நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை ஒரு வாரத்திலேயே போக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்.......

 பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சனைகளுள் கருவளையம் ஒன்றாகும்.

இந்த பிரச்சனை பலவகையான காரணங்களினால் ஏற்படுகிறது.

அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன.

இதனை எளியமுறையில் கூட போக்க முடியும்.. தற்போது அவற்றில் ஒரு எளியவழிமுறையை இங்கே பார்ப்போம். 

தேவையானவை


  • வெள்ளரிக்காய் 3 துண்டுகள்
  • உருளைக்கிழங்கு 3 துண்டுகள்
  • தேன் 1 ஸ்பூன்
  • கற்றாழை ஜெல் 1 ஸ்பூன்

செய்முறை


  • வெள்ளரிக்காய் மற்றும் உருளை கிழங்கு துண்டுகளை தனித்தனியாக துருவி அதன் சாற்றை மற்றும் எடுத்து ஒன்றாக இணையுங்கள்.

  • இதனுடன் தேன் மற்றும் கற்றாழை ஜெல்லை நன்கு கலந்து கொள்ளுங்கள். இயற்கை பூச்சு தயாராகி விட்டது.

  • இதனை கண்களை சுற்றி தடவும் முன்னர் பன்னீரை பஞ்சுகளில் நனைத்து உங்கள் கண்களை சுற்றி துடைத்து ஆற விடுங்கள்.

  • அதன் பின்னர் நன்கு கலக்கப்பட்ட இந்த கலவையை உறங்குமுன் கண்களில் தடவி விடுங்கள். மறுநாள் காலை இதனை கழுவுங்கள்.

  • ஒரு வாரத்திலேயே நல்ல பலன்கள் கிடைத்திருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.   




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!