நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

திடீரென பிளாஸ்டிக் போல் மாறிய பெண்ணின் முகம் - பிறகு பாம்பு தோல் போல உரிந்த அதிர்ச்சி...

 30 நிமிடம் வெயிலில் உறங்கிய பிரித்தானியா பெண்ணின் நெற்றியில் தோல் பிளாஸ்டிக் போன்று மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணரான சிரின் முராத் பல்கேரியாவில் விடுமுறையில் இருந்தபோது, ​​21 டிகிரி செல்சியஸ் சூரிய ஒளியில் சன்ஸ்கிரீன் இல்லாமல் தூங்கியுள்ளார்.

அவர் தூங்கி எழுந்த போது அவரது சிறிது காயங்களுடன் சிவந்து காணப்பட்டுள்ளது.

ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஓய்வெடுத்துள்ளார். அடுத்த நாள் அவரது தோல் மிகவும் இறுக்கமாக மாறி புருவங்களைச் சுருக்கும்போது அது பிளாஸ்டிக் போலத் தெரிந்துள்ளது.

பிறகு தோல் பயங்கரமாக காயமானது பற்றி தனது குடும்பத்தினருடன் கலந்துரையாடிய பின்னர், மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தார். ஏனெனில் அது இன்னும் மோசமாகிவிடும் என்று அவர் நினைக்கவில்லை.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல முகம் முழுவதும் பாம்பு தோல் போல உரிக்கத் தொடங்கியுள்ளது.


அடுத்த நாள் வலித்துள்ளது. ஆனால் அது உரிக்கத் தொடங்கியபோது கொஞ்சம் நிவாரணம் கிடைத்துள்ளது. 

சன்ஸ்கிரீனின் முக்கியத்துவம்

வலிமிகுந்த இந்த அனுபவத்தைத் தொடர்ந்து, முராத் இப்போது சன்ஸ்கிரீனின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதில் ஆர்வமாக உள்ளார்.

 "நீங்கள் நன்றாக இருப்பீர்கள் அல்லது உங்கள் சருமம் எரியாமல் இருக்கும் என்று நீங்கள் எவ்வளவு நினைத்தாலும், எப்போதும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்!" என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

இந்தச் சம்பவம் கடந்த மாதம் நடந்தது, இப்போது முராத்தின் கன்னங்களில் சில புள்ளிகள் மட்டும் நிறமாற்றத்துடன் காணப்படுகிறது. 

இருப்பினும், இது அவருக்கு எதிர்பாராதவிதமாக மிகவும் மோசமாக இருந்திருக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

கடுமையான வெயிலால் மெலனோமாவின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இது மிகவும் ஆபத்தான தோல் புற்றுநோயாகவும் மாறும் என்று கூறப்படுகிறது.  


ALSO READ : ஓட ஓட துரத்திய உலகின் மிகக் கொடிய பறவை.. உயிர் தப்பிய திக் திக் வீடியோ!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!