நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மதிய உணவுக்கு பொருத்தமாக இருக்கும் துவரம் பருப்பு துவையல்... 5 நிமிடத்தில் செய்ய ரெசிபி...

 எளிமையாக செய்யக்கூடிய இந்த துவரம் பருப்பு துவையல் செய்து பாருங்கள்.


மதிய உணவுக்கு பொருத்தமான பொரியல் இருப்பது சிறப்புதான் என்றாலும் அதோடு ஒரு ஸ்பூன் துவையலையும் தொட்டுக்கொண்டால் இன்னும் அந்த உணவு திருப்தியாக இருக்கும். அந்த வகையில் எளிமையாக செய்யக்கூடிய இந்த துவரம் பருப்பு துவையல் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு – 4 tsp

நல்லெண்ணெய் – 2 tsp

பூண்டு பல் – 3

மிளகாய் வற்றல் – 7

சீரகம் – 1/4 tsp

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

துருவிய தேங்காய் – 1 கப்

கறிவேப்பிலை – சிறிதளவு

பெருங்காயத்தூள் – 1/2 tsp

உப்பு – தேவையான அளவு


செய்முறை :

முதலில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் துவரம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தட்டில் போட்டுக்கொள்ளுங்கள்.

பின் பூண்டு சேர்த்து வறுக்கவும். அடுத்ததாக காய்ந்த மிளகாய் சேர்க்க வேண்டும்.

பின் , சீரகம் புளி, துருவிய தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். அதோடு பெருங்காயத்தூளையும் தூவி வதக்க வேண்டும். கறிவேப்பிலையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இறுதியாக அனைத்தும் சூடு தணிந்து ஆறியதும் ஜாரில் அனைத்தையும் கொட்டி போதுமான அளவு உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

சற்று கொரகொரப்பாக அரைப்பது வாயில் பருப்பு தட்டுப்படும்போது நன்றாக இருக்கும்.

அவ்வளவுதான் துவரம் பருப்பு துவையல் தயார்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!