நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கேட்ட பார்த்தாலே பயமா இருக்கே... இது உலகின் கொலைகார தோட்டம்

 பூந்தோட்டம், மலர் தோட்டம், இப்படி பல தோட்டங்களை கேள்விப்பட்டிருப்போம், ஆனால், கொலை கார தோட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா... அது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...


  • இங்கிலாந்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
  • பார்வையாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


சமூக ஊடகங்கள் தகவல் களஞ்சியங்களாக உள்ளன. இவற்றில் நமக்கு கிடைக்கும் தகவல்கள் சில சமயங்களில் வியப்பை தருவதாகவும், சில சமயங்களில் அதிர்ச்சி தருவதாகவும் உள்ளது. தோட்டம் என்றால், நம் மனதில் உடனே தோன்றுவது, அழகான பூக்கள் நிறைந்த, அமைதியான, மனதிற்கு இதமான இடம். ஆனால், இங்கே நாம் காணும் தோட்டம், மனதிற்கு, அமைதிய வழங்கும் தோட்டம் அல்ல. பீதியை உண்டாக்கும் தோட்டம். 

ஆம், இங்கிலாந்தில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டத்தின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  100 க்கும் மேற்பட்ட ஆபத்தான தாவரங்களைக் கொண்ட இந்த தோட்டம் 'உலகின் கொலைகார தோட்டம்' என்பதைக் காட்டுகிறது. இந்த புகைப்படம் ஜூன் 25 அன்று ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தின் நார்தம்பர்லேண்ட் கவுண்டியில் உள்ள அல்ன்விக் என்ற இடத்தில் இந்த விஷத் தோட்டம் உள்ளது. தோட்டத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய இரும்பு கேட் உள்ளது. சந்திரமுகி படத்தில் வரும் வசனம் போல், ‘கேட்ட பார்த்தாலே பயமா இருக்கே’ என்ற வசனம் தான் இதை பார்க்கும் போது ஞாபகம் வருகிறது.  கேட்டின் வாயிலில், தோட்டத்திற்கு வரும் பார்வையாளர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கும் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 600,000 மக்கள் தோட்டத்திற்கு வருகை தருகின்றனர் எனவும், மேலும் வழிகாட்டியுடன் மட்டுமே சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் தோட்டத்தை பராமரிக்கும் அதிகாரிகளின் கூறுகின்றனர். சுற்றுலாப் பயணிகளைத் தவிர, உலகம் முழுவதிலுமிருந்து தாவரவியலாளர்களும் இங்கே வருகை தருகின்றனர். ஆனால் பலத்த எச்சரிக்கைகள் விடுத்துள்ள போதிலும், சிலர் இந்த கொடிய தாவரங்களின் செடிகளை, பூக்களை முகர்ந்து பார்த்து, அதன் நச்சுப் புகையை சுவாசித்து மயக்கமடைகின்றனர் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

 இந்த தோட்டம் 2005 ஆம் ஆண்டில் நார்தம்பர்லேண்டின் டச்சஸ் ஜேன் பெர்சி என்பரால் கற்பனை செய்யப்பட்டது என கூறப்படுகிறது. 


ALSO READ : ஒரு லிட்டர் தேள் விஷம் 80 கோடி ரூபாய் - எங்கே?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!