நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தயிர் வடை என்றால் மிகவும் பிடிக்குமா..? அடிக்கடி செய்து சாப்பிட எளிமையான ரெசிபி...

 தயிரின் புளிப்பு சுவையும் , வடையின் காரசார மொறுமொறுப்பு சுவையும் கலந்து இந்த உணவுக்கு தனி சுவையை உண்டாக்குகின்றன.


தயிர் வடையும் இன்றூ சாட், டெசர்ட் வகைகளை போல் பரிமாறப்படுகிறது. இதற்கென தனி பிரியர்களும் இருக்கிறார்கள். தயிரின் புளிப்பு சுவையும் , வடையின் காரசார மொறுமொறுப்பு சுவையும் கலந்து இந்த உணவுக்கு தனி சுவையை உண்டாக்குகின்றன. எனவே இதை நீங்களும் வீட்டில் செய்து சாப்பிட ஆசைப்பட்டால் இதோ ரெசிபி...

தேவையான பொருட்கள் :

உளுந்து - 1/2 கப்

புழுங்கல் அரிசி - 1 tbsp

உப்பு - தே.அ

பெருங்காயத்தூள் - போதுமான அளவு

தயிர் - 2 கப்

துருவிய தேங்காய் - 2 tbsp

இஞ்சி - 1 துண்டு

பச்சை மிளகாய் - 1

எண்ணெய்

தாளிக்க

எண்ணெய் - 1

கடுகு - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

மேலே தூவ

சீவிய தேங்காய்

காரா பூந்தி

கொத்தமல்லி


செய்முறை :

உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வையுங்கள்.

பின் மிக்ஸியில் உளுந்து , அரிசி சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக தயிரை நன்கு அடித்துகொண்டு அதில் தேங்காய், இஞ்சி, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை தயிரில் கலந்துகொள்ளுங்கள்.

அடுத்ததாக தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து தயிரில் கொட்டி கலக்குங்கள்.

வடைக்கு அரைத்த மாவை கடாயில் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அவற்றை ஒரு பவுல் வெதுவெதுப்பான தண்ணீரில் 5 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் தண்ணீரை இறுத்து தயிரில் போடுங்கள்.

தயிரில் மூழ்குமாறு வடைகளை போட்டதும் அதன் மேல் தூவ கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தூவி சாப்பிடுங்கள்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!