை ஜெல்லோடு அப்படியே கண்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டும். கண்களின் கருவளையம் உள்ள பகுதிகளில் கற்றாழை ஜெல்லை அப்ளை செய்த பிறகு சுமார் 10-15 நிமிடங்கள் வைத்திருந்து பின், ஈரமான துண்டு அல்லது டிஸ்யூ பேப்பரால் துடைத்துவிட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இப்படி செய்து வர மூன்றே நாட்களில் கண்களில் கருவளையங்கள் நன்றாகக் குறைந்து விடும். மஞ்சள் மற்றும் மோர் இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்களுடைய கண்களுக்குக் கீழே கருமையாக இருக்கும் பகுதிகளில் தடவ

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!