நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்களுக்கு உடல் எடையை சீக்கிரமே குறைக்கனுமா? இந்த சூப்பை மறக்காமல் குடிச்சாலே போதும்....

 பொதுவாக இன்றைய காலத்தில் எடையைக் குறைப்பது என்பது சவாலான ஒன்றாக மாறிவிட்டது.

அதிலும் உடல் எடையைக் குறைப்பதற்கு ஒருசில உணவுப் பொருட்களும் உதவியாக இருக்கும். அந்த உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால், எதிர்பார்த்த உடல் எடையைக் குறைக்கும் இலக்கை எளிதில் அடைய முடியும்.

அதில் ஒன்றான பார்லியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் இருக்கின்ற கொழுப்புச் சத்துக்கள், உடலில் படியாமல் தடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.

அந்தவகையில் இதனை எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.    


தேவையான பொருட்கள்

  • கம்பு - 1 கப்
  • பார்லி - 2 கப்
  • வெங்காயம் - 1
  • செலரிக் கீரை - 1
  • தக்காளி - 1
  • முட்டைக் கோஸ் - சிறிதளவு
  • உருளை - 1
  • கேரட் - 1
  • ஓமம் - 1 சிட்டிகை
  • துளசி - 1 சிட்டிகை
  • உப்பு - தே. அளவு
  • மிளகுத் தூள் - தே. அளவு

செய்முறை 


  • வெங்காயத்தை சதுரமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். செலரிக் கீரையை ஆய்ந்து மண் நீக்கி சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  • அத்துடன் கேரட், உருளை, கோஸ் ஆகியவற்றையும் நன்கு கழுவி சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் தக்காளியை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • முதலில் கம்பையும், பார்லியையும் ஊறவைத்துக் கொள்ளவும்.

  • ஒரு வாணலியில் வெங்காயம், செலரி, தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் மூன்று பங்குத் தண்ணீர் சேர்த்து கம்பையும், பார்லியையும் நன்கு களைந்து அடுப்பை சிம்மில் வைத்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

  • ஓரளவு வெந்தவுடன் உப்பு, மிளகுத் தூள், ஓமம், துளசி ஆகியவற்றை எல்லாம் சேர்த்துக் கிண்டி பாத்திரத்தை மூடி வைக்கவும்.

  • அவ்வப்போது மூடியை திறந்து நன்கு கிண்டி விட்டுக் கொள்ளவும். தண்ணீர் வற்றக் கூடாது. இந்நிலையில் சில நிமிடங்களில் பார்லி நன்றாக வெந்துவிடும்.

  • பார்லி வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது சுவையான பார்லி சூப் தயார். உடனே சூடாக அனைவருக்கும் பரிமாறலாம்.   



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!